• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 19 செப்டம்பர், 2015

    அழகு தேடும் இளமை

       
     அழகு காட்டி ஆசை ஊட்டி
    பணத்தை அள்ளப் பார்க்கும் கொடுமை
    விலைக்குப் போகும் பொருளின் விலையை
    விண்ணுக்குயர்த்தும் கொடுமை
    மதி மயங்கும் இளமை தன்னை
    மயக்கிப் போடும் வலிய புத்தி
    மடையர்களாய் மயங்கும் நுகர்வோர் தம்மை
    கணக்குப் போடும் முதலாளித் தன்மை

    கல்லும் பொன்னிறமும் மலிந்த உடையில்
    பணமும் மதிப்பும் மிதந்து நிற்கும்
    மயங்கி நிற்கும் இளமை இங்கு
    கறந்து நிற்கும் பெற்றோர் பணத்தை
    கையில் புரளும் பணத்தின் பலத்தால்
    கண்ணைக் கட்டி காசை எறியும்
    கண் கெட்ட மனிதர் ஆட்டம்
    எண்ணிப் பார்த்தால் ஏனோ வெறுப்பு

    புடவைக் கடையிலோர் பெண்ணின் ஆட்சி
    அடங்கிப் பணியும் கணவன் போக்கு
    ஐரோப்பியத் தமிழன் முதலாளிப் போக்கில்
    விற்பளையாளன் பயந்து நிற்கும் பாவக்காட்சி
    தொட்ட ஆடை பார்க்க முடியும்
    தொட்டு அணிய அநுமதி இல்லை
    கட்டிப் பார்க்கா ஆடை வாங்கி
    காட்சிப் படுத்தும் இளமையோ அதிகம்

    நுகர்வோரை மதிக்காத முறையற்ற விற்பனையால்
    ஐரோப்பியர் முன்னிலையில் தலைகுனியும் தமிழன்நிலை
    பெருக்கத்து வேண்டுவது பணிவென்று அறியாத
    படிப்பறிவற்ற பேதைகளால் தடுமாறும் தமிழனிங்கு
    பணம்புரளும் கரங்களுள்ளோர் பணத்தை வழங்க
    பாரிலுண்டு பல பரிதாப இல்லங்கள்
    பலநாள் அணியா ஆடையின் நாட்டத்தால்
    பணமும் மதிப்பும் இழத்தல் தகுமோ

    சொல்வீர்! சொல்வீர்! சொல்வீர்!



    5 கருத்துகள்:


    1. அருமை சகோ புகைப்படத்திற்க்கு ஏற்ற சிறப்பான வரிகள்.

      பதிலளிநீக்கு
    2. ஐரோப்பியர் முன்னிலையில்
      தலைகுனியும் தமிழன் நிலை - இப்படி
      எத்தனை நாடுகளில்...

      முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!
      http://www.ypvnpubs.com/2015/09/blog-post_18.html

      பதிலளிநீக்கு
    3. அன்புச் சகோதரிக்கு வணக்கம். நமது விழாத் தொடர்பான போட்டிக்கு எழுதியதுதானே இது? அப்படியெனில் “போட்டிக்கு வந்த படைப்புகள்” எனும் இந்த இணைப்பில் உள்ள உறுதிமொழிகளைத் தளத்தில் இணைத்து வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். பார்க்க - http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html நன்றி.

      பதிலளிநீக்கு
    4. கட்டிப் பார்க்கா ஆடை வாங்கி
      காட்சிப் படுத்தும் இளமையோ அதிகம்//
      என்ன செய்வது..இவைகளைப் பார்த்து
      மனம் துன்புற வேண்டியே உள்ளது.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...