• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வியாழன், 17 மார்ச், 2011

    சதக் சதக்


    நண்டு சிப்பி வேய் கதலி 
     நாசமுறுங் காலம் கொண்ட கருவழிக்கும்
    நாவினிக்க நாமுண்ணப் பழம் நமக்களிக்கும் 
     நல்ல கதலி சதக், சதக்

    மண்ணாளும் மன்னனும் மண்ணாசை கொண்டு – பல 
     மன்னுயிர்கள் மாள வன்முறையில் வாளெடுத்தான் 
    சதக், சதக் சதக் சதக் 
     சாய்ந்தன உடல்கள் சாதனை படைத்தான்

    ஆண்டவன் தரிசனம் ஆன்மீகப் பயணம்
     வேண்டிய வரங்கள் தேடியே ஆலயப்பயணம் - அங்கே
    அரக்கர்கள் போலே சதக் சதக் 
     அடுக்கிய உடல்கள் அநாதரவாய் உறவுகள்.

    விருந்தினர் வருகை விருப்புடன் உணவு
     விருந்தோம்பல் பண்பில் விலங்குகள் வதை
    சதக்,சதக் வெட்டிய இறைச்சியில் விலங்குகள் உயிர்கள் 
     துடித்தது அறியாச் சுவையான உணவு

    தொட்டில் தொட்டுப் பாடை வரையில் 
     தொடர்ந்து வரும் ஒரு சொந்தம் - நாம் 
    வளர்ந்து வரும் காலமெல்லாம துணைவரவே – மனிதர்
     மாளச்செய்த மரங்களும் சதக்,சதக்

    சதுப்பு நிலத்தில் விழுந்த மனிதன் 
     வழுக்கி வழுக்கி சதக், சதக்
    எழுந்து நடக்கப் புதைந்த கால்கள்
     எடுத்த போதும் சதக், சதக்

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...