• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 22 ஏப்ரல், 2011

    அன்புக்கு வரையறை தான் ஏது





     மாரிக் குளிரில் வாடித் தத்தம் இல்லங்களில் பதுங்கியிருந்த மக்களெல்லாம்ரூபவ் புற்றீசல் போல் கோடைவெயிலில் குதூகலமாய் அரைகுறை ஆடையில் வீதியெங்கும் விழாக்கோலம்.. விரல்கள் விறைக்கக் காற்சட்டைப் பையினுள் பதுக்கிய கைகளுடன் ஒடுங்கிச் சென்றவர்கள் உதறிய கைகளுடன் நிமிர்ந்த நடையுடன் ஹாயான பரபரப்பு. ஐஸ்கடையில் நிரம்பி வழிந்த மக்களுள் ஒருவளாய் அழகாகத் தன் வளர்ப்புத் தாயுடன் அமர்ந்திருந்தாள் லிசி.தலைமயிர் கோதிவிடப்பட்டு அழகான ரிபனால் கட்டப்பட்டிருந்தது. சுட்டெரிக்கும் வெயில் கண்ணுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது சூரியக் கதிரைத் தணிக்கும் கண்ணாடி அணிந்திருந்தாள். முத்துக்கள் வேலைப்பாடமைந்த போர்வை அவள் அழகை மேம்படுத்தியிருந்தது. அவள் அழகில் கவரப்பட்டவளாய் அவளருகே சென்று வளர்ப்புத் தாயிடம் ஹாய் சொல்லியபடி ஒரு இருக்கையில் அமருகின்றேன். அவளது தலையைத் தடவி விட்டபடி நாடியைப் பிடித்தேன். கருணைக் கண்களால் என்னை ஒரு தடவை பார்த்து விட்டுத் திரும்பி விட்டாள். பார்வையின் கனிவு வளர்ப்பின் தன்மையைப் பறைசாற்றியது. லிசி கை கொடுக்கவில்லையா எனத்தாயார் கேட்டவுடன் தனது கையை என்னிடம் நீட்டினாள். பதிலுக்கு நானும் கைகொடுத்த வண்ணம் தாயாரிடம் கேட்டேன். எத்தனை வருடங்களாக உங்கள் அணைப்பில் இவள்ரூபவ் என்றேன். 5 வருடங்களாக என் வாழ்க்கையே இவள் தான். இவள் என் வார்த்தையை மீறியதே இல்லை. என் காலடியே தஞ்சம் என்றிருப்பாள். அவளுக்கு நான் எனக்கு அவளென்றே வாழ்கின்றோம். நானும் நோய் கண்டு விட்டேன். எனக்குப் பின் யார்தான் இவளைக் கவனிப்பார்களோ? எனது சொத்துக்கள் எல்லாம் இவளுக்காய்ப் பதியப்பட்டு விட்டது. நானில்லாவிடினும் என் சொத்துக்காய் இவளைப் பராமரிக்கப் போட்டா போட்டி போட்டுக் கொண்டு வருவார்கள். அவள் வாழும் வரை வசதியாக வாழ வேண்டும். என்று கூறி ஐஸை அவளிடம் நீட்டினாள். லிசியும் லாவகமாக ஐஸைச் சாப்பிட்டாள். அவர்களிடம் இருந்து விடைபெற நான் எத்தனித்த போது அந்தச் செல்வச் சீமாட்டியும் auf wieder sehen (Bye)சொல்லும் படி அவளைப் பணித்தாள். அவளும் ''வவ்வ் வவ்' என்று அழகான தன் பாஷையில நளினமாக விடைதந்தாள்.
                               செய்கின்ற செயலுக்கு முக்கியத்துவம் தாராமல் செயலின் பின்னோக்கியுள்ள மனநிலையின் முக்கியத்துவத்தில் மனம் கொண்டேன். மண்ணுக்காய் வணக்க ஸ்தலங்களிலும் வீதிகளிலும் உயிர்கள் சங்காரம் செய்யப்படும் நிலையை எண்ணி மனம் வருந்தரூபவ் மூக்கு வடிந்தபடி ஆடையின்றி வாடையில் மெலிந்து, பால் வற்றிய தனங்களுடன் சோகம் சுமந்து வறுமையால் வெம்புகின்ற தாயைப் பசியுடன் நோக்கும் பற்பல சோமாலிய நாட்டுப் பாலகர்களை நோக்கிக் கனத்த மனதுடன் என் கால்கள் வீடு நோக்கி நடை பயின்றன. அன்பு செலுத்த ஒரு வரையறை ஏது. வர்க்க பேதம் தான் ஏது. இதயம் சிறிது. அதன் கொள்ளளவு பெரிது. அனைத்து உயிர்கள் ஏங்குவதும் அந்த அன்புக்காய்த்தானே.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...