• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

    Neuralink Ni




    Brain computer interface research or brain machine interfaces



     மனிதனின் இதயத்தில் கை வைத்தாகள். இதய மாற்று சத்திரசிகிச்சை, கல்லீரல், சிறுநீரகம், என்று ஒவ்வொரு உறுப்பாகக் கை வைத்து வெற்றியும் கண்டுள்ளார்கள், இப்போது மனிதனின் மூளையில் கை  வைக்கப்பட்டுள்ளது. 

    மனிதனின் உடலை இயக்குவது மூளை. மூளையிலுள்ள நியூரன்ஸ் உயிரணுக்கள் மூலமாக சிக்னல் அனுப்பப்பட்டு உடலுக்குத் தேவையானவற்றை இந்த மூளை செய்கின்றது. அதுதான் மூளை தான் எங்களுடைய Head of the Department. 10 எங்களுடைய மூளையில் 10 ஆயிரம் கோடி நியூரன்ஸ்கள் இருக்கின்றன. நியூரன்ஸ் சிக்னல் அனுப்புவதற்கு 20 வார்ட்  மின்சாரம் இருந்தால் போதும்.


    இப்போது இந்த நியூரன்களைத் தம்முடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஒரு chip மூளையிலே பொருத்துகின்றார்கள். இதன் மூலமாக நியூரன்கள் பயிற்சி பண்ணாமல் இலகுவாக மேலதிகமாக வேலை செய்ய வைக்கிறார்கள்

    மூளையில் இருந்து வருகின்ற signal computer க்கு அனுப்பி மற்ற மூளையை control பண்ண முடியும் இதனால்

    நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்

    ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்

    மனச்சிதைவால் பாதிக்கப்பட்டவர்கள்.

    பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.

    அல்ஸ்கைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.

     இந்த சத்திரசிகிச்சையின் மூலம் சுகமடைவார்கள்,

    எலன் மாஸ்க் தான் இதனை ஆரம்பித்தவர் 2016 இல் இந்த பரிசோதனை கலிபோர்னியாவில் Neuralink என்ற நிறுவனத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 

    முதலில் பன்றியில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  இதற்கு Gertrud செயற்பாடு எனப் பெயர் வைத்தார்கள். அதன் பின் 2021 இல் குரங்கில் செய்துபார்த்து 90 வீதம் வெற்றி கண்டார்கள். இப்போது மனிதர்களில் இந்த சிப் பொறுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு 28 ஆம் திகதி ஜனவரி மாதம் ஒரு மனிதனில் பொருத்தி இருக்கின்றார்கள். இதுவரை எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை.

    இது எப்படி என்றால் ஒரு சிறிய நாணயம் போன்ற ஒரு சாதனம் இருக்கும் அதிலே நியூரோன்களைப்போல மெல்லிய வயர்கள் இருக்கும். இவை பொலி மேட் என்ற பொருளால் செய்யப்பட்டு  இருக்கும்.  மண்டையிலே ஒரு சிறிய துவாரம் போட்டு அதற்குள் இந்த சிப்பை  மூளையிலே பொருத்தி விட்டு மூடி விடுவார்கள். இந்த சத்திரசிகிச்சை 30 நிமிடங்களில் முடிந்துவிடும். இரத்தக் கசிவு பெரிதாக இல்லை. மயக்கம் மருந்து தேவை இல்லை. வலி இருக்காது

     


    மூளையிலுள்ள date க்கள் computer உடன்  transfer பண்ணப்பட்டு

    ஒரே நேரத்தில் 1024 கம்ப்யூட்டர்களுடன் இந்த சிப்ஸை இணைக்கலாம்

    இந்தச் சிப்புக்கான பேட்டரி 24 மணி நேரங்கள் தொழிற்படும். இதற்குரிய battery சார்ஜ் பண்ணக்கூடியது. wireless charge . மூளைக்கு உடலுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை ஏனென்றால் மூளையை விட எட்டு மடங்கு சிறிய சென்சார் இருப்பதனால்  மூளைக்கோ எந்த வித உறுப்புகளுக்கோ பாதிப்பு இல்லை

    கணினி போன்ற  எலக்ட்ரானிக் பொருட்களுடன் இணைக்கலாம். அப்படி இணைக்கும் போது உங்களுடைய மூளை என்ன செய்ய நினைக்கிறதோ அதை உடனே கண்டு பிடித்து விடலாம்.

     மனதை அறியும் கருவி இருந்தால் என்று கட்டுரை எழுதினேன். இப்போது வந்து விட்டது. நீங்கள் நினைப்பதை அறிந்து விடலாம்.

     

     

     

     

     

     

     

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...