Face Book Kavithaikal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Face Book Kavithaikal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 17 மே, 2014
வெள்ளி, 20 செப்டம்பர், 2013
வெள்ளி, 19 ஏப்ரல், 2013
ஞாயிறு, 19 ஜூன், 2011
செவ்வாய், 19 ஏப்ரல், 2011
07
சிங்கத்தின் அருகே சிங்காரி – அவள்
சிந்தையில் என்ன சிக்கிக் கிடக்கிறதோ
சிங்கத்தை ஆட்கொண்ட மங்கைக்கு – மனச்
பங்கத்தை பறித்தெடுக்கப் பக்குவம் இல்லையோ
அடங்கிக் கிடக்கிறது ஆவேசம்
மயங்கிக் கிடக்கிறது மங்கையின் மையல்
பூங்காவனத்துக்குள் ஒரு பூகம்பம்
பொங்கிப் பின் மங்கிப் போனதுவோ
வார்த்தைகள் இங்கில்லை இங்கு
வழக்காடு முடிந்ததோ வாழ்வதற்கு - இந்த
வனத்துக்குள் மங்கையின் இராச்சியம்
மனத்துக்குள் ஆயிரம் வார்த்தைகள்
உயிரினங்கள் அனைத்துக்கும் உண்டு
உள்ளங்களுக்குள் ஆயிரம் கற்பனைகள்
அவரவர் வாழ்க்கைக்குள் தேடிப்பார்த்தால்
06 சிந்தித்தால் சிரிப்பு வருகிறது.
வியப்பும் வாய்ப்பும்

வியந்து வாய்பிழந்திங்கு வீணே வாழ்ந்திடாது
வியப்பான விடயங்கள், விரும்பிச் செய்து
வியத்தகு சாதனை வின்னர்களாய் வாழ்ந்து
வாழ்வின் வாய்ப்பைப் வளப்படுத்தல் சிறப்பே – பலர்
வியக்க வாழ்தலும் சிறப்பே
பெற்றோரைத் தேடி
04
நாவடக்கம்
03
இரவும்நிலவும்
02![]() |
அழகாய்த் தோன்றும் நிலவே – உன்னில்
நிலையாய் வாழ யாரால் முடியும்.
அண்மை வந்தால் அற்புதம் இல்லை
சேய்மையில் வண்ணம் சிறப்பாய்த் தெரியும்
இரவிலுன் முகம் இதமாய்த் தெரியும்
பகலிலுன் முகம் பார்ப்பவர் யாரோ!
கருமையின்றிக் கவரவொண்ணா கவினழகு நிலவே – உன்போல்
அகவழகின்றிப் புறவழகு புனைந்திடும் மனிதர்
அகவிருள் கொள் மாந்தர்முன் அழகாய்த் தெரிவர்
நிறையறிவின்றி குறையறிவு கொள் அறிஞர் குழாம்
குறையறி வறிஞர்முன் நிறைவாய்த் தெரிவர்
இரவும்நிலவும்
01
இரவும்நிலவும் இதயம் முழுதும்
இதமாய் இனித்த இளமைக் காலம்
கறியும் சோறும் கலந்தே ஊட்டி
இரவும்நிலவும் துணையாய்க் காட்டி
களித்தே மகிழ்ந்த மழலைக்காலம்
இரவும்நிலவும் துணையாய் நடக்க
இதயப்பாரம் இனிதாய் விலக
கரங்கள் இணைத்தே கதைகள் பேசி
கால் போக்கில் நடைக்கும் முதுமைக்காலம்
வாழும் காலம் கழிந்துவிடும்
முதுமைக்காலம் முடிந்துவிடும்
நாம் மறைந்தபோதும்
இளமைமுதுமை எதுவுமின்றி
நிலையாய் நிற்கும் இரவும்நிலவும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
எழுத்துகளுக்கும் ஆடை கட்ட வேண்டும்
எழுத்துகளுக்கும் ஆடை கட்ட வேண்டும் இலக்கியம் என்பது ஒரு சமூகம் வாழுகின்ற காலத்தைத் தெட்டத் தெளிவாக வேறு சமூகத்துக்கு , அடுத்த கால கட...

-
“ அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை அணைந்து கொள்! உன்னைச் சங்கமமாக்கு மானிட சமுத்திரம் நானென்ற...
-
திரு! திருந்தாத ஜென்மம் என்பது பல சமூகநலவாதிகள் முடிவு. ஆனால், திருவே என் பாசவிளக்கு பண்புள்ள மகன். என் காலடி மண்ணில் ப...
-
என் மகளின் பதினெட்டாவது வயது பிறந்ததின விழாவிலே என்னால் வாசிக்கப்பட்ட கவிதை. வானுயர் என் விளக்கு நீ என் வயிற்றி...