• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

    2013 சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துகள்



    ஆண்டுகளோ கடக்கின்றன
    ஆர்வமோ குறையவில்லை
    ஆசைகளோ அடங்கவில்லை
    தேவைகளோ தீரவில்லை
    தேடல்களோ நிற்கவில்லை – அதனால்
    ஆராய்ச்சிகளோ அடங்கவில்லை

    தேடித்தேடி மனிதன்
    தேவையெல்லாம் தீர
    காணவொண்ணா காட்சி
    கண்ணில் நிதமும் காண
    வேளை கருதா வாழ்வில்
    வேலை தொடர்ந்து ஆற்ற
    வெற்றி பெற்றே வாழ்வு
    வேண்டியதைக் காண


    புதுமைகள் பெருகியுலகு
    வியத்தகு விந்தையில் களிக்க
    விரும்பிய வாழ்வு பெற்றே மனிதன்
    பிறப்பின் பெருமை உணர
    வருடப் பிறப்பிதனில்
    மனதார வாழ்த்துகிறேன்.

    சனி, 6 ஏப்ரல், 2013

    மனதை அறியும் கருவி இருந்தால்.....



           
               

    குழந்தையாய்ப் பிறந்தோம்
    குணம்நாடி வளர்ந்தோம்
    உள்ளொன்றும் வெளியொன்றும்
    உதட்டிலொன்றும் மனத்திலொன்றும்
    உலகத்து மேடைiயிலே
    உத்தம நடிப்பு
    முகத்திலே புன்சிரிப்பு
    மனத்திலே புளுக்கம்
    நேரிலே புகழ்ச்சி
    மறைவிலே இகழ்ச்சி
    போதும் போதும்
    பொய்யான உலகை – நாம்
    மெய்யாக நினைத்து
    வெள்ளையாய்ப் பேசி
    வீண்வம்பு விலைக்கு வாங்குவது
    போதும் போதும்.......
    குறைநிறை மனம் எங்குதான்உண்டு
    தேடித்தேடிப் புலம்பும் மனதுடன்
    விடைகாணவொண்ணா வினாவுக்கு
    விளக்கம் காண வேண்டிக் கேட்கிறேன்

    விஞ்ஞானிகளே!
    விக்கினங்கள் தீர்க்குமோர் கருவியாம்
    வியத்தகு கருவியாம் மனதை அறியும் கருவியை
    விரைந்துதான் தரமாட்டீரோ
    விடைதரமாட்டீரோ

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...