• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 15 மே, 2016

    நூல் அறிமுகவிழா



    இனிய நந்தவனம் பதிப்பகமும் தடாகம் இலக்கிய அமைப்பும் முகவரி அறவாரியம் அமைப்பும் ஏற்பாடு செய்த பன்னாட்டு எழுத்தாளர்கள் மாநாட்டில் எனது முக்கோண முக்குளிப்பு என்னும் கட்டுரை நூல் 21/5/2016 மலேசியத் தலை நகர் கோலாலம்பூரில் அறிமுகம் செய்யப்படுகிறது. 
                      
                              இந்நூல் கோலாலம்பூரில் அறிமுகம் செய்வதற்கான முழு ஒத்துழைப்பையும் ரூபன் அவர்கள் வழங்கியிருக்கின்றார். கவிஞர்களை பாராட்டுவதற்காக போட்டிகள் வைப்பதுடன் பதிவுகளுக்கு உடனடியாக பின்னூட்டம் இடுவதும் எழுத்தாளர்களைப் பாராட்டுவதும் இவரது தமிழ் மீது கொண்ட ஆர்வத்திற்கு அடையாளமாகப்படுகின்றது. தடாக இலக்கிய அமைப்பு கலைமகள் ஹிதாய அவர்களும் முழு ஆர்வத்தையும் தந்துள்ளார். இவற்றுக்கெல்லாம் மேலாக இத்தொடர்புகளுக்கு மூல காரணகர்த்தா ரமணி சார் தான். இந்நூலுக்கான பின்னட்டைக் கவிதைகூட அவரே தந்துள்ளார்.

                                          எழுத்தை நேசிப்பவர்கள் இதய சுத்தியுடன் இருக்கும் வரை தமிழ் வாழும். தொடர்புகளும் இணைவுகளும் தாமாக வந்து சேர்வதில்லை. நற் தொடர்புகள் நன்மையிலேயே சென்றடையும். இவ்விழா நிச்சயமாக நன்றாக நடைபெறும் என்று நான் நம்புகின்றேன். இந்தியாவில் ரமணி சார் ஒத்துழப்புடன் வலையுலக சந்திப்பு நிகழ்விலும் இந்நூல் அறிமுகமாவதற்கு  ஆவன செய்வதாகவுள்ளார். 

    ஞாயிறு, 8 மே, 2016

    அன்னையர் தினம் 2016




    புனிதமான உறவுக்குக் காரணமானவர்களுக்கும்
    உன்னத உலகத்தை உருவாக்கித் தருபவர்களுக்கும் 
    கண்ணுக்குள் உறவு வைத்து
    காலமெல்லாம் தம் பிள்ளைகளைக் காப்பவர்களுக்கும்
    அன்புக்கும் அரவணைப்புக்கும் இலக்கணமானவர்களுக்கும்  
    இன்றைய நாள் உரித்தானது 

    அனைத்து அன்னையர்க்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். 

    வியாழன், 5 மே, 2016

    நீர்கொழும்பு விஜயரெத்தினம் இந்து மத்திய கல்லூரி பழைய மாணவர்களின் நயனங்களின் தேடலும் முக்கோண முக்குளிப்பு நூல் அறிமுக விழாவும்

                   நீர்கொழும்பு விஜயரெத்தினம் இந்து மத்திய கல்லூரி பழைய                                                       மாணவர்களின்  நயனங்களின் தேடலும் 
                                                     முக்கோண முக்குளிப்பு நூல் 
                                                             அறிமுக விழாவும்
             




    30.04.2016 அன்று நீர்கொழும்பு விஜயரெத்தினம் இந்து மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் இங்கிலாந்து Harrow  என்னும் நகரத்திலே நயனங்களின் தேடல் 2016 என்னும் நிகழ்வினை மிகச் சிறப்பாக நடத்தியது. இந்நிகழ்விலே முன்னாள் நீர்கொழும்பு விஜயரெத்தினம் இந்து மத்திய கல்லூரி ஆசிரியராகிய என்னுடைய முக்கோணமுக்குளிப்பு என்னும் நூலும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் இளைப்பாறிய முன்னாள் அதிபர் திருமதி. அசலாம்பிகை கல்யாண சுந்தரம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். 


    நான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டேன். பழைய மாணவனும் நூலகவியலாளருமான திரு. செல்வராஜா நடராஜா அவர்களும் இந்நிகழ்வினில் கலந்து கொண்டது இந்நிகழ்ச்சிக்கு மேலும் பெருமை சேர்த்தது.

                இந்நிகழ்விலே பழைய மாணவர்களின் பிள்ளைகளின் நடனங்கள், வில்லுப்பாட்டு, பாடல்கள் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. வரவேற்புரையினை திருமதி. ராகினி அருண்குலசூரிய அவர்களும் நன்றியுரையினை திருமதி. சுபா ஜூலியன் அவர்களும் வழங்கினர். தலைவர் வர்மன் மங்களராஜா அவர்கள் தனது தலைமையுரையிலே நீர்கொழும்பு விஜயரெத்தினம் இந்து மத்திய கல்லூரியின் வளர்ச்சிக்கு சென்ற வருடம் கணனிகள் வழங்கியமை பற்றியும் இனி வரும் காலங்களில் இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு தங்களின் மேலான ஒத்துழைப்பு இருக்கும் என்று உறுதியளித்தார். பிரதம விருந்தினர் தனது உரையில் பழைய மாணவர்களின் ஊக்கத்தினையும் ஒத்துழைப்பினையும் பாராட்டிப் பேசினார். நான் மாணவர்களைக் கற்பிக்கும் போது ஏற்பட்ட அநுபவங்களையும் இச்சங்கத்தினை வளப்படுத்துவதற்காக மாணவர்களின் ஒத்துழைப்புத் தேவை என்பதனையும் வலியுறுத்திப் உரையாற்றினேன். திரு. செல்வராஜா நடராஜா அவர்கள் இப்பாடசாலை ஆரம்பகால கட்டங்களை நினைவுறுத்திப் பேசினார். 
           முக்கோணமுக்குளிப்பு என்ற நூலினை நூலகவியலாளர் செல்வராஜா நடராஜா அவர்கள்  விமர்சனம் செய்தார். வாசிப்புப் பழக்கம் அருகி வரும் இன்றைய காலகட்டத்தில் இந்நூல் வாசிப்பின் மேன்மையை எடுத்துக்காட்டுவதாகவும்  கல்வித்திட்டத்துடன் இணைக்கப்படக்கூடிய தகுதியை உடையதாகக் காணப்படுவதாக எடுத்துரைத்தார். பாடசாலை முன்னாள் அதிபர் திருமதி அசலாம்பிகை கல்யாணசுந்தரம் அவர்கள் முதல் பிரதியை நூலாசிரியரிடமிருந்து பெற்றுக் கொண்டார். நான் எனது ஏற்புரையில் இந்நூல் நீர்கொழும்பு விஜயரெத்தினம் இந்து மத்திய கல்லூரியிலே முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள், மத்தியில் அறிமுகம் செய்யப்படுவது இரட்டிப்பு மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிப்பதாகக் கூறினேன். மூன்று பரிமாணங்களை எடுத்துள்ள இந்த நூலின் தோற்றம் உருவான தன்மை பற்றிய சகல விடயங்களையும் நன்றியுணர்வினையும் எடுத்துரைத்தேன். ஒருமேடை இரு நிகழ்வாக நயனங்களின் தேடல் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
    எனது இந்நூல் பன்னாட்டு எழுத்தாளர் மாநாட்டில் 22.05 மலேசியாவிலும், 25.05 சிங்கப்பூரிலும் அறிமுகம் செய்யப்படுவதாக உள்ளது. 

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...