• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்
    Songs லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
    Songs லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

    வியாழன், 10 மார்ச், 2011

    கல்யாணத் தேதி குறித்தாச்சு,



    கல்யாணத் தேதி குறித்தாச்சு, 
    கச்சேரி மேளம் பிடித்தாச்சு 
    பத்திரிகை அடிக்க விட்டாச்சு, 
    ஊரெல்லாம் சேதி பறந்தாச்சு
    கல்யாணக் கோலம் காணக் 
    கிலுகிலுப்பு மனசுக்குள்ளே
                                                                                                                      (கல்யாணத்......)
    மலையடிவாரக் காற்றுக்கெல்லாம் 
    வரவேற்புக் கொடுக்க வேண்டும்
    நான் மடிசாய்ந்த மரநிழலில் 
    மணவறைதான் போட வேண்டும்
    சோலைக்குயில்களெல்லாம் கூட்டி வந்து 
    கச்சேரி வைக்க வேண்டும்
    ஆற்றங்கரை நாணல்களை 
    ஆடச் சொல்லிக் கேட்க வேண்டும் 
                               
                                                                                                                     ( கல்யாணத்.....)
    எங்கள் உறவுக்குத் துணை வந்த
    உல்லாச வான் நிலவு விளக்கெரிக்க
    தாரகைகள் சரவிளக்காய் 
    தனிப் பொலிவு காட்டி நிற்க
    சக்கரையில் தேன் கலந்து
    சொக்கும் உந்தன் சொல்லாலே
    நித்தமும் நான் கலந்திருக்க 
                                             
                                                                                                                      (கல்யாணத்....)

    வியாழன், 27 ஜனவரி, 2011

    தாயார் பாடல்




    கீச்சுமூச்சுத் தம்பலம் கீயோமாயோத் தம்பலம்
     கீதமாச்சு உங்கள் நினைவோ தம்பலத்தில்
     கீதமாச்சு உங்கள் நினைவோ தம்பலத்தில்

    பல்லாங்குழி ஆட நானும்
     சொல்லாமத்தான் போனபோது
     சொல்லிச்சொல்லி அடிச்சஅடி வலிக்கவில்லை - நீங்க
     சொல்லாமாத்தான் போன அடி வலிக்கிறதுநெஞ்சில்
     சொல்லாமத்தான் போன அடி வலிக்கிறது.

     கிட்டிப்பொல்லு அடித்த அடி
     பட்டு நானும் பதறியதும்
     கட்டிவந்து அணைத்த சுகம் மறக்கவில்லைநீங்கள்
     விட்டுச்சென்று போனசுகம் மறக்கவில்லைஎன்னை
     விட்டுச் சென்று போனதுயர் கனக்கிறதுஎன்னை       
     விட்டுச் சென்று போனதுயர் கனக்கிறது.

     சின்னச்சோறு நான் சமைக்க
     கன்னத்திலே முத்தமிட்டு
     தித்திப்பதாய்ச் சொன்னசொல்லு மறக்கவில்லைஉங்கள்
     தித்திப்பான உணவுதேடி ஏங்கிறதுமனம்
     தித்திப்பான உணவு தேடி ஏங்கிறது

    ஆணும் ஆணும் குழந்தை பெற விஞ்ஞானம் சாத்தியமாக்குமா?

      ஆண் பெண் என்னும் இரு பால் பிரிவினர் உயிரினங்களிடையே காணப்படுகின்றன . இவை பால் கவர்ச்சியின் மூலமும் இயற்கை அமைப்பின் மூலமும் ஒன்றோடு ஒன...