• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 31 அக்டோபர், 2015

    கொண்டாட்டங்களுக்கு நன்கொடை ரசீதும்

             


    வந்தது மறந்து, வாழ்ந்தது மறந்து, வாழ வேண்டியது மறந்தது, தமிழர் போடும் ஆட்டம் புலம்பெயர்வில் அளவின்றிப் போய்விட்டது.  மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது திண்டாடும் பலரின் குரல்கள் பூனைக்கு மணி கட்டுவாரின்றிப் புலம்புகின்றது. சமுதாயக் குரலைப் பதிவு செய்யாத எவரும் எழுத்தாளராக நடமாட முடியாதல்லவா!

    ஆசைக்கு அளவுண்டு. பேராசைக்கு அழிவுண்டு. விழாக்களும் விருதுகளும் மலிந்து விட்டன. பணமும் புகழும் திறமையைத் தீர்மானிக்கின்றன. கொண்டாட்டங்களும் களியாட்டங்களும் அளவுக்கு அதிகமாகி விட்டன. கொள்கைகளும் கோஷங்களும்  கொஞ்சம் அடங்கியிருக்கின்றன. கலாச்சாரக் கலப்பும், அந்நிய மோகமும் பெற்றோருக்கு இனிப்பாகி விட்டன.

    புலம்பெயர்ந்தவுடன் பிள்ளைகளை அடுத்தடுத்துப் பெறும் கலாச்சாரம் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து போட்டி போட்டு பொறாமை கொண்டு அடுத்தவரைப் பார்த்துப் பார்த்தே பிள்ளைகளை வளர்க்கும் கலாச்சாரம் தொடர்ந்தது. மாற்றான் பிள்ளை நடனம் பயின்றால், என் பிள்ளை சங்கீதமும் நடனமும் சேர்ந்தே பயில வேண்டும். நேரமின்றி பிள்ளையை ஓடஓட விட்ட கலாச்சாரம் ஓய்ந்து விட்டது. தேவையைத் தீர்மானிக்காது அடுத்தவர் பார்வையைத் தீர்மானித்து வீடும் வாகனமும் வாங்கும் கலாச்சாரம் தொடர்ந்தது. இன்று கொண்டாட்டங்கள் கூடிவிட்டன.

    கொண்டாட்டங்கள்:

    இன்று கெண்டாட்டங்கள் களை கட்டுகிறன. ஒரே வீட்டில் பலவகை கொண்டாட்டங்கள். நச்சரிப்புடன் விருந்தினர் ஓய்வின்றி ஓடிக் கொண்டிருக்கின்றனர். வார இறுதிநாளில் வீட்டுக்கடமைகள் முடிக்க முடியாது திண்டாடும் வேலைக்குப் போகும் தமிழர்கள். பிள்ளை பிறந்தவுடன் அதன் துடக்குக் கழிக்கும் விழாவில் ஆரம்பித்து முதலாவது பிறந்தநாள் விழா, 10 ஆவது பிறந்தநாள் விழா, எத்தனை பெண்பிள்ளைகள் இருக்கின்றனவோ அத்தனைக்கும் பூப்புனிதநீராட்டு விழா, அத்தனைக்கும் பிறந்தநாள் விழா, 18 ஆவது பிறந்தநாள் விழா, நிச்சயதார்த்தம், திருமணவிழா, வளைகாப்பு, மீண்டும் குழந்தை பிறந்த கொண்டாட்டம், 50 ஆவது பிறந்தநாள், 60 ஆவது பிறந்தநாள், 25 ஆவது கல்யாணநாள். வீடு குடிபுகு விழா, இதுதவிர நடன அரங்கேற்றம், சங்கீத அரங்கேற்றம், மிருதங்க அரங்கேற்றம். வயலின் அரங்கேற்றம் எனத் தொடரும் வாழ்வில் தொடரும் கொண்டாட்டங்கள் மிதமிஞ்சிய நிலையில் புலம்பெயர் தமிழர் குதூகலிக்கின்றனர். ஆடம்பரத்திற்கே திருமணம் என ஆடம்பரத் திருமணத்திற்காக கல்வியையே விட்டெறிந்து விட்டு தொழிலுக்குப் போகத் தொடங்கியுள்ள ஒரு இளைய சமுதாயம் உருமாறுகிறது. 

    தமது ஆசைக்காக விழாக் கொண்டாடுவோருக்கு ஒரு ஆலோசனை கூற ஆசைப்படுகின்றேன். விழாக்களுக்கு விருந்தினரை அழைக்கும்போது "பரிசுப் பொருள்கள் தர விரும்புவோர். தாய்நாட்டிலே பசி பட்டினியால் வாடுவோர், அன்றாடம் உணவுக்கு அல்லாடுபவர்கள் அதிகம் இருக்கின்றார்கள். அவர்கள் தேவைக்கான பணத்தை அனுப்பிவிட்டு அந்த ரசீதை எங்களுக்கு அன்பளிப்பாகத் தாருங்கள்'' என்று அழைப்பிதழ் கொடுத்தீர்கள் என்றால், நீங்கள் விழாக் கொண்டாடுவதில் பெருமை இருக்கின்றது. இதன் மூலம் புண்ணியம் தேடுபவர்களாகவும் ஆவீர்கள் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன்.

    கலாச்சாரச் சீர்கேடு:

    விவாகரத்து மலிந்து விட்ட நிலையில் அந்நிய மோகத்தில் அல்லாடும் பெற்றோர். பிள்ளைகளின் கலாச்சாரச் சீர்கேட்டை மறைத்துக் காத்த  காலம் மலையேறிவிட்டது. இன்று பெற்றோர் போற்றிப் பாராட்டும் காலம் வந்து விட்டது. பிழையைச் சரியென்பது போல், கலாச்சாரச் சீர்கேட்டை ஊர் கூடிக் கொண்டாடும் காலம் நடைபெறுகின்றது. மறைவில் மகிழ வேண்டிய விடயங்கள் படம் போட்டு முகநூலில் படம் விரித்துக் காட்டப்படுகின்றன. திரைப்படங்கள் திரை விரித்த நிகழ்வுகள் வாழ்வில் அம்பலப்படுத்தப்படுகின்றன. எதுவானாலும் பெற்றோர் தயார் என்னும் நிலைமை பிள்ளைகள் துணிந்துவிட்டனர். 


    நூல் வெளியீடு:

    அன்றைய நாளில் தேவை கருதி தேவைப்படும் நூலை வாசிகசாலை சென்றும் கடையில் வாங்கிப் படித்து, ஆய்வுக்கட்டுரைகள் எழுதியும் வாசித்தும் ஆவல் தீர்த்த காலங்கள் மறைந்து விட்டன. நூல் வெளியீடு என்ற பெயரிலே தரமற்ற தமது படைப்புக்களை கைகளில் திணித்து பணத்தைத் தாருங்கள் என்று கட்டாயப்படுத்தும் கலாச்சாரம் அதிகரித்துவிட்டது. நூல்வெளியீடு என்றவுடன் வருவதற்குத் தயங்கும் மக்கள் நம்மவர் மத்தியில் அதிகரித்துவிட்டனர். இதன் மூலம் தரமான படைப்புக்களை வெளியீடு செய்வதற்கு எழுத்தாளர்கள் தயங்கி நிற்கின்றனர். புத்தகம் என்னும் போது அந்நூலினுள் புகுந்து வெளிவரும் போது ஒரு புதிய அநுபவம் கிடைக்க வேண்டும். அந்நூலைத் தேடிப்பெற வேண்டும். வாசகன் தன் தேவை கருதி ஒரு நூலை வாங்கிப் படிக்க வேண்டும். கண்டவற்றையெல்லாம் அள்ளிப் போடும் குப்பைத் தொட்டிலல்ல எமது மூளை. இதைப் படைப்பாளிகள் புர்pந்து கொள்ள வேண்டும். 

    இன்னும் உண்டு தொடர்வோம்.







    ஞாயிறு, 25 அக்டோபர், 2015

    செவ்வரத்தை நூல் வெளியீட்டு விழா (17.10.2015)


    இலக்கியப் பரப்பிலே இனம் காணப்பட வேண்டிய நிகழ்வு. இலைமறை காய்களாய், இலங்கையில் போர் நிமிர்த்தங்களினால் வறுமையில் நலிவடைந்து வாழுகின்ற  எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பணியிலும் உதவி செய்யும் மனப்பாங்கிலும ஜேர்மனி எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில்; 134 பேர்களின் 141 கதைகள் பங்கு பற்றின. 17 வயதிலிருந்து 73 வயது வரையுள்ளோர் சிறுகதைகளை எழுதி அனுப்பியிருந்தார்கள். 

    இதில் தெரிவுக்குழுவினால் தெரிவுசெய்யப்பட்ட முதலாம் பரிசுக்குரிய சிறுகதைக்கு 25,000 ரூபாய்கள் பரிசுத் தொகையும் இரண்டாம் பரிசுக்குரிய சிறுகதைக்கு10,000 ரூபாய்கள் பரிசுத் தொகையும், மூன்றாம் பரிசுக்குரிய சிறுகதைக்கு 5,000 ரூபாய்கள் பரிசுத் தொகையும் வழங்கியிருந்தார்கள். அத்துடன் இத்துடன் இணைத்து போட்டியில் பங்குபற்றிய 50 சிறந்த சிறுகதைகளைத் தெரிவுசெய்து செவ்வரத்தை என்னும் நூலாக 17.10.2015 அன்று வெளியீடு செய்திருந்தார்கள். 

    அற்புதமாக நடந்தேறிய இந்நிகழ்வில் இலங்கையில் இருந்து வைத்திய கலாநிதி திரு.ஞானசேகரம் அவர்கள் வருகை தந்திருந்தார். சிறப்பு விருந்தினர்களாக டென்மார்க் நகரிலிருந்து எழுத்தாளர் ஜீவகுமரன் அவர்களும் இலங்கை ஆசிரியர் சங்க ஓய்வு பெற்ற செயலாளர் திரு. சரவணபவானந்தன் அவர்களும் வருகை தந்திருந்தார்கள். நூலாய்வினை ஆன்மீக எழுத்தாளர் திருமதி. ஞனம் ஞானசேகரன் அவர்கள் செய்திருந்தார். 

    இந்நிகழ்வின் சில நிழற்படங்கள் 








     










    ஞாயிறு, 4 அக்டோபர், 2015

               
                         இணையத் தமிழனை இணைக்கும் விழா  



               காலம் என்னும் காற்று எமைப் புரட்டிப் போட்டாலும்
               வாழ்க்கை என்னும் சூழல் எமை வதைத்து நின்றாலும்
               தமிழென்னும் கைத்தடி கொண்டு தடுமாறா மனம் கொண்டு 
               எழுத்தால் என்றும் எழுந்து நிற்போம் 

    அமீபாவாய்த் தோன்றி மனிதக் குரங்காய் பரிணாமங் கண்டு இன்று மனிதனாய் பெருமை கொண்டு ஒன்றாய்க் கூடிக் குதூகளித்தோம். விலங்கைச் சுட்டு, மரங்களில் பறித்து உணவை உண்டோம்.  காலம் கரைந்தது கூடிய வாழ்வு குலைந்தது. நாடாகப் பிரிந்தோம். இனமாகப் பிரிந்தோம். மனிதனுடன் மனிதன் பேசவே நேரமின்றி, பறந்து திரிந்தோம். இன்று கணனி எமைப் புரட்டிப் போட்டது. தேசத்தால், மொழியால், இனத்தால் பிரிந்தவர்கள் இணையத்தால் இணைந்து மொழியால் கூடிநிற்கின்றோம். யாரையும் யாரும் தேடலாம், யாரோடும் யாரும் தொடர்பு கொள்ளலாம். ஆதி என்ன? அதில் எம் எம் மொழி எங்கே? உண்மை புரிகிறது. அதை உலகம் புரிகிறது. கணனித் திரை காட்டிய உண்மை, உலகத் தலைக்குள் புகுந்து கொள்ளும் நாளும் நெருங்கும் நாளை நம்பிக் கிடக்கிறது நம் இதயம். 

      இந்நிலையில் புதுக்கோட்டை தலைநிமிர்ந்து நிற்கும் வலைப்பதிவர் திருவிழா நெஞ்சுக்குள் மகிழ்வை நிறைத்துத் தருகின்றது. 

    தமிழென்னும் ஓர் இனம் உண்டு தனியே அதற்கோர் இடமுண்டு என்று உலகு உச்சம் தலையில் வைத்துக் கொண்டாடும் நாள் நெருங்கிவிட்டது.  

    இவ் வலைப் பதிவர் திருவிழாவிற்கு வலை உலக அன்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...