• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 12 ஆகஸ்ட், 2022

    Dr.Abraam George - Shanti Bhavan




    கல்வியின் மூலம் வறுமையை, ஏற்றத்தாழ்வுகளை நீக்க முடியும் என்று முன்னெடுத்து வெற்றி கண்டவரே டாக்டர் ஆபிரகாம் ஜோர்ஜ் என்பவர். இவர் என்ன செய்தார். எவ்வாறான சமூகத்தைக் கட்டி எழுப்பினார் என்பதை அறிய வாருங்கள் தொர்ந்து பார்ப்போம். தனக்காகத் தன்னுடைய சொந்த நலனுக்காக சொத்துக்களைச் செர்த்து வாழுகின்ற மக்களுக்கு மத்தியிலே இந்த மனதரைப் பற்றிப் பேச வேண்டும் என்று என்னுடைய மனம் விரும்பியது

     

     யார் இந்த ஆபிரகாம் ஜோர்ஜ் இவர் இந்திய-அமெரிக்க தொழிலதிபர், கல்வியாளர் மற்றும் மற்றவர்களுக்கு உதவுகின்ற தாழ்த்தப்பட்ட தீண்டத்தகாத பின்தங்கிய மக்களுக்கு பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் உயர்ந்த நிலைக்கு வருவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் பெங்களூரில் உள்ள ஒரு இலாப நோக்கமிலலாத அமைப்பான ஜார்ஜ் அறக்கட்டளையின் (TGF) நிறுவனர் தான் இவர்.

     அவரது அறக்கட்டளை வறுமை ஒழிப்பு, கல்வி, சுகாதாரம், ஈய நச்சு தடுப்பு, பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றில் பல திட்டங்களைத் தொடங்கியுள்ளது. சமூகத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு 4 வயது முதல் கல்லூரி வரை இலவசக் கல்வி வழங்க உதவுவதற்காக சாந்தி பவன் பள்ளியை நிறுவியிரக்கின்றார். ஜார்ஜ் இந்தியாவின் உள்ள கேரளாவின் திருவனந்தபுரத்தின் கடலோர நகரத்தில் பிறந்து வளர்ந்தார். ஒருவரான மேத்யூ மற்றும் ஏலியம்மா ஜார்ஜ் அவர்களின் நான்கு குழந்தைகளின் இரண்டாவது மகன். பதினான்கு வயதில், ஜார்ஜ் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்தார். 

    பின்னர் அவர் இந்திய இராணுவத்தின் நடுத்தர பீரங்கி படைப்பிரிவில் இரண்டாவது லெப்டினன்டாக பட்டம் பெற்றார். 1962 ஆம் ஆண்டு சீனப் படையெடுப்பைத் தொடர்ந்து, 1966 ஆம் ஆண்டில் ஜார்ஜின் முதலாவது போஸ்டிங் சீனாவின் எல்லையான வடகிழக்கு எல்லைப் பகுதியில் இருந்தது ஒருமுறை திடீரென டைனமைட் வெடித்தபோது ஜார்ஜ் காயமடைந்தார். அவர் குணமடைந்து திரும்பியதும், அவர் இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு நியமிக்கப்பட்டார், அங்கு அவர் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார் மற்றும் கேப்டன் பதவிக்கு உயர்ந்தார். 

     1968 ஆம் ஆண்டில், ஜார்ஜ் பணியின் மூன்றாம் ஆண்டில், அவர் செவித்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டார். அதற்கு சிறப்பு அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. இந்த கட்டத்தில், அவரது தாயார் ஏற்கனவே அமெரிக்காவில்physics teacher மற்றும் ஆராய்ச்சி விஞ்ஞானியாக நாசாவில் பணிபுரிந்தார். அவரது தாயின் நிலை அவருக்கு அமெரிக்காவிற்கு வருவதற்கான வாய்ப்பை வழங்கியது, அங்கு அவர் அறுவை சிகிச்சை செய்து புதிய வாழ்க்கையைத் தொடங்கினார்.

      அமெரிக்காவிற்கு வந்த ஜார்ஜ் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ; stern school of Business  ஸில் பட்டதாரி மாணவராக பயின்றார். அந்த நேரத்தில், அவர் அமெரிக்க Development Economy and international finance  ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றார், பின்னர், இப்போது J.P Morgen Chace வங்கியின் ஒரு பகுதியாக இருக்கும் கெமிக்கல் வங்கி, ஜார்ஜுக்கு வங்கியில் officer  வேலை வாய்ப்பை வழங்கியது. 

    ஜார்ஜ் 1976 ஆம் ஆண்டு தனது சொந்த நிறுவனமான Multinational Computer Models Inc (MCM) தொடங்க முடிவு செய்தபோது MCM  பின்னர் உலகளாவிய முதலீட்டு வங்கியான Credit Suisse First Boston  உடன் ஒரு கூட்டு முயற்சியை உருவாக்கியது, அங்கு ஜார்ஜ் அதன் புதிய செயல்பாடுகளின் தலைமை ஆலோசகர் மற்றும் நிர்வாக இயக்குநராக பணியாற்றினார். 1998 இல், ஜார்ஜ் MCM I Fortune 500 நிறுவனமான SunGard  டேட்டா சிஸ்டம்ஸ{க்கு விற்றார், அங்கு அவர் இரண்டு ஆண்டுகள் துணைத் தலைவராக பணியாற்றினார். வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, பத்திரிகையாளர்களுக்கான சர்வதேச மையம் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவில் அவர் இருந்தார். அவர் நியூயார்க் பல்கலைக்கழக ஸ்டெர்ன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் துணைப் பேராசிரியராக உள்ளார். 

     ஜார்ஜ் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜனவரி 1995 இல் இந்தியா திரும்பினார். அவர் அறிந்திருந்த அநீதிகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதே அவரது நோக்கமாக இருந்தது, இதற்காக அவர் தி ஜார்ஜ் அறக்கட்டளை, ஒரு இலாப நோக்கற்ற தொண்டு அறக்கட்டளையை www.shantibhavanchildren.org  மற்றும்  www.tgfworld.org 
    நிறுவினார். அவரது ஆரம்ப திட்டங்களில் ஒன்றான சாந்தி பவன் குடியிருப்புப் பள்ளி, தலித் அல்லது "தீண்டத்தகாத" சாதிகளைச் சேர்ந்த இந்தியாவின் ஏழ்மையான பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வி மற்றும் பராமரிப்பை வழங்குகிறது. 

    2017 ஆம் ஆண்டு நிலவரப்படி, பள்ளியின் 20 வருட செயல்பாடுகளுக்குப் பிறகு, முதல் நான்கு  Batch students இப்போது கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளன, மேலும் Mercedes Benz, Goldman Sachs, Ernst & Young போன்ற உலகளாவிய நிறுவனங்களில் வேலை செய்கின்றார்கள்.இது இந்தியாவின் சமூகத்தில் ஈடு இணை இல்லாத சாதனையாகும். வரலாறு. 2021 ஆம் ஆண்டில், ஆறு சாந்தி பவன் பட்டதாரிகள் இளங்கலைப் படிப்பிற்காக Dartmouth, Hofstra, Duke, Princeton,  Middlebury, and Northwestern universities
     மற்றும் வடமேற்கு பல்கலைக்கழகங்களில் சேர்ந்திருக்கின்றார்கள். 95 வீதம் தீண்டத்தகாதவர்கள் என்று இந்தியாவில் கருதப்பபடும் பிள்ளைகள் படிக்கின்றார்கள். இது ஒரு பெரிய சாதனை எங்கேயா குப்பத்தில் இருந்த பிள்ளைகள் சரளமாக ஆங்கிலத்தில் பேசுகின்ற போது அவர்களுடைய பெற்றோர் கண்களிலே மலர்ச்சி தெரிகின்றது. விளையாட்டுக்கள், கணினி, பியானோ போன்ற இசைகள் சிறுவர்கள் பயிலுகின்ற போது கணிகளல் ஆனந்தக் கண்ணீர் வருகின்றது. 'அன்னச் சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்னும் வரிகளே ஞாபகத்தில் இருக்கின்றன. இவ்வாறான மனிதர்களிலேதான் நாம் இறைவனைக் காணுகின்றோம்.

    செவ்வாய், 9 ஆகஸ்ட், 2022

    என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்தியோர்



    அலையடித்து ஓய்ந்தது போல்
    என்மீது விழுந்த வாழ்த்தலைகள்
    மெல்ல மெல்ல சாந்தி பெறுகின்றன
    ஓரப் பார்வையால் பார்க்கிறேன்
    இன்னும் தூறல்கள் தாலாட்டுகின்றன
    காலம் தன் கண்களை உயர்த்தி - என்
    வாழ்நாள்களை கணக்கு வைக்கிறது
    சுற்றுகின்ற பூமியும் நரம்புகளின் வலுவுக்கு
    எச்சரிக்கை கொடுக்கின்றது - இருந்தாலும்
    மனதுக்குள் துணிவின் உச்சம் ஊற்றெடுக்கிறது
    உயர்வது எண்ணமா! உயர்த்துவது உலகமா!
    சிந்திச் சிதறிய காலங்கள்
    என்னைச் செதுக்கிய காலங்கள் - இனி
    சிந்தித்துச் செயலாற்ற எச்சரிக்கின்றன - இருப்பினும்
    எனக்குள் ஆழக் கடலாய் ஆர்ப்பரிக்கும் செய்தி
    நீ உனக்காகப் பிறந்தவள் அல்ல
    நீ உனக்காக வாழ்பவள் அல்ல
    காலம் கட்டளையிட்டுக் கொண்டே இருக்கிறது மீதமுள்ள காலங்கள் அதுவே
    என்னைக் கூட்டி செல்லும் தொடருவோம்
    என் பிறந்த நாளுக்கு வாழ்த்துரைத்த அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க மிக்க நன்றி


    எழுத்தாளர், கவிஞர், பாடகர் கூவிலூர் செல்வராஜன் 

     

    MTV தொலைக்காட்சி 



    வெற்றிமணி யின் இனிய பிறந்தநாள்
    வாழ்த்துக்கள்
    !
    வெற்றிமணி யின் சிறந்த படைப்பாளிகளின், ஒருவரும், தமிழ் வான் அவை ஸ்தாபகரும், கலைஞர், படைப்பாளிகள் என பன்முகப்பட்ட ஆளுமைகளை இனம்கண்டு பாராட்டும் சிறந்த பெண்மணியான கெளசி சிவபாலன் அவர்களுக்கு வெற்றிமணி யின் பிறந்தநாள்
    வாழ்த்துகள்
    .
    07.08.2022





    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...