• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 4 அக்டோபர், 2015

               
                         இணையத் தமிழனை இணைக்கும் விழா  



               காலம் என்னும் காற்று எமைப் புரட்டிப் போட்டாலும்
               வாழ்க்கை என்னும் சூழல் எமை வதைத்து நின்றாலும்
               தமிழென்னும் கைத்தடி கொண்டு தடுமாறா மனம் கொண்டு 
               எழுத்தால் என்றும் எழுந்து நிற்போம் 

    அமீபாவாய்த் தோன்றி மனிதக் குரங்காய் பரிணாமங் கண்டு இன்று மனிதனாய் பெருமை கொண்டு ஒன்றாய்க் கூடிக் குதூகளித்தோம். விலங்கைச் சுட்டு, மரங்களில் பறித்து உணவை உண்டோம்.  காலம் கரைந்தது கூடிய வாழ்வு குலைந்தது. நாடாகப் பிரிந்தோம். இனமாகப் பிரிந்தோம். மனிதனுடன் மனிதன் பேசவே நேரமின்றி, பறந்து திரிந்தோம். இன்று கணனி எமைப் புரட்டிப் போட்டது. தேசத்தால், மொழியால், இனத்தால் பிரிந்தவர்கள் இணையத்தால் இணைந்து மொழியால் கூடிநிற்கின்றோம். யாரையும் யாரும் தேடலாம், யாரோடும் யாரும் தொடர்பு கொள்ளலாம். ஆதி என்ன? அதில் எம் எம் மொழி எங்கே? உண்மை புரிகிறது. அதை உலகம் புரிகிறது. கணனித் திரை காட்டிய உண்மை, உலகத் தலைக்குள் புகுந்து கொள்ளும் நாளும் நெருங்கும் நாளை நம்பிக் கிடக்கிறது நம் இதயம். 

      இந்நிலையில் புதுக்கோட்டை தலைநிமிர்ந்து நிற்கும் வலைப்பதிவர் திருவிழா நெஞ்சுக்குள் மகிழ்வை நிறைத்துத் தருகின்றது. 

    தமிழென்னும் ஓர் இனம் உண்டு தனியே அதற்கோர் இடமுண்டு என்று உலகு உச்சம் தலையில் வைத்துக் கொண்டாடும் நாள் நெருங்கிவிட்டது.  

    இவ் வலைப் பதிவர் திருவிழாவிற்கு வலை உலக அன்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

    3 கருத்துகள்:

    1. தங்களது பங்களிப்புக்கு நன்றி சகோ.

      பதிலளிநீக்கு
    2. வணக்கம்...

      தாங்களும் விமரிசனப் போட்டியில் கலந்து கொள்ளலாம்...

      இணைப்பு : →இங்கே சொடுக்கவும்

      புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
      அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...