• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    புதன், 29 மே, 2013

    எதிர்நீச்சல்




    அதிர்ஷ்டம் எப்போது, எப்படி, யாருக்கு, வரும் என்று யாருக்குமே தெரியாது. இந்த உலகத்தில லக், அதிர்ஷ்டம் எல்லாமே பொய் அது நமக்கு நடக்கிறவரைக்கும். உண்மை! இதை யார் செல்கிறார் என்பதைப் பொறுத்து இருக்கின்றது.  உண்மையைச் சந்தித்தவர் சொல்கின்ற போது நம்பித்தான் ஆகவேண்டும்.
          
    இவர் சாதாரணமானவர்தான். ஆனால், பார்த்தவுடன் கவரக்கூடிய வசியமிக்கவர். கண்களால் கதைபேசும் வல்லவர், வார்த்தைகளால் வசியம் போடுபவர், விஜய் ரிவியின் செல்லப்பிள்ளை. நகைச்சுவை என்னும் ஆயுதத்தைக் கையிலெடுத்து பலபடிகள் உயர்ந்தவர். தொலைக்காட்சியினுள் சாதாரணமாய் நுழைந்தார். இன்று சரித்திரம் படைக்க விழைகிறார். அவர்தான் சிவகார்த்திகேயன். பச்சைப்பிள்ளைபோல் பரிதாபமான பார்வை. பார்வையிலே கலந்திருக்கும் நடிப்பு. ஆழமாய்ப் பார்த்தார் தனுஷ். அறிந்து கொண்டார். ஆளாக்க நினைத்தார். கதாநாயகனாக்கினார். ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனார். எதிர்நீச்சல் இப்போது திரையரங்குகளில் நீச்சல் அடிக்கின்றது.
        
                   சிவகார்த்திகேயனுக்கென்றே எழுதப்பட்ட கதைபோல் எதிர்நீச்சல் அமைந்திருக்கின்றது. நகைச்சுவை கலந்த ரசிக்கும்படியான கதை. கதாநாகன் சிவகார்த்திகேயன் பெற்றோர் தனக்கு இட்ட பெயரை  தாய்ப்பாசம் காரணமாக மாற்றமுடியாது அப்பெயருடனேயே பல அவமானங்களைச் சந்தித்து இறுதியில் பெயரை மாற்றுவதற்கு முடிவெடுக்கின்றார். கரிஷ் என்று தன் பெயரை மாற்றுகின்றார். அக்கணமே அவர் வாழ்க்கையில் பல திருப்பங்கள் ஏற்படுகின்றன. அழகான காதலி பிரியா ஆனந்த், தொழில், அதையும் மீறி மருதன் ஓட்டப்போட்டியில் முதலிடம். வாழ்க்கையில் ஏதோ ஒன்று சாதித்துக் காட்ட வேண்டும் என்று காதலி மூலம் கிடைத்த அறிவுறுத்தலில் 100, 200, 1500 மீற்றர் எனப் பாடசாலைக்காலங்களில் ஓட்டப்போட்டியில் கலந்து வெற்றி கண்டவர். மருதன் ஓட்டப் போட்டியில் நடிகை நந்திதா வழிநடத்தலில் முதலிடம் பெறுகின்றார். வாழ்க்கையை எதிர்நீச்சல் போட்டு முன்னேறுகின்றார். கதை சாதாரணமானதுதான். ஆனால், டைரக்டர் R.S. துரை அவர்கள் கதையை அற்புதமாக சுவைக்கும்படி தந்திருக்கின்றார்.
         
                      திரைப்படம் முடியும் வரை எமது இதழோரம் ஒரு புன்னகை இருந்து கொண்டே இருக்கும். கதாநாயகன் சிவகார்த்திகேயன் மட்டுமல்லாமல் நண்பனாக நடிக்கும் சதீஷ் கூட தன் பாத்திரத்திற்கு ஏற்றாற்போல் நகைச்சுவையை நேர்த்தியாக வழங்கியிருக்கின்றார். மற்றைய நகைச்சுவை நடிகர்போல் யாரையும் கிண்டல் அடிக்காமல், மற்றவரை அடித்துத் துன்புறுத்தாமல் அல்லது தாம் அடி வாங்காமல் ஆர்ப்பாட்மில்லாத நகைச்சுவையைத் தந்திருக்கின்றார்கள். அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் இரசிக்கும்படியாக அமைந்திருக்கின்றன. ஒரு பாடல் காட்சியில் தனுஷ், அனிருத், நயன்தாரா  போன்றோர் இணைந்து கொள்கின்றனர்.
            

    திரைப்பட ஆரம்பக்காட்சி அற்புதமாக அமைந்திருக்கின்றது. பாடல்காட்சிகள் சிறப்பாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. லாறியில் சிவகார்த்திகேயன் அடிபடப்போவது போன்ற காட்சியில் சிவகார்த்திகேயன் முகத்தில் வளர்ந்த நடிகனின் நடிப்புத்திறமை வெளிப்படுகின்றது. அவர் கண்களில் நடிப்பு இருக்கின்றது. உடல்வாகு, முகத்தோற்றம், பேச்சு, நடனம், போன்றவை சிறந்த நடிகனாகக் காட்டுகின்றது. ஆனாலும், அவர் நடிப்பை வெளிப்படுத்தும் கடினமான காட்சிகள் இப்படத்தில் எடுத்தாளப்படவில்லை. சாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தும் படமாகவே வெளிவந்திருக்கின்றது. அலுப்படிக்காத இத்திரைப்படம் சிவகார்த்திகேயனை மனதில் பதிய வைக்கும் திரைப்படமாக அமைந்திருப்பது உண்மையே.
             

    ஞாயிறு, 19 மே, 2013

    ஆவிகளுடன் பேசுதல்


    "செத்துக் கிடக்கும் பிணத்தருகே
    இனிச் சாம்பிணங்கள்
    கத்துங் கணக்கென்ன காண்
    கயிலாயத்தானே''
                                              - பட்டினத்தார் -

    வரிகள் காட்டிய தெளிவு

                               இறந்தார் இழந்தாரே!       
    வாழத்தான் வந்தோம் வாழ்ந்துதான் பார்த்தோம்
    வாழ்க்கையும் இனித்தது, சில நாள்கள் கசந்தது
    வாழ்ந்தே தீரவேண்டுமென வாழ்க்கையும் வழி தந்தது
    போராடிப் போராடி வாழ்க்கையும் தோற்றது
    போதுமடா சாமியென போகத்துணிந்த உயிரும்
    போகவழிநாடி நோயுமொன்று தேடியே கண்டது
    உறவுக்கு ByeBye உலகுக்கு ByeBye - இன்று
    வாழ்க்கை மறந்து நான் வானம்பாடியாய்
    உடலற்ற உயிராய்ப் பறந்துதான் போனேன்


    சொந்தம் ஏதுமில்லை உலகம் தேவையில்லை
    உறவுகள் நினைவுமில்லை உடல்தான் இல்லையே
    மூளையும் தொலைந்தது வாழ்க்கையும் இழந்தது
    வாழ்க்கையைப் புரிந்து கொள்ள வடிவமற்ற காற்றுநானே
    போதுமடா சாமியென போய்விட்ட என்னை
    இறந்தவருடன் உரையாடவென அழைப்பதும்தா
    ன் ஏனோ!


    உடலுண்டா? குரலுண்டா? அலையலையாய் என் குரலும்
    உலகெங்கும் நிறைந்திருக்க குறிப்பாய் பிரித்தெடுக்கும்
    பெருந்திறனைப் பெற்றவர் திறனாலே – நான்
    பேசிவிட்ட சொற்கோர்வையைப் பிரித்தெடுத்து கேளுங்கள்
    புதிதாய்ப் பேச குரல்வளையை நான் எங்கே பெறுவேன்
    நினைத்துப் பேசும் மூளையை எப்படி முளைக்கவைப்பேன்
    காலம்காலமாய் கற்று வந்த மொழியுமில்லை
    பயிற்சியாலும் பழக்கத்தாலும் உணவாலும்
    வளர்ந்து வந்த உடலுமில்லை
    காற்றுக்குக் குரலேது உங்கள் கேள்விக்குப் பதிலேது
    புதிதாய்ப் பிறந்தாலும் பிறக்கவிருக்கும் புதிய
    உறவுக்கே நான் சொந்தம்
    புரியேன் உங்கள் சொந்தங்களை


    ByeBye

    சனி, 11 மே, 2013

    வலி தாங்கி வாழ்வளித்த வாழ்விளக்கு

    கவிதையை என் குரலில் கேட்க பச்சை பட்டனை அழுத்தவும்



    கரு தாங்க நிறை வலி உடலெங்கும் பாய
    உடலுள்ளுள்ளே புரியாத உயிரொன்று புரண்டிடவே
    ஒவ்வாத குணம் கொண்ட குடலது வயிற்றை குமட்டி வர
    வாந்திவாந்தி என்று குடலே வெளிவருமாப் போல்
    குணமொன்று தொண்டையிலே தொடர்ந்து வர
    கருவென்ற காரணம் கருத்தே புரிந்து கொண்டு
    உணவெதுவும் உடலுக்கு உதவாது வெளிவரினும்
    உணர்வெல்லாம் கருவிலே பதிந்திருக்க
    சிறிதளவு தானேதும் கருவுக்குச் சேர்ந்திடவே
    வலியோடுணவு உண்ட மகத்தான மாதாவே! – நான்
    உறங்க உன் மடி என்றும் தேவை.

    கடினமான கல்போல் கருவொன்று உந்தியிலே உதைத்திருக்க
    கட்டிலிலே புரண்டு திரும்பி சரிந்து படுக்கவொண்ணா
    நிலையது தோன்றிடினும் வயிறது தடவி
    நிலையது புரிந்து நீண்ட மூச்சை உள்இழுத்து வெளியிட்டு
    நயனமது இறுகமூடி நவரத்தினம் அத்தனையும் ஒன்றாய்க்
    கூட்டிய அழகுமகவு காண பொறுத்திருக்கும்
    பொறுமையின் பெட்டகமே பேருண்மைப் பாசமே!
    என் தலைதடவ உன் கரமென்றும் தேவை.

    இருபது எலும்புகள் இணைந்தே உடைவதுபோல்
    உடலிலே வலி எடுக்க மனிதன் தாங்கும் வலி
    உலகக் கணக்கு நாற்பத்தைந்தே அலகுகளாயிடினும்
    உடல் துடிதுடிக்க ஐம்பத்திரண்டு அலகுகள் பிரசவவலி
    அதிசயமாய் தாங்கியே தான் கருவறை தாங்கிய உயிர்
    உலகிலே நடமாட உருத்தந்த உன்னத உயிரே!
    உயிருள்ளவரை உன் அருகிருக்க அருளொன்று தேவை.

    பிரண்டு தவண்டு நடந்து நிமிர்ந்து நலமெல்லாம் நாம்காண
    வலியெல்லாம் தான்கண்டு சுகமெல்லாம் எமக்களித்து
    பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவையென
    பருவங்கள் அத்தனையும் பாடாய்ப்படுத்தி
    பருவங்கள் தோறும் பற்பல பிரச்சனைகள் பலவிதமாய்
    வகைவகையாய்த் தந்தே பாடாய்ப்படுத்திய எம்மை
    ஆதரவாய் அணைத்தெடுத்து ஆறுதலாய் அறிவுரைகள்
    ஆற்றியே வழிப்படுத்திய அன்புரிவே!
    ஆயுள்வரை உன் அரவணைப்பு எமக்கென்றும் தேவை.

    அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்







    வியாழன், 9 மே, 2013

    தந்தையர் தினம்

    அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்
     

    தந்தையே எனதருமை தந்தையே
    தந்தையே எனதருமை தந்தையே

    தோளில் என்னை சுமந்திடவே
    கால்கள் மார்பில் உதைத்தனவே
    கால்களுக்கு வலுத் தந்து – நான்
    வாழ்வதற்கு வழி காட்டிய
    தந்தையே எனதருமைத் தந்தையே

    விழுந்தவுடன் தூக்கிடாது
    எழுந்திருக்க எத்தனிக்கும்
    எண்ணத்தினை வளர்த்துவிட்டு – என்
    முயற்சிக்கு வழி காட்டிய
    தந்தையே எனதருமை தந்தையே

    சோர்ந்திடாத குணத்தினாலே
    குலங்களையே வாழவைத்தீர் – எதையும்
    தாங்குகின்ற மனத்தினராய்
    தாழ்வுகளை எதிர்த்து நின்றீர்
    தந்தையே எனதருமைத் தந்தையே

    ஊருக்காக உழைத்த நெஞ்சம்
    யாருக்காக சென்றதுவோ
    மறைந்து சென்ற மாயத்தினால் - எங்கள்
    மனங்களெல்லாம் தவிக்க வைத்த
    தந்தையே எனதருமை தநதையே

    சொன்ன சொற்கள் மனமெங்கும்
    சோர்வில்லாது நிறைந்திருக்க
    சோர்ந்த உங்கள் கண்களையே - இன்றும்
    சோர்விலாது தேடுகிறேன்
    தந்தையே எனதருமைத் தந்தையே

    சொந்தங்கள் சேர்ந்திடலாம்
    சொர்க்கத்தையே காட்டிடலாம்
    எந்த சொந்தம் அருகிருந்தும் – எந்தன்
    தந்தை சொந்தம் போலாமோ
    தந்தையே எனதருமைத் தந்தையே





    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...