• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வியாழன், 10 மார்ச், 2011

    கல்யாணத் தேதி குறித்தாச்சு,



    கல்யாணத் தேதி குறித்தாச்சு, 
    கச்சேரி மேளம் பிடித்தாச்சு 
    பத்திரிகை அடிக்க விட்டாச்சு, 
    ஊரெல்லாம் சேதி பறந்தாச்சு
    கல்யாணக் கோலம் காணக் 
    கிலுகிலுப்பு மனசுக்குள்ளே
                                                                                                                      (கல்யாணத்......)
    மலையடிவாரக் காற்றுக்கெல்லாம் 
    வரவேற்புக் கொடுக்க வேண்டும்
    நான் மடிசாய்ந்த மரநிழலில் 
    மணவறைதான் போட வேண்டும்
    சோலைக்குயில்களெல்லாம் கூட்டி வந்து 
    கச்சேரி வைக்க வேண்டும்
    ஆற்றங்கரை நாணல்களை 
    ஆடச் சொல்லிக் கேட்க வேண்டும் 
                               
                                                                                                                     ( கல்யாணத்.....)
    எங்கள் உறவுக்குத் துணை வந்த
    உல்லாச வான் நிலவு விளக்கெரிக்க
    தாரகைகள் சரவிளக்காய் 
    தனிப் பொலிவு காட்டி நிற்க
    சக்கரையில் தேன் கலந்து
    சொக்கும் உந்தன் சொல்லாலே
    நித்தமும் நான் கலந்திருக்க 
                                             
                                                                                                                      (கல்யாணத்....)

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...