• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

    உன்னையே நீ அறிவாய்




    வாகனத்திறப்பை மறந்ததனால் வீட்டினுள் அவசரத்தில் ஓடிவரும் கணவன், வீட்டினுள் அழகுக்காய் வைக்கப்பட்டிருந்த பூச்சாடியைத் தட்டி விழுத்தி விடுகின்றார். அது உடைந்து சிதறுகின்றது. '' ஏய்' நடைபாதையில் தான் உன் அலங்காரங்களோ? எங்கே எதை வைப்பதென்று தெரியாதா? எருமை. என்று மனைவியைத் திட்டுகின்றார். தொடர்ந்த மனைவியும் '' நீங்கள் எப்போது நிலத்தைப் பார்த்து நடந்திருக்கி;ன்றீர்கள். நிதானத்தை மூளையில் வைத்தால் தானே' என்று கத்தத் தொடங்குகின்றாள். இவ்விடயத்தையே ''ஐயோ  அவசரத்தில் வரும் வேகத்தில் இதைத் தட்டிவிட்டேனே.' ஏன்று கணவனும். ''நடைபாதையில் பூச்சட்டியை வைத்தது எனது பிழை தான்' என்று மனைவியும் அவரவர் தத்தமது பிழைகளைத் தாமே உணாந்தது எந்த வீட்டில் எப்போது நடந்திருக்கின்றது?  வாழ்க்கைப் பயணத்தில் பழிபாவம் படராது பண்புள்ளவராய் ஒருவர் வாழ தன்னைத் தானே பரிசீலனை செய்தல் அவசியம்.
                               அடுத்தவரில் குற்றம் கூறியே பழக்கப்பட்ட நாம், எம்மைப்பற்றி ஒருகணம் எண்ணிப்பார்க்கின்றோமா? இல்லை அடுத்தவர் நிலையில் நாம் நின்று அவரைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கின்றோமா? தன் மனைவி சிலம்பில் உள்ளது முத்துப் பரல்களா? மாணிக்கப் பரல்களா? என்று பரிசீலனை செய்து பார்க்காது தீர்ப்பு வழங்கிய பாண்டிய மன்னன் மதுரை எரியக் காரணமாகினான். துரியோதனன் குணமறியாது நட்புப் பூண்ட கர்ணன், கண்ணன் சூழ்ச்சிக்கு ஆளாகினான். அனைத்திற்கும் நாம் தானே காரணம். முதலில் நாம் பரிசீலனை செய்யவேண்டியது எம்மை.
                    ''சுட்டும் விரலால் எதிரியைக் காட்டிக் குற்றம் கூறுகையில்
                     மற்றும் மூன்று விரல்கள் உந்தன் மார்பினைக் காட்டுதடா' இப்பாடல் வரிகளில் சைகை மூலம் நாமே எம்மை அறியாது நமது குற்றத்தைப் பரிசீலனை செய்யப் பணிக்கப்படுகின்றோம். 
                               வளமாக வாழ்தற்குரிய கல்வியைக் கற்பித்து, வாழ்க்கைப்பாடம் போதிக்கும் அறநூல்கள் தன் மகளுக்குக் கற்பிக்காது விட்ட தாயார், புது வாழ்க்கை தொடங்கி சிறப்பாக வாழத் தனது மகளை மருமகனுடன் அனுப்பி விட்டு நிம்மதியாக வாழ நினைத்த அடுத்த வருடமே வாழ்க்கைத்துணை, என் வாழ்வுக்குப் பொருத்தம் இல்லாதவன் என அவனை உதறித் தள்ளி விட்டு வரும் மகளை நினைத்து வேதனைப்படுவதில் என்ன பலன் இருக்கின்றது. கணனியூடாகக் காதல் வலையில் அகப்பட்டுப் பின் கதிகலங்கும்  பெண்ணானவள், காயப்படுத்தியவனை கரிந்து கொட்டுவது முறையோ? தான் விட்ட பிழையை நினைத்து தன்னைத் திருத்துக் கொள்வது தான் தருமம். 
                               அடுத்தவர் தவறைப் பற்றி ஆழமாக விமர்சனம் செய்யும் நாம்  முதலில் அவராக மாறுவோமா? அவர் மனநிலையில் நின்று தவறைப் பரிசீலனை செய்வோமா? எம்மைப் பற்றி ஒரு நிமிடம் சிந்திப்போமா? வாழ்க்கைப் பாதையில் பண்புள்ளவராய் தொடர்வோமா?

    வியாழன், 24 பிப்ரவரி, 2011

    இனியும் வேண்டாம் இன்னொரு துரோகம்


                           இதயத்தைப் பிழிந்தெடுத்த கண்ணீர்த்துளிகளைத் தேக்கி வைத்த தாங்கியாய் விழிகள். அவை நாளும்நாளும் பொழுதுகளும் வடித்த வண்ணம் தொடரும் கதையாய்த் தொடர்ந்து கொண்டிருந்தது மீரா வாழ்வு. 'என்னிடம் ஏன் இவர் பற்றி மறைத்தார்கள். உண்மைக்கதை கூறியிருந்திருந்தால் இங்கு இவருக்குத் தாரமாய் வந்து தாரைதாரையாய் வார்க்க கண்ணீரை மட்டும் சேமித்து வைத்திருப்பேனா? சொர்க்கம் என் பிறந்தகம். அதைவிட்டு இந்த நரக வாழ்க்கையில் விழுந்திருப்பேனா?''துடிக்கும் அவள் இதயம் நாளும் துடிப்புடன் கேட்கும் கேள்விகள் இவை. சுதன் சுமப்பதெல்லாம் சந்தேகம். மட்டுமே. ஜேர்மனி மண்ணில் காலடி வைத்தது அவனுக்கு யோகம். உடல் வளைத்துத் தொழில் செய்தறியாத தேகமானது உரம் கண்டது அதிகம். சும்மா இருக்கும் உடல் தலைமையகம் தொழில் இல்லாதவர்க்கு எப்படித் தொழிற்படும். அடுத்தவர் வாழ்வில் குறை காண்பது மட்டுமன்றி உதவியவர் மனதுக்கு ரணங்களையும் தந்துவிடும். இதனாலேயே வள்ளுவர் 
            ' உதவி வரைத்தன்று உதவி உதவி
             செய்யப்பட்டார் சால்பின் வரைத்து" என்று சொல்லி வைத்தாரோ.! சூழல் சுற்றத்துடன் சுகமாய் மகிழ்ச்சியாய் வாழவேண்டும் என்பது மீரா மனம் சொல்லும் பாடம். சுற்றங்களை வெறுப்பது சுதன் மனம் சொல்லும் பாடம். வேறுபட்ட மனப்போக்குள்ள இருவரை இணைத்துவாழவைக்க சுற்றத்தார் நினைப்பது எந்த வகையில் நியாயம். தாயுடன் தாயகத்தில் வாழ்ந்த மீராவுக்கு உறவினர் விசாரிப்பில் தேர்ந்தெடுத்த கணவனே சுதன். அவர்களை நம்பி இ;ப்போது இவள் வாழ்க்கையிலே நம்பிக்கையைத் தொலைத்தாள். குடும்பப் பாரம் அனைத்தும் சுமந்தாள். 24 மணிநேரமும் ஆண்மகனொருவன் வீட்டில் அடைந்து கிடந்தால் அந்தப் பெண்ணுக்கு எங்கே சுதந்திரம். வார்த்தை ஆணிகள் ஏறிய மனம் சீழ் பிடிப்பதுதானே நிஐம். மீரா எச்சரிக்கின்றாள். 'புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களே! உங்கள் முகமூடியைக் கழட்டியே வரன் தேடுங்கள். அப்பாவிப்பெண்களை உண்மையை மறைத்து பொய்கூறி அவர்களை வாழ்க்கைக்காய் வரவழைக்காதீர்கள். ஊறவைத்த சோற்றுநீரை உண்டு வாழ்ந்தாலும் சோம்பேறியுடன் வாழ்வதை எந்தப் பெண்ணும் விரும்பாள். Nஐர்மன் பூமியே! நீ சோம்பேறிகளுக்குச் சிறப்பாய் மகுடம் சூட்டுகின்றாய். பிள்ளை கொடுக்கும் இயந்திரங்களுக்குப் பணத்தைத் தாரை வார்க்கின்றாய். நாளும் உழைக்கும் உழைப்பாளிகளைக் கறந்து சோம்பேறிகளின் சுகத்திற்குத் துணைப்போகின்றாய். அரசாங்கப் பணத்தில் ஆடம்பரமாய் ஆயிரம் பொய் மூட்டைகள் கட்டி அவிழ்ப்பவர்களுக்கு அள்ளிக் கொடுக்கின்றாய். தாய்நாட்டுப் பிரச்சினையைக் கூறிக்கூறி வாழும்நாட்டில் சுகம்தேடுவோர்க்களைச் சோம்பேறி ஆக்குகின்றாய். இப்படிப்பட்டவர்கள் இலங்கை மண்ணில் இருந்தால் உழைத்தே தீர வேண்டும். இல்லையேல் துண்டுவிரித்துக் கோயில் திண்ணையில் குந்தவேண்டும். அங்கே சும்மா இருக்க சோபா இராது. உண்டு கழிக்க உணவு இராது. படுத்துறங்கப் பஞ்சணை இராது. அடுத்தவரை வம்புக்கிழுக்க இலவசத் தொலைபேசி இணைப்பு இராது. உழைத்தே தீர வேண்டும். தாயகப் பெண்களே! வாழ்க்கைக்காய்ப் புலம்பெயர எண்ணியுள்ளீர்களா? அவதானம் அவதானம் தேவை. தீரவிசாரித்து வாழ்க்கைக்களம் இறங்குங்கள். வாழ்க்கை என்பது வாழ்வதற்கே. ஒரு ஆண்மகனைக் கட்டிக்கொண்டு மாய்வதற்கல்ல. என்னோடு போகட்டும் நம்பிக்கைத் துரோகம். இனியும் வேண்டாம் இன்னொரு துரோகம்.


    இந்த வீடியோ கிளிப்பைப் பாருங்கள்.

    http://www.youtube.com/watch?v=J77Mlhw_D1A&feature=player_embedded

    இனியும் வேண்டாம் இன்னொரு துரோகம்



    இனியும் வேண்டாம் இன்னொரு துரோகம் 

    இதயத்தைப் பிழிந்தெடுத்த கண்ணீர்த்துளிகளைத் தேக்கி வைத்த தாங்கியாய் விழிகள். அவை நாளும்நாளும் பொழுதுகளும் வடித்த வண்ணம் தொடரும் கதையாய்த் தொடர்ந்து கொண்டிருந்தது மீரா வாழ்வு. 'என்னிடம் ஏன் இவர் பற்றி மறைத்தார்கள். உண்மைக்கதை கூறியிருந்திருந்தால், இங்கு இவருக்குத் தாரமாய் வந்து தாரைதாரையாய் வார்க்க கண்ணீரை மட்டும் சேமித்து வைத்திருப்பேனா? சொர்க்கம் என் பிறந்தகம். அதைவிட்டு இந்த நரக வாழ்க்கையில் விழுந்திருப்பேனா?''துடிக்கும் அவள் இதயம் நாளும் துடிப்புடன் கேட்கும் கேள்விகள் இவை. சுதன் சுமப்பதெல்லாம் சந்தேகம். மட்டுமே. ஜேர்மனி மண்ணில் காலடி வைத்தது, அவனுக்கு யோகம். உடல் வளைத்துத் தொழில் செய்தறியாத தேகமானது உரம் கண்டது அதிகம். சும்மா இருக்கும் உடல் தலைமையகம் தொழில் இல்லாதவர்க்கு எப்படித் தொழிற்படும். அடுத்தவர் வாழ்வில் குறை காண்பது மட்டுமன்றி உதவியவர் மனதுக்கு ரணங்களையும் தந்துவிடும். இதனாலேயே வள்ளுவர் 
              ' உதவி வரைத்தன்று உதவி உதவி
               செய்யப்பட்டார் சால்பின் வரைத்து'' என்று சொல்லி வைத்தாரோ.! சூழல் சுற்றத்துடன் சுகமாய் மகிழ்ச்சியாய் வாழவேண்டும் என்பது மீரா மனம் சொல்லும் பாடம். சுற்றங்களை வெறுப்பது சுதன் மனம் சொல்லும் பாடம். வேறுபட்ட மனப்போக்குள்ள இருவரை இணைத்துவாழவைக்க சுற்றத்தார் நினைப்பது எந்த வகையில் நியாயம். தாயுடன் தாயகத்தில் வாழ்ந்த மீராவுக்கு உறவினர் விசாரிப்பில் தேர்ந்தெடுத்த கணவனே சுதன். அவர்களை நம்பி இ;ப்போது இவள் வாழ்க்கையிலே நம்பிக்கையைத் தொலைத்தாள். குடும்பப் பாரம் அனைத்தும் சுமந்தாள். 24 மணிநேரமும் ஆண்மகனொருவன் வீட்டில் அடைந்து கிடந்தால், அந்தப் பெண்ணுக்கு எங்கே சுதந்திரம். வார்த்தை ஆணிகள் ஏறிய மனம் சீழ் பிடிப்பதுதானே நிஐம். மீரா  எச்சரிக்கின்றாள். 'புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களே! உங்கள் முகமூடியைக் கழட்டியே வரன் தேடுங்கள். அப்பாவிப்பெண்களை உண்மையை மறைத்து பொய்கூறி அவர்களை வாழ்க்கைக்காய் வரவழைக்காதீர்கள். ஊறவைத்த சோற்றுநீரை உண்டு வாழ்ந்தாலும் சோம்பேறியுடன் வாழ்வதை எந்தப் பெண்ணும் விரும்பாள். Nஐர்மன் பூமியே! நீ சோம்பேறிகளுக்குச் சிறப்பாய் மகுடம் சூட்டுகின்றாய். பிள்ளை கொடுக்கும்  இயந்திரங்களுக்குப் பணத்தைத் தாரை வார்க்கின்றாய். நாளும் உழைக்கும் உழைப்பாளிகளைக் கறந்து சோம்பேறிகளின் சுகத்திற்குத் துணைப்போகின்றாய். அரசாங்கப் பணத்தில் ஆடம்பரமாய், ஆயிரம் பொய் மூட்டைகள் கட்டி அவிழ்ப்பவர்களுக்கு அள்ளிக் கொடுக்கின்றாய். தாய்நாட்டுப் பிரச்சினையைக் கூறிக்கூறி வாழும்நாட்டில் சுகம்தேடுவோர்க்களைச் சோம்பேறி ஆக்குகின்றாய். இப்படிப்பட்டவர்கள் இலங்கை மண்ணில் இருந்தால், உழைத்தே தீர வேண்டும். இல்லையேல், துண்டுவிரித்துக் கோயில் திண்ணையில் குந்தவேண்டும். அங்கே சும்மா இருக்க சோபா இராது. உண்டு கழிக்க உணவு  இராது. படுத்துறங்கப் பஞ்சணை இராது. அடுத்தவரை வம்புக்கிழுக்க இலவசத் தொலைபேசி இணைப்பு இராது. உழைத்தே தீர வேண்டும். தாயகப் பெண்களே! வாழ்க்கைக்காய்ப் புலம்பெயர எண்ணியுள்ளீர்களா? அவதானம், அவதானம் தேவை. தீரவிசாரித்து வாழ்க்கைக்களம் இறங்குங்கள். வாழ்க்கை என்பது வாழ்வதற்கே. ஒரு ஆண்மகனைக் கட்டிக்கொண்டு மாய்வதற்கல்ல. என்னோடு போகட்டும், நம்பிக்கைத் துரோகம். இனியும் வேண்டாம் இன்னொரு துரோகம்.

    புதன், 23 பிப்ரவரி, 2011

    அநாமதேய தொலைபேசி


    குண்டுமல்லிகைச்சரம் கொண்டுவந்த வாசனை அவள் அருகே கொண்டு சென்றது என் மனதை. திருவிழாக் கூட்டத்தின் நடுவே அழகுத் தேராய் அவள் அசைந்து வரக் கண்டு அசையாது நின்ற என் விழிகள், நீண்டு வளர்ந்த கருங்குழலின் எழிலில் மொய்த்துக் கொண்டன. ஐரோப்பியமண்ணில் இப்படி ஒரு குடும்பக் குத்துவிளக்காய் பிரகாசம் வீசும் உடல் வனப்பில் ஒரு பெண்ணா! ஆச்சரியப்பட்டு நின்ற என்னைத் தட்டித்தந்தாள், என் சிநேகிதி. '' அதுதான், அதுதான் அந்தா போகிறாளே அந்தப் பெட்டைதான் உன்ர ளவரனநவெ க்குக் கல்யாணம் பேசி குழம்பிப் போன பெட்டை. திடுக்கிட்டேன். ஆண்டாண்டாய் நான் சேகரித்து வைத்த ஆசிரியத்தரத்தின் அரைப்பகுதியை இழந்த அவமானம் ஏற்பட்டது. பக்தி, அடக்கம், பண்பான பேச்சு இவை அனைத்தும் நான் கண்ணால் கண்ட காட்சிகள். கடவுளிடம் ஒரு விடுதலை வாங்கி விரைந்தேன் வீடு நோக்கி. பாடும் காட்டுக் குயிலின் வாயை அடைக்க முடியுமா? சமுதாய சீர்கேட்டை படம் பிடிக்கும் என் பேனாவைத் தடுக்கமுடியுமா? ஏன்? எப்படி? மீண்டும் வண்டு துளைக்கத் தொடங்கியது சிந்தனைப் பெட்டகத்தை.  
             'எங்கே அவன்? என் அருமை மாணவன்?'' வினவினேன், அவன் தோழனை."விடுமுறைக்காய் நாடுவேறு பறந்து விட்டான்" 'திருமணத்தடைக்கு காரணம்தான் யாதோ? மீண்டும்துளைத்து எடுத்தது எனது வினா? விடையும் தேடித்தந்தது. காதலில் விழுந்திருந்தால், கடைசிவரைப் போரிட்டிருப்பான். இவள் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டாள். பெற்றோருக்குப் பிடிக்கவில்லை. அதனால் பெரிதாய்க் கவலை அவன் கொள்ளவில்லை. அநாமதேயத் தொலைபேசி ஒன்று அவன் வாழ்வில் அக்கறை கொள்வதாய் வந்திருந்தது. யாரோ ஒருவன், வார்த்தைகளில் அவள் வாழ்க்கையை எரிப்பதற்குத் தீ வைத்தான். நண்பனிடம் இருந்து வந்த ஆதாரம் எனக்குக் கைகொடுத்தது. 
             பொறுத்திருந்து அவன் வருகையைக் கண்டறிந்து சிறிது நேரம் உரிமையுடன் உரையாடினேன். சினிமாக்களிலேயே வில்லன்கள் சொந்தங்களுக்குள்ளேயே வஞ்சம் தீர்ப்பதற்கு வாளேந்துவார்கள். ஆனால், மாற்றான் வாழ்வைப் பேசியே அழிப்பதற்கு இங்கு தொலைபேசி ஏந்துவார்கள். ஒருவனுடன் தொடர்பு கொண்டுள்ள அவள், உங்கள் மகனைத் திருமணத்தில் தொடர்பு கொள்ள ஆசைப்படுகிறாள். இப்படிப் பல அவதூறான வார்த்தைகள் கூறிக் கூடிவாழ எண்ணும் குருவிகளைக் கலைத்து விடுகிறார்களே. அடுத்தவர் வாழ்வின் அழிவுக்குத் தூபம் போடுவோர் காணும் சுகம்தான் யாதோ? மாற்றான் துயரத்தில் மகிழ்ச்சி காணும் மனங்களாலே வாழ்வை இழந்தோர் எத்தனை. அடுத்தவர் எம்மீது கறைகளைப் பூசிவிட்டால் கழுவிவிட்டு நிமிரும் தைரியம் பாதிக்கப்பட்டோருக்கு வளர வேண்டும். இல்லையேல், பூச எத்தனிப்போரைச் சேற்றினுள் புதைத்து அமிழ்த்துவதற்குச் சாமர்த்தியம் வேண்டும். வாழ வைப்பவர்கள் திரையின் பின் நின்று நிலைமை உரைக்க மாட்டார்கள். முகமூடி அணிந்து முகவரி உரைக்காது. பொல்லாத வார்த்தை உதிர்க்க மாட்டார்கள். திருமண வயதுக்குப் படி கண்டுவிட்டால், பகுத்தறிவு வேண்டாமா! பரிசம் போட்டவள் வாழ்வு பற்றிச் சிந்திக்க வேண்டாமா! நாலு வார்த்தை நறுக்கென்று கேட்டு நின்ற விடயம் தொடர வேண்டுமென்று உரிமையுடன் உத்தரவு போட்டு அவன் கண்களைத் திறக்கச் செய்தேன்.

    திங்கள், 21 பிப்ரவரி, 2011

    சித்திரை நிலவே



                  சித்திரை நிலவே

     வானத்தில் தோன்றும் தேவதையே
     வானோடையில் நீராடும் வடிவழகே
     கானம்பாடிக் கவிவடிக்கக் கருவானவளே
     கோடிகாலம் குடியிருக்கும் பால்நிலவே
     பால் சோறு பருகவுன்
     பால்முகத்தை காட்டினாளே
     பாட்டி கதை சொன்னபோதும்
     கைநீட்டி நீட்டிக் காட்டினாளே
     போட்டி போட்டி நான் உணவுண்ண
     காட்டிய உன் உருவோ
     சித்திரை பௌர்ணமியில் முத்திரை பதிக்கிறது.
     தொட்டிலில் கண்டநிலா தொடர்கிறது இன்றுவரைஎன்னைத்
     தொட்டிலில் போட்ட நிலாவோஎன்னை
     விட்டு விட்டெங்கோ விரைந்து போயிற்று
     எட்ட நின்று காட்சி தரும் சித்திரை நிலவே
     தொட்டதில்லை உன்னை
     தொடரும் உன் நினைவோ விட்டதில்லை
     தொட்டுத் தொட்டு அணைத்தெடுத்தவளோ
     விட்டுவிட்டுச் சிட்டாய்ப் பறந்திட்டாள்
     பெற்று வளர்த்த உறவின் முத்தி வேண்டி
     சித்திரை முழுநிலவே!
     உன் முற்றுமுழு வடிவு காணநான்
     சித்திரையில் காத்திருப்பேன் - உன்னைச்
     சிந்தையில் வைத்திருப்பேன்.

    ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

    காதலர் தினமாமே




      
    ஒரு வயதான மூதாட்டி காதலர் தினம் பற்றிய தனது கருத்தைக் கூறவதாய் இக்கவிதை வடிக்கப்பட்டுள்ளது.                             

                                                  காதலர் தினமாமே

    கேட்டேளா சங்கதி,காதலர் தினமாமே 
    கேட்டறிந்த செய்தியைத்தான் சொல்லவந்தேன் நானுமிங்கு
    போட்டுப்போட்டு மறைச்சு வச்ச காதலுக்குத் திருவிழா
    போடியாரு பிள்ளை சொன்ன புதினமிது புதுக்கதைதான்
    பாதிரியார் வாலண்டைனால் மாறிவிட்ட சட்டத்தால 
    பொதுசனங்கள் கொண்டாடுதாம் வாலண்டைன் நாளையும் 
    சொக்குலட்டும் ரோசாப்பூவும் சொகுசா விலைப்போகுதாம் -என்
    சக்களத்தி மககூட சரசமாடப் போறாளாம்
    வெக்கக்கேடு இதால ரத்தஓட்டமும் சிறக்குமாம் 
    சொக்குலட்டுக்குள்ள உள்ள அன்ரி அசிட்டால 
    பக்குப்பக்கென்று அடிக்கிற இதயமும் சீரா ஓடுமாம்
    விஞ்ஞானி சொன்னதாகக் கதையும் அடிபடுதாம்
    பத்தைக்குள்ள பதுங்கியிருந்து பண்ணிய காதலெல்லாம் 
    வித்தைகாட்டி கிளப்பெல்லாம் பேயாட்டம் ஆடுதாம் 
    சின்னஞ்சிறுசுகளும் தலையைச் சிலுப்பிச்சிலுப்பி; ஆடுதாம் 
    என்ன புதினமோ இந்தக் காலக்கோலமிது - இனி
    என்னஎன்ன நாளுந்தான் வந்து தொலையப்போகுதோ 
    காதலுந்தான் புனிதமென்டால் தினமொன்று தேவையா 
    காதலிக்குப் பரிசுகளும் தந்துதவ வேண்டுமா
    நாளுந்தான் காதலருக்கு நல்ல தினந்தானே 
    எக்கேடு கெட்டால் நமக்கென்ன 
    வாறன்புள்ள நானுந்தான் சொக்குலட்டு வாங்கவேணும்
    என்ர புருஷனுக்கும் கொடுக்க வேண்டும்

    சனி, 12 பிப்ரவரி, 2011

    மாண்டாள் மண்டோதரி



    கம்பனால் பலமாகப் பேசப்படாத பக்கம் மண்டோதரியாயினும், அந்தப் பெண்ணுக்கு விழைந்த பங்கமது போல் ஆண்மகன்களால் பல பெண்களுக்கு ஏற்படுகின்றன. மண்டோதரி என் செய்தால் தன் வாழ்விழக்க? கணவன் மறைந்த அக்கணமே தன் வாழ்வது இழந்தாள். அவள் என் குற்றம் செய்தாள்? அவள் வாழ்வில் என் குறை கண்டான் இராவணன்? இராவணனின் கற்பு மனையாளாய் வாழ்ந்தது குற்றமா? சூர்ப்பனகை மச்சாளாய் வாழப் புகுந்தது குற்றமா?

    அசுரத் தச்சன் அற்புதமாய்ச் செதுக்கிய
    அழகுச் சிற்பம் மண்டோதரி
    அன்பில் பண்பில் பாசத்தில் கற்பில் காதலில் 
    அளவிடமுடியா அறிவின் நுட்பமவள் 
    மணிவாசகரால் அழகமர் மண்டோதரியென
    மகிழ்ந்து பாடப்பட்டவள் 
    கற்புக்கரசி சீதைக் கொப்ப 
    கவின் அழகுப் பெண்ணரசி
    இந்திரனை வென்ற இந்திரசித்தை ஈன்றவள்.
    தவழ்கின்ற பருவமதில் கோள் அரியிரண்டு 
    பற்றிக் கொணர்ந்து பகைமூட்டி விளையாடிய 
    அசுரக் குமரனைப் பெற்றவள் – அவள் 
    அழகிலென் குறை கண்டான் இராவணன்
    அன்புச் சகோதரியில் கொண்ட 
    பாசத்தின் மோசத்தால் பாதை தடுமாறினான்
    பங்கம் விழைத்தான், மண்டோதரி வாழ்விழந்தாள்.


    சரம்பெய் தூணிபோல் தளிரடி
    கயல் மகிழ் கண்
    புயல் மகிழ் புரிகுழல்
    கருங்குழல் கற்றைப் பாரம்
    அகல் அல்குல் அன்றிச் சற்று 
    மருங்கலும் உண்டுண்டு – என்றே
    மங்காக் கவி புனைந்துரத்த மண்டோதரி 
    அழகிலென் மறுக் கண்டான் - தங்கை
    பாசத்தின் நேசத்தால் பங்கம் கொண்டான் - இராவணன்
    சீதை வாழ்வை சீர்குலைத்தான் 
    சீற்றம் கொண்டான் மண்டோதரி வாழ்விழந்தாள்


    மண்டோதரி அறிவின் புலம்பல் கம்பன்
    வண்ணச் சொல்லில் வடிவமைக்கையில்
    வெள் எருக்கஞ் சடை முடியான் வெற்பு எடுத்த
    திருமேனி, மேலும்கீழும்
    எள் இருக்கும் இடம் இன்றி, உயிர் இருக்கும் 
    இடம் நாடி, இழைத்தவாறோ?
    கள் இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை
    மனச் சிறையில் கரந்த காதல்
    உள் இருக்கும் எனக் கருதி, உடல் புகுந்து
    தடவியதோ ஒருவன் வாளி – என்று
    தெள்ளிய சொல்லால் கம்பன் வடிவமைத்தான்
       மண்டோதரி
    அறிவின் பெருமை எம் 
    அகக்கண்ணால் காணமுடிகிறதல்லவா! 
    கணவன் தன்மேற் கொண்ட காதலன்றி
    இராமன் வாளி ஏதும் கண்டறியாது 
    இராவணன் உயிருக்குத் தானே 
    உலை வைத்தென்றவள் கலங்கியதன்
    கருத்தொன்றி யாம் கண்டு கொண்டோமன்றோ!


    நினைத்ததும் மறந்ததும் இலா நெஞ்சினாளென
    நினைவிலென்று நிறுத்தி வைத்த கற்புநெறி
    நினைத்துநாம் பார்க்கையிலே நிந்தித்த இராவணனின்
    நிந்தனையால் நிலைகுலைந்த தவளன்றோ!


    அழகுநலம், அறிவுநலம், பண்புநலம்
    கற்புநலம் கொண்ட மண்டோதரி வாழ்வில்
    சூர்ப்பனகை மூட்டிய தீ 
    கொழுந்துவிட்டுப் பற்றியது – தங்கை
    பாசத்தின் நேசத்தால் பலர் வாழ்வில்
    பங்கம் விழைந்தது.


    பாசமது நேசத்தால் பலர் வாழ்வில் 
    நாசமது நெருங்குமெனில் - மனிதர்
    பாசமதை பரிசீலனை பண்ணவேண்டுமென
    பாரெல்லாம் முழங்க வேண்டும்.
    பாதகியர் பலரிருக்க அப்பாவிகள் பழியாவதை
    பாருக்கெல்லாம் உணர்த்த வேண்டும்.

    வியாழன், 10 பிப்ரவரி, 2011

    வா ழ்க்கையில் வெற்றி காணும் வழிமுறை


                          இறைவன் நமக்கு அற்புதமான சக்தியைக் கொடுத்திருக்கின்றான். அந்த சக்தியே மனம். மனதைக் கொண்டிருப்பதனாலேயே நாம் மனிதர்களாகின்றோம். வளமுடன் வாழ வழி காட்டுவது அந்த மனம்தானே. இந்த மனதின் சக்தியை சிதற விடாமல் ஒரு குறிக்கோள் குவித்தோமேயானால், நாம் எண்ணுகின்ற எக் காரியங்களிலும் வெற்றியை அடையலாம். 
                   அடுப்பில் ஒரு பாத்திரத்தினுள் நீர் கொதித்துக் கொண்டிருக்கும் போது, அந்தப் பாத்திரத்தின் மூடி தள்ளியதைப் பார்த்த ஜேம்ஸ்வர்ட் தனது கவனம் முழுவதையும் அதில் செலுத்தி நீராவிக்குத் தள்ளும் சக்தி இருக்கின்றது, என்று அறிந்து ரயில் என்ஜினைக் கண்டுபிடித்தார். அப்பிள் மரத்தில் இருந்து விழும் பழம் கீழ் நோக்கி விழுவதை அவதானித்து ஏன் விழுகின்றது! மேலே செல்லவில்லை. என்று சிந்தித்துத் தனது கவனம் முழுவதையும் ஒருமுகப்படுத்திய சேர்.ஐசாக்.நியூட்டன் புவியீர்ப்பு சக்தியைக் கண்டறிந்தார். லூதர் பர்பாங் ஆண்டுக்கணக்கில் ஆராய்ச்சி செய்து செடி கொடிகளுக்கு உயிர் இருக்கின்றது என்று கண்டறிந்தார். எனவே, எண்ணங்கள் ஒருமுகப்படுத்தப்படல் வேண்டும். சூரியனுடைய கதிர்களை ஒரு கண்ணாடி லென்ஸ் மூலம் குவிக்கும் போது ஒளிக்கதிர்கள் ஒன்றாக திரண்டு லென்ஸை ஊடுருவிச் சென்று எரிக்கின்ற நெருப்பாக மாறுகிறது. திரண்டு ஒரு நிலைப்பாடும் எண்ணம் உச்சத்தை அடையும். ஒரு செயல் வெற்றியடைய வேண்டுமானால் முழுமனத்தையும் செலுத்துவது, முழு ஆற்றலையும் ஒன்று குவிப்பது, முழு அறிவையும் புகுத்துவது போன்ற 3 திறன்களும் ஒன்றிணைய வேண்டும். அப்போது தான் வெற்றி கிட்டும்.

            கல்வியானது அடிப்படை அறிவுக்கு வித்திடும். மூளையை இயங்க வைக்கும். அந்தக் கல்வி என்னும் ஏணியைப் பிடித்து ஏறிவிட வேண்டும். ஆனால், அந்த ஏணியில் ஏறும் போதும் அதன் தன்மையை அறிந்துதான் காலை வைக்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் ஒரு குறிக்கோளைப் பிரார்த்தனை மூலம் ஒவ்வொரு நாளும் மனம் ஒன்றி;க் கேட்கும் போது மனதில் ஆழமான உறுதி ஏற்படும். பிரார்த்தனை என்ற பெயரில் எமது மனதிற்கு நாமே கட்டளையிடுகின்றோம் அல்லவா. இதன் மூலம் ஆழமாகப் பதியும் முயற்சியில் மனம் ஒன்றி விடும். வாகனம் ஓட்டும் போது எப்படிச் செலுத்துகின்றோம் அப்படியேதான். இந்த மனித உடலால் எதுவுமே செய்ய முடியாது. மனம்தான் எல்லாவற்றிற்கும் காரணம். அதனை வெற்றி கொள்ளுங்கள். வெற்றி என்பது நாம் விரும்பியதெல்லாம் வெற்றி கண்டு விடுவதல்ல. எம்முடைய தீமைகளைத் தீய எண்ணங்களை தீய ஆசைகளை தீய செயல்களை வெற்றி கொள்வது. இவையெல்லாவற்றையும் வென்றுவிட்டால், பிறரால் நாம் குறை கூறப்பட மாட்டோம். குறையில்லாமல் வாழுகின்ற வாழ்க்கையே மேன்மையான வாழ்க்கை. இவ்வாழ்க்கையுடன்,  நாம் கொண்ட ஒரு குறிக்கோளை நோக்கி மனம் ஒருமைப்பாட்டுடன் செல்லும் போது வெற்றி அடையலாம்.   
             

    செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

    அடித்தாரைச் சொல்லியழு ஆக்கினைகள் பண்ணிவைப்போம்


                     
    தாயைக்கண்ட சேய் இரு கரங்கங்களையும் நீட்டித் தாயை நோக்கி ஓடி வருகின்றது. இடையில் தடையாய் நின்ற தளபாடத்தில் தட்டுப்பட்டு விழுகின்றது. ஓ......என்று அலறல். ஓடிவந்து பிள்ளையைத் தூக்கிய தாய். 'இந்தக் கதிரையா? பிள்ளையை அடித்தது. இதுக்கு அடிபோட வேண்டும். பிள்ளைக்கு அடித்தாயா?  அடித்தாயா?'' என்று பிள்ளையைச் சாந்திப்படுத்துவதற்காக கதிரையை மாறிமாறி அடிக்கின்றாள். இங்கு தன்னை வருத்துவதைத் திருப்பி அடிக்க வேண்டும் என்னும் வன்முறை தாய் மூலம் பிள்ளைக்குப் போதிக்கப்படுகின்றது. இவ்வாறு சிறுவயதிலிருந்தே வன்முறை படிப்படியாகச் சிறுவர்கள் மனதில் விதைக்கப்படுகின்றது. கதிரைக்கு அடிபட்டு விட்டதா? கதிரை அழப்போகின்றதே தடவிவிடுங்கள். என்று கூறலாம். இல்லையேல், நீங்கள் கவனமாக வந்திருக்கலாமே என்று உண்மையை ஆறுதலாகச் சொல்லியிருக்கலாம். ஆனால்;;, புரியாத வயதில் புகட்டும் பாடம் வன்முறையின் ஒரு வடிவமே. 
                        மடியில் போட்டு மழலைக்குத் தாலாட்டுப் பாடுகின்றாள், தாய்.  ஆராரோ ஆரிவரோ ஆரடித்து நீ அழுதாய். கண்மணியே கண்ணுறங்காய். அத்தை அடித்தாளோ அமுதூட்டும் கையாலே. மாமா அடித்தாரோ மல்லிகைப் பூச்செண்டாலே, அடித்தாரைச் சொல்லியழு ஆக்கினைகள் பண்ணிவைப்போம்.' இது எப்படி இருக்கிறது பழிக்குப் பழி. குழந்தை அழுவதற்கான காரணங்கள் பல இருக்க இப்படியொரு வினா குழந்தையிடம் தேவைதானா? தாலாட்டின் மூலம் ஊட்டப்படும் உள்மன ஊட்டச்சத்தை உணர்ந்து நாம் பார்க்கின்றோமா? இவ்வாறு தவறு என்று அறியாமலே சிறுவயதிலிருந்து குழந்தைகளுக்கு வன்முறை ஊட்டப்படுகிறது
                        கதவை இழுத்து அடித்துப் பூட்டுவது வன்முறை, குழாய் நீரை விசையாகத் திறப்பது ஒரு வன்முறை, தீங்கேதும் செய்யாத தேனீயைத் தன்னைக் குத்திவிடும் எனப் பயந்து அடித்து உயிரைப் போக்க வைப்பதும் வன்முறை. கோபம் வந்தவுடன் கையில் கிடைக்கும் பொருளை வீசி எறிவதும், உடைப்பதும், கையில் அகப்பட்டதைக் கருவியாகக் கொண்டு குழப்படி செய்யும் குழந்தையை அடித்துத் துன்புறுத்துவதும் வன்முறையின் வடிவங்களே.சின்னாபின்னமாக உடைந்து சிதறும் பொருள்கள் ஒருவித மன உழைச்சலை மனதில் ஏற்படுத்துகின்றது. உள்மனதில் பாதிப்புப் படருகின்றது. 
                        நினைப்பென்பதும் மனமென்பதும் ஒன்றே. மனிதனின் நினைப்பால் தக்கவாறு வாழ்வு அமைகின்றது. எனவே, எதிர்காலம் எங்கள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அது சிறப்பான சமுதாயமாக வளர, அதன் அடிப்படை அவதானமாக உள்ளத்தில் பதியப்பட வேண்டியது அவசியம். எமது நடவடிக்கைகளை நாமே உற்று நோக்குவோம், பண்பான எண்ணங்களை மனதில் பதிப்போம், 

    திங்கள், 7 பிப்ரவரி, 2011

    மனதின் மாறாட்டம்



              சுந்தரிக்கு அன்று இனம்புரியாத ஒரு பயம் திடீரென்று மனதில் ஏற்பட்டது. எத்தனை காலம் தான் நான் வாழப் போகின்றேன். மனிதனுடைய வாழ்க்கை நினைப்பது போல் நடப்பதில்லையே. திடீரென்று ஏதாவது ஒரு அசம்பாவிதம் என் வாழ்க்கையில் ஏற்பட்டுவிட்டால். உடும்புப் பிடியாக ஒட்டியிருக்கும் என் மகள் இதைத் தாங்குவாளா! இறுக இறுக இரவில் என்னைக் அணைக்கும் போது எனக்குள்ளேயே இந்த ஏக்கம் தொடராக என் மனதில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதை மனதில் கொண்டுதானோ ஐரோப்பியர்கள், குழந்தைகளைத் தனியே படுக்கப் போடுகின்றார்கள். மனதில் தன்னம்பிக்கையும் பயமின்மையையும் தனித்து வாழும் பக்குவத்தையும் ஏற்படுத்தத்தான் என்பதை நன்கு அறிந்திருந்தும், வெள்ளைத் தோல்கள் பாசமில்லாதவர்கள் தன்னந்தனியே பிள்ளைகளைப் போட்டுவிட்டு அவர்கள் சுகமாகத் தூங்குகின்றார்கள். என்றெல்லாம் குறை கூறுகின்றோம். ஆனால், எதையுமே திட்டமிடாது வாழ்க்கையயில் தொடர்ந்து திண்டாடும் எம்மவர் வாழ்வின் படிமானங்களைத் தெரிந்து கொள்வதில்லை. பாசமென்ற பெயரில் பயந்தாங்கொள்ளிகளை உருவாக்கும் பெற்றோர்கள் அல்லவா, நாங்கள். பலவாறான எண்ணங்களின் பின் முடிவானது அவள் மனதில் ஒரு துணிவு. கணவனிடம் சென்று மெதுவாகக் கூறினாள்.  'பிள்ளையை இன்று அவவுடைய அறையில் படுக்கவிடுவோம். தற்செயலாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் நான் படுக்க வேண்டிவந்துவிட்டால், அதைப்பற்றி சிந்திக்காது இருக்க வேண்டுமல்லவா? 'திடீரென்று என்ன இந்தச் சிந்தனை'' கணவனின் சந்தேகம். அப்படியொரு பெரிய விசயமுமில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவக்கு எல்லாம் பழக்கத்தானே வேண்டும். 
                             மகள் பாடசாலை சென்றவுடன் ஆயத்தம் பலமாக இருந்தது. மகளுடைய அறையை அழகுபடுத்தி அதில் ஆசை ஏற்படும் வண்ணம் தடபுடலான அமர்க்களம். அறையினுள் கட்டிலைச் சுற்றி அழகான பொம்மைகளின் அலங்காரம். கணவனிடம் கட்டளையிட்டாள், படுக்கைக்குக் கொண்டு போனவுடன் நான் பால் கொடுத்து விட்டுவந்துவிடுவேன். நீங்கள் தான் சிறிது நேரம் பக்கத்தில் படுத்திருந்து விட்டு வரவேண்டும். அவ அடம் பிடிப்பா பிள்ளையின் நல்லதுக்குத் தானென்று நீங்கள் தான் எடுத்துச் சொல்ல வேண்டும். பிள்ளையை கவலைப்பட விடாமல் நீங்கள் தான் பார்க்கவேண்டும். அனைத்துக்கும் சம்மதித்தார் கணவன். மகளும் வந்தாள். மாலை நேரமும் வந்தது. அம்மாவின் முன்னெடுப்புக்கு முதலில் பலத்த எதிர்ப்புப் பிள்ளையிடம். ஒருவாராக சம்மதத்துடன் கட்டிலுக்குச் சென்றுவிட்டாள்.  சுந்தரி தனது கட்டிலுக்குப் படுக்கச் செல்லுமுன் மகளை அணைத்து முத்தமிட்டு இரவுவணக்கம் சொல்லி படுக்கையை அடைந்தாள். போர்வையினால் உடலைப் போர்த்தினாள். பிரண்டுபிரண்டு படுத்தாள். இறுகஇறுகக் கண்களை மூடினாள். நித்திரை வருவதாயில்லை. மெல்லெனக் கால்கள் மகளின் அறையை நோக்கி நகர்ந்தன. கணவனிடம் கொஞ்சம் விடுங்கள் என்று சொல்லியவண்ணம் நித்திரையிலிருந்து மகளை எழுப்பாமல் தூக்கிக் கொண்டு தனது கட்டிலுக்குப் போனாள் சுந்தரி. மகளை அணைத்தபோதுதான் நித்திராதேவி அவள் கண்களை அணைத்துக் கொண்டது.

    சனி, 5 பிப்ரவரி, 2011

    தீயை அணைத்ததனால், தீயும் என் உள்ளம்


        
           
         காலில் ஊற்றிய காய்ச்சிய பாலால் கதறியழுதான் கவியழகன்> தன் வேதனை தீர வேண்டுமென வைத்தியரை விரைந்து கண்டான்> தன் நோவதனைத் தீர்க்க வழி தானே தேடிக் கணடு கொண்;டான். எம்நோய் தீர்க்க பிறரைத் தூண்டல் வன்நோயாகுமென வள்ளுவர் வாய்மொழி கூறாதிடினும்> எமக்காய் ஓர் தமிழன் தன் உடல் எரிந்து மாண்டான். அவன் இழப்பது பெற்ற இணையும்> உறவும் இழந்தது இழந்ததே. அன்றும்> இன்றும் அத்துணையை ஈடு செய்திட யாரால் இயலும். அத் தீயின் வேதனை எப்படித் தாங்கியிருப்பான். எப்படித் துடித்திருப்பான். நினைக்க நினைக்க நெஞ்சமும் உடலும் இணைந்தே எரிகிறதே. அடுத்தவர் வலியை> தீயை நாமும் அணைத்துப் பார்த்தாலே புரியும.; அவரவர் வேதனையை அளக்கவும் முடியும். அன்றைய நாளுக்காய் இரங்கல் பாடி> அடுத்தநாளுக்கு காவலன் திரைப்படம் பார்க்க விரைந்திடுவார்> புலம்பெயர்வில் தமிழர். வீரவார்த்தை பேசுதல் மூலம் விரைந்து பலர் வாழ்வுக்குத் தீயை மூட்டி வதிவிட உரிமை புலம்பெயர்வில் பெறுதல் வாழ்க்கை முறையாமோ?; 
          அடுத்தவர் குடும்பம் அழித்து என் குடும்பம் இன்பம் காணல் அகோரக்குணம்.
          யாருக்காகவும் யாரும் வேதனைப்பட்டு இறப்பது வேதனைக்குரிய விடயம்.
          தன்னைவருத்தி இறைவனிடம் வரம் கேட்கும் பக்தியைப் பழிப்பது பகுத்தறிவு
          தன்னை வருத்தி இறப்பது தாங்கமுடியாத சோகம்.
    இப்படி ஒரு நிகழ்வு கண்டு> இன்னும் ஒரு நிகழ்வு இப்படி ஏற்படாதிருக்க கடிந்துரைத்தல் கட்டாயக் கடமை அல்லவா! வீரன், தமிழுக்காய் தன்னை மாய்த்தான் என்று புகழ்துரைத்தல்> பலரையும் இவ்வழி திருப்பும் மாய வார்த்தை அல்லவா! அன்று கூழுக்கும், பொன் முடிச்சுக்கும் புலவர் புகழ்ந்து பாடி மன்னர் வீரத்தை மூட்டினார்கள். இதனால்> பல பெண்கள் தாரமிழந்தார்கள். அழகான வாழ்க்கை, அற்புதமான இயற்கை, புதியபுதிய கண்டுபிடிப்புக்கள். இவையெல்லாம் இழந்து இளமையில் மனிதன் மண்ணுக்கு இரையாகத்தானா, பத்து மதங்கள் தாய்> தன் வயிறு கனக்கத் தாங்கி, இடுப்புவலிக்கப் பிள்ளையை வெளிக் கொண்டுவந்து, தன் உணவு ஒறுத்து தன் பிள்ளைக்கு ஊட்டி வளர்த்தெடுக்கின்றாள். சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவசர புத்தியால் அறிவிழக்க் கூடாது. பிறரைப் பற்றிச் சிந்திக்கும் போது, முதலில் நான் எப்படி என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனது செய்கையால் வரவிருக்கின்ற பாதிப்பு என்ன? என் பிறப்பு வளர்ப்பு இவ்வளவு தானா! என்று எண்ணிப் பார்க்க வேண்டும். திடீரென எடுக்கும் முடிவானது எப்போதும் சிறப்பாக இருப்பதில்லை. ஒன்றைப் பலமுறை சிந்தித்துப் பார்த்தே முடிவுகளைத் தீர்மானிக்க வேண்டும். என்னைப் பற்றிச் சிந்திக்கும் போது எதிரியின் நிலையில் நின்றும் சிந்திக்கும் பக்குவம் வளர வேண்டும். அப்போதுதான் சரிபிழை பகுத்துப் பார்க்கும் பக்குவம் ஏற்படும். யாராவது அப்படிச் செய்கின்றோமா? எதிரியை எதிரியாகத் தானே பார்க்கின்றோம். அவனும் மனிதன் என்பதை மறந்து விடுகின்றோமே. அவனுள் மறைந்திருக்கும் மனிதக்குணத்தை வெளியே கொண்டுவர எத்தனை பேர் முயற்சிக்கின்றோம். ஆவேசத்தால் ஆவது என்ன? ஒருமுறை எமது விரலை, நாமே தீக்குள் திணித்துப் பார்ப்போமா? அப்போது புரியும் தணலின் வேதனை. எமது பிள்ளைகள் பல்கலையும் பயிலவேண்டும், பலவித விற்றமின் உணவுகள் உண்ணவேண்டும்> வாகனத்தில் பிரயாணம் செய்துகொண்டே திரைப்படத்தை இரசிக்கவேண்டும் குடும்பமாய்க் குதூகலக்கவேண்டும் என்று எண்ணுகின்றோம் அல்லவா? அதேபோன்றே> அனைத்துக் குழந்தைகளும் சந்தோசத்தை அநுபவிக்கவேண்டும்> பெற்றோருடன் ஒன்றாக வாழவேண்டும்> அமைதியை நாடவேண்டும் என்று ஒவ்வொரு கணமும் சிந்திப்போம். தொடரும் வாழ்க்கைப் பயணத்தை இடையில் முடிக்கும் தீர்க்கமான முடிவுக்கு முட்டுக்கட்டை போடுவோம். 
          எல்லோரும் வாழவேண்டும். அதுவும் நன்றே வாழவேண்டும்.

    வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

    நோய்

    நானென்ற மமதைக்கோர் குட்டுப் போடும்
    ஆண்டவனை நாடியோட வைக்கும்
    தன்னம்பிக்கைக்குத் தடைபோடும்
    தைரியத்தைத் தட்டிக் கேட்கும்
    துணைதேடி உடல் துடிக்கும்
    அமைதி தேடி ஒதுங்க வைக்கும்
    ''’’வென்ற மொழியை நாவுக்குப் பழக்கமாக்கும்
    வாழவேண்டுமெனும் ஆசையை அழிக்கும்
    கூடவிருந்தே குழி பறிக்கும் - இந்நோய்
    மனிதனுக்கோர் எச்சரிக்கை
    விஞ்ஞானி மூளைக்கு எஜாமானி
    வாழ்வின் தத்துவம் உணர்த்தும் ஞானி
    வாழ்பவரை அணைப்பதே இதன் பாணி - இது
    வாட்டாதவர் யாருமில்லை
    வருந்தாதவர் எவருமில்லை
    நோயே! உன்னையெண்ணி
    நோவதைத் தவிர வேறு வழியில்லை.


    02.02. 2011 முத்துக்கமலம் இணையத்தளத்தில் வெளியானது.

    புதன், 2 பிப்ரவரி, 2011

    வெள்ளை அங்கிக்குள் கரையும் பருவம்



                   உடல் உழைப்புக்கு ஒத்துடம் போடும் படுக்கை, உன்னைக் காத்து விரிந்துள்ளேனென்று வித்யாவிற்கு அழைப்பு விடுத்தது. தொப்பென்று படுக்கையில் விழுந்தாள். இறுக்கக் கண்களை மூடினாள். உடலும் விழியும் அவளுக்கு ஒன்றாக நன்றி கூறின. அவள் உத்தரவு போட்டு அவள் கண்கள் உறங்கி நீண்ட நாட்களாயின. மூடிய கண்களை மெல்லத் திறந்தாள். என்றுமே தன்னோடு ஒட்டிக் கொண்டிருக்கும், அந்த வெள்ளை அங்கி அவளுக்கு அச்சுறுத்தலாகவும் ஆதரவாகவும் அவளைப் பார்த்தது. ஆடைப் பையில் ஒளிந்து கொள்ளும் அந்த வட்டத் தலைக் கெட்டிக்காரன், தலையை மட்டும் வெளியே தொங்கப் போட்டிருந்தான். எத்தனை இதயத் துடிப்புக்களை, இதுவரை இதனோடு இணைந்து இவள் கணக்கிட்டிருப்பாள். ஆனால், இவள் இதயத்தின் வலிக்கு தைலமிட்டுத் துணைவர துணைவர் யாருமில்லை. அருகே இருந்த நாள்காட்டியில் கண்கள் பதிந்தன. அதுவும் 30 வருடங்கள் அவள் வாழ்ந்த வாழ்க்கையை அத்தாட்சிப்படுத்தியது. நோயாளர்களுக்கு அவள் தெய்வம், அறிவு அவளோடு அளவுகடந்து சொந்தம் கொண்டாடியது. பொறுமைக்கு அவள் இலக்கணம் அதனால்த் தானோ வதுவையும் வணங்கி விடைபெற்றது. 
                  
                                 வாசல் அழைப்புமணி கேட்டு பலகணியூடு பார்வையைச் செலுத்தினாள். அங்கு ஆடம்பரக் காரில் வந்திறங்கி, வாசல் கதவருகே அவள் பால்ய சிநேகிதி காத்திருந்தாள். ஓடிச் சென்று கதவைத் திறந்தாள். „ நாளைக்கு உனக்கு கரடட னயல னுரவல அம்மாவைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குத் தான் வரவேண்டும். அதனால் இன்றே உனது பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்ல வந்தேன்'' என்றாள். யுரளடிடைனரபெ (பல்கலைக்கழகம் செல்லாது, ஏதாவது ஒரு வேலைக்கான கல்வியைக் கற்றல்) முடித்து சிறப்பான ஒரு தொழிலில் இணைந்து கைநிறையப் பணமும், கண்ணிறைந்த கணவனும் கலகலப்பான இரண்டு பிள்ளைச் செல்வங்களும் பெற்று ஒரு பூரண வாழ்வு வாழ்பவள் தான், அவள். 'உனக்கு வயதோ 30. இப்படி எத்தனை காலம் வாழப் போகின்றாய். வாழ்க்கை ஒரு முறைதான். அதுவும் வாழத்தான். பெற்றவர் மனவிருப்பப்படி மருத்துவத்துறை பயின்றாய். உன் தரத்திற்கு ஒருவரைத் தேடித்தேடி உனது பெற்றோரும் ஓய்ந்து விட்டனர். இப்படி எத்தனை காலம் வாழப்போகின்றாய். உனக்காக நீ வாழ்வது எப்போது? தோழியின் வார்த்தைகளின் அநுதாபம், அவள் வாய்ப்பூட்டை உடைத்தது. 16 வயதில் நான் யுரளடிடைனரபெ செய்யப் போயிருந்தேனேயானால், இன்று நானும் உன்னைப்போல் சிறப்பாய் வாழ்ந்திருப்பேன். 7 வருடங்கள் பல்கலைக்கழகத்தில் பயின்றும் என்ன பலனைக் கண்டேன். பருவத்தை இழந்தேன். படிப்புக்கேற்ற பணப்புழக்கமுமற்ற நிலையிலல்லவா இன்று நான் வாழ்கின்றேன். காதலுக்குப் பச்சைக் கொடியை எனது பெற்றோர் காட்டுகின்ற இப்போது நான் அந்தப் பருவத்தை இழந்து விட்டேன். காதல் என் பெற்றோருக்கு அப்போது கசத்தது. இப்போது இனிக்கிறது. ஆனால், நானோ அதைப் பற்றிச் சிந்திக்கும் நேரமற்ற சிறைப்பட்சி. நாள்கள் மலர்வதும் மறைவதும் என் எண்ணத்தில் இடம் பிடிக்காமலே நடைபெறுகின்றன. நான் கண் அயர்ந்தால், என் கவலையீனத்திற்குப் பழியாவது ஆருயிர்கள். வித்யாவின் விரக்தியான பேச்சுக்கு இடங் கெடுக்காத அவள் தோழியும் 'வித்யா உன்னால் பல உயிர்கள் வாழுகின்றன. ஆண்டவனுக்கு அடுத்தபடியான தொழிலில் நீ ஈடுபட்டிருக்கின்றாய். உன் திறமைக்குப் பொருத்தமானதும் இத்தொழிலேதான்'' என்றாள். ' உன் வார்த்தைகள் எனக்கு விசிறியாகலாம். நிரந்தரத் தீர்வாகாது. எனது பிடித்த துறையை ஒறுத்து இதை ஏற்றும், ஏற்ற வருமானமோ, ஏற்ற வாழ்வோ எதுவுமற்று வாழவேண்டிய வயதில் வாழ்க்கையைச் சுவைக்க முடியாது வாழும் என் போன்ற பெண்களைப் பெற்றவர்கள், சிந்திக்க வேண்டியது, ஆசாபாசங்கள் எல்லோருக்கும் உண்டு. வாழ்க்கை வாழ்வதற்கே. சென்ற நாள்கள் திரும்பி வருவதும் இல்லை, நிலையாய் நிற்பதும் இல்லை. பெற்றோர் திணிப்புக்களை பிள்ளைகளுக்குக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். உலகஅறிவு பிள்ளைகளுக்கும் உண்டு என்று நெஞ்சில் நினைக்க வேண்டும்'' என்று கூறி ஓரக்கண்ணில் வடியும் நீரைச் சுண்டு விரலால் சுண்டி விட்டாள். 

    வாழ்வியல் இலக்கியங்கள் ஒவ்வொன்றும், புலம்பெயர்வின் கல்வெட்டுக்கள்  

    செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

    ஆன்மாவின் ஈடேற்றம்




    மரம் இறந்தால் விறகாகும்
    மனிதன் இறந்தால் என்னாகும் என
    மனம் உறுத்தக் கேட்டார் வைரமுத்து
    மனிதா!
    உயிருடன் வாழும் காலம் வரை நீங்கள்
    உலகில் ஊன்றிய சாதனைதான் யாதோ?
    வாழ்ந்தோம் இறந்தோம் என்றில்லாது
    மாற்றான் வாழ்வுக்கு உதவ உங்கள்
    மனக்கிடங்கில் வழி இருக்க
    பணக்கிடங்கு வெறுமையாகி விட்டதா?
    கணக்கில்லா ஆசைகள் சுமந்து
    மாசற்ற உடல் மண்ணுக்குள் மண்ணாகிடும்
    மனிதநேயம் கொண்ட மானிடனே!
    கருவிகள் சுமந்த உங்கள் உயிர்
    பெருமைகள் சுமக்க வேண்டும்.
    கருவிகளைத் தானமாய்த் தந்துவிட்டு
    பெருமைகளைச் சுமந்து சென்றிடுங்கள்
    மரித்த உடல் உலகில்
    தரிக்கும் சாதனை விரைவில்
    இறக்கும் காலத்தின் முன்,
    சிறக்கும் பணியைச் சொல்லிடுங்கள்
    நிலைக்கும் அவயவங்கள் இறந்த பின்பும்
    சிரிக்கும் அவை வேறுடலில்
    உங்களால் வாழும் மனிதன்
    பூஜிக்கும் மன வார்த்தைகள் - உங்கள்
    ஆன்மாவிற்கு ஈடேற்றமாகும்.

    05.01.11 திண்ணை இணையத்தளத்தில் வெளிவந்தது.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...