வெள்ளி, 19 ஏப்ரல், 2013
ஞாயிறு, 14 ஏப்ரல், 2013
2013 சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துகள்
ஆண்டுகளோ கடக்கின்றன
ஆர்வமோ குறையவில்லை
ஆசைகளோ அடங்கவில்லை
தேவைகளோ தீரவில்லை
தேடல்களோ நிற்கவில்லை – அதனால்
ஆராய்ச்சிகளோ அடங்கவில்லை
தேடித்தேடி மனிதன்
தேவையெல்லாம் தீர
காணவொண்ணா காட்சி
கண்ணில் நிதமும் காண
வேளை கருதா வாழ்வில்
வேலை தொடர்ந்து ஆற்ற
வெற்றி பெற்றே வாழ்வு
வேண்டியதைக் காண
புதுமைகள் பெருகியுலகு
வியத்தகு விந்தையில் களிக்க
விரும்பிய வாழ்வு பெற்றே மனிதன்
பிறப்பின் பெருமை உணர
வருடப் பிறப்பிதனில்
மனதார வாழ்த்துகிறேன்.
சனி, 6 ஏப்ரல், 2013
மனதை அறியும் கருவி இருந்தால்.....
குழந்தையாய்ப் பிறந்தோம்
குணம்நாடி வளர்ந்தோம்
உள்ளொன்றும் வெளியொன்றும்
உதட்டிலொன்றும் மனத்திலொன்றும்
உலகத்து மேடைiயிலே
உத்தம நடிப்பு
முகத்திலே புன்சிரிப்பு
மனத்திலே புளுக்கம்
நேரிலே புகழ்ச்சி
மறைவிலே இகழ்ச்சி
போதும் போதும்
பொய்யான உலகை – நாம்
மெய்யாக நினைத்து
வெள்ளையாய்ப் பேசி
வீண்வம்பு விலைக்கு வாங்குவது
போதும் போதும்.......
குறைநிறை மனம் எங்குதான்உண்டு
தேடித்தேடிப் புலம்பும் மனதுடன்
விடைகாணவொண்ணா வினாவுக்கு
விளக்கம் காண வேண்டிக் கேட்கிறேன்
விஞ்ஞானிகளே!
விக்கினங்கள் தீர்க்குமோர் கருவியாம்
வியத்தகு கருவியாம் மனதை அறியும் கருவியை
விரைந்துதான் தரமாட்டீரோ
விடைதரமாட்டீரோ
குணம்நாடி வளர்ந்தோம்
உள்ளொன்றும் வெளியொன்றும்
உதட்டிலொன்றும் மனத்திலொன்றும்
உலகத்து மேடைiயிலே
உத்தம நடிப்பு
முகத்திலே புன்சிரிப்பு
மனத்திலே புளுக்கம்
நேரிலே புகழ்ச்சி
மறைவிலே இகழ்ச்சி
போதும் போதும்
பொய்யான உலகை – நாம்
மெய்யாக நினைத்து
வெள்ளையாய்ப் பேசி
வீண்வம்பு விலைக்கு வாங்குவது
போதும் போதும்.......
குறைநிறை மனம் எங்குதான்உண்டு
தேடித்தேடிப் புலம்பும் மனதுடன்
விடைகாணவொண்ணா வினாவுக்கு
விளக்கம் காண வேண்டிக் கேட்கிறேன்
விஞ்ஞானிகளே!
விக்கினங்கள் தீர்க்குமோர் கருவியாம்
வியத்தகு கருவியாம் மனதை அறியும் கருவியை
விரைந்துதான் தரமாட்டீரோ
விடைதரமாட்டீரோ
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
விழி சொல்லும் கதைகளை விட மனம்சொல்லும் கதைகள் உணர்வுபூர்வமானவை
விழி சொல்லும் கதைகளை விட மனம்சொல்லும் கதைகள் உணர்வுபூர்வமானவை காரணமில்லாமல் மனம் சிலரைத் தேடும். முன்னமே ஒட்டி உறவாடி விட்டுச் சென்றவர்களி...
-
“ அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை அணைந்து கொள்! உன்னைச் சங்கமமாக்கு மானிட சமுத்திரம் நானென்ற...
-
மட்டக்களப்பார் பாயோடு ஒட்ட வைத்துவிடுவார் என்ற செய்தி இலங்கையில் பரவலாகப் பேசப்படும் செய்தி. அந்தப் பாய் எங்கே கிடைக்கும் என்று என்னிடம் பலர...
-
காதல் என்பது எதுவரை, கல்யாணக் காலம் அதுவரை, கல்யாணம் என்பது எதுவரை கழுத்தினில் தாலி வரும் வரை என்பது கவிஞர் பாடல். அப்படியானால் காதல் கல்யாண...