ரமணி அவர்களின் அன்பான அழைப்பிற்குத் தலைசாய்த்து மூன்று முடிச்சுப் பதிவுத் தொடரினை வாசகர் கண்களுக்கு அன்பாக அளிக்கின்றேன். அவை முத்துக்களா? எனத் தீர்ப்பு வழங்க வேண்டியவர்கள் தாங்களே......
பிடித்த உறவுகள்:
பெற்றோரையும் பெற்றொரைப் பெற்றோரையும்
நான் சுமந்த என் வாரிசு
சேய் போல் என்னைத் தாங்கும் என் கணவன்
பிடித்த உணர்வுகள்:
அன்பு
பெண்களுக்குரிய நாணம்
அடுத்தவர் துயருறும் போது உள்ளம் நெகிழ்தல்
பிடிக்காத உணர்வுகள்:
அடக்க முடியாத ஆத்திரம்
கோபம்
ஆணவம்
முணுமுணுக்கும் பாடல்கள்:
எனது தாயாருக்காக நான் எழுதி பாடல்.
( http://www.youtube.com/watch?v=Sm6jpWr9sBo)
அம்மா என்று அழைக்காத உயிரில்லையே.
புதிதாக வெளிவரும் கருத்தாழமிக்க பாடல்கள்
பிடித்த திரைப்படங்கள்:
ஆட்டோகிராப்
மதராசுபட்டினம்
மௌனராகம்
அன்புத் தேவைகள்:
எதிர்பார்ப்பில்லாத உறவுகள்
ஈடு செய்ய முடியாத பாசம்
எனக்காக ஏங்கும் உள்ளங்கள்.
வலிமையை அழிப்பவை:
பொறாமை
சோம்பல்
தைரியமின்மை
குட்டித்தத்துவம்:
உன்னையே முதலில் நீ காதலி. உலகம் உன்னைக் காதலிக்கும்.
யார் எது சொல்லிடினும் ஏன் என்று கேட்டுத் தெளிந்தபின் நம்பு.
மற்றவரைக் குற்றம் சொல்லும் முன் உன்னை நீ ஒரு தடவை சரிபார்த்துக்கொள்.
பயமுறுத்தும் பயங்கள்:
இயற்கையின் களியாட்டம்
முதுமையில் எமது நிலை
ஐரோப்பியசூழ்நிலையில் வளரும் என் மகள்.
அடையவிரும்பும் நிலையான விருப்பங்கள்:
வாழும்வரை புதுமைகளைக் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.
ஏன் என்ற கேள்வி மூலம் பலவற்றை புரிந்துணரவேண்டும்.
அறிவுக்கு எட்டியவரை தேடல் தொரடவேண்டும்.
கற்க விரும்புவது:
இலக்கிய இன்பம்
பியானோ
அலைகள் பற்றிய கல்வி (Mind reading )
வெற்றிபெற வேண்டியவை:
மறதி
நேரம்
வாழ்க்கைச்சுமை
சோர்வு நீக்கத் தேவையானவை:
சூடான கப்புச்சினோ ( Cappuccino) காப்பி
கண்ணைமூடி தலை பின் சாய்த்து இசையில் இலயிப்பது
மழலை பேசும் குழந்தை மொழி
எப்போதும் தயாராக இருக்க வேண்டியது:
தொலைபேசி
மனம்
பணம்
முன்னேற்றத்திற்குத் தேவை:
சோர்ந்து போகாத ஆர்வம்.
ஒத்துப்போகும் மூளை
ஒத்தழைக்கும் குடும்பம்.
எப்போதும் அவசியமானது:
ஆரோக்கியமான உடல்நிலை
தயாரான மனோநிலை
தேவையான பணநிலை
பிடித்த தத்துவம்:
யார் சொன்னார் எவர் சொன்னார் என்பதை விட்டுவிட்டு எவர் சொன்ன சொல்லையும் உனது சொந்த அறிவால் எண்ணிப்பார்.
உன்னைத் திருத்து உலகம் திருந்தும்
உன் செயல்களே உன் வாழ்வை நிர்ணயிக்கும்
தெரிந்து தெரியாது குழம்புவது:
இறப்பின் பின் மனிதனின் நிலை
யாருமே கண்டறியாத கடவுளும், இயற்கையும்
உடலின் அமைப்பும் தொழிற்பாடும்
எரிச்சல்படுத்துபவர்கள்:
மூடநம்பிக்கையில் மூழ்கிக்கிடப்பவர்கள்.
அளவுக்கதிகமாகப் பேசுபவர்கள்.
தொலக்காட்சிகளில் பார்ப்பவை கேட்பவற்றை வைத்துக் கொண்டு அனைத்தையும் நம்புபவர்கள்
மனங்கவர்ந்த பாடகர்கள்:
வளர்ந்துவரும் இளந்தலைமுறையினர்.
தாலாட்டுப் பாடிய எனது தந்தையார்.
காலைநேரப் பறவைகள்
இனிமையானது:
குழந்தைச் சிரிப்பு
தென்றல்காற்று
இலக்கியங்கள்
சாதித்தவர்களின் பிரச்சினை:
உனக்கு மேமே உள்ளவர் கோடி என்பதை மாற்றியமைக்கப் போராடல்.
ஓய்வில்லாத ஓட்டம்
மற்றவர்களில் குறைகளைச் சுட்டிக்காட்டிக் கொண்டே இருத்தல்
பிடித்த பழமொழிகள்:
மற்றவர் வாழ்க்கையோடு உங்கள் வாழ்க்கையை ஒப்பிட்டுப்பாராது உங்கள் வாழ்க்கையை ரசியுங்கள் அதில் இன்பமும் இரகசியமும் இருக்கின்றது.
யதார்த்தவாதி வெகுசன விரோதி
உன் கௌரவம் உன் நாக்கின் நுனியில் இருக்கின்றது
பதிவிட அழைக்கும் மூவர்
1. அப்பாத்துரை http://moonramsuzhi.blogspot.com/
3. போளுர் தயாநிதி 1. http://arivan-polurdhayanithi.blogspot.com/