• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

    ஆன்மாவின் ஈடேற்றம்




    மரம் இறந்தால் விறகாகும்
    மனிதன் இறந்தால் என்னாகும் என
    மனம் உறுத்தக் கேட்டார் வைரமுத்து
    மனிதா!
    உயிருடன் வாழும் காலம் வரை நீங்கள்
    உலகில் ஊன்றிய சாதனைதான் யாதோ?
    வாழ்ந்தோம் இறந்தோம் என்றில்லாது
    மாற்றான் வாழ்வுக்கு உதவ உங்கள்
    மனக்கிடங்கில் வழி இருக்க
    பணக்கிடங்கு வெறுமையாகி விட்டதா?
    கணக்கில்லா ஆசைகள் சுமந்து
    மாசற்ற உடல் மண்ணுக்குள் மண்ணாகிடும்
    மனிதநேயம் கொண்ட மானிடனே!
    கருவிகள் சுமந்த உங்கள் உயிர்
    பெருமைகள் சுமக்க வேண்டும்.
    கருவிகளைத் தானமாய்த் தந்துவிட்டு
    பெருமைகளைச் சுமந்து சென்றிடுங்கள்
    மரித்த உடல் உலகில்
    தரிக்கும் சாதனை விரைவில்
    இறக்கும் காலத்தின் முன்,
    சிறக்கும் பணியைச் சொல்லிடுங்கள்
    நிலைக்கும் அவயவங்கள் இறந்த பின்பும்
    சிரிக்கும் அவை வேறுடலில்
    உங்களால் வாழும் மனிதன்
    பூஜிக்கும் மன வார்த்தைகள் - உங்கள்
    ஆன்மாவிற்கு ஈடேற்றமாகும்.

    05.01.11 திண்ணை இணையத்தளத்தில் வெளிவந்தது.

    1 கருத்து:

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலக்கும் உணர்வு

        காதல் என்பது ஒரு மனஉணர்வு. இதைக் கடந்து யாரும் வாழ்க்கையில் பயணிக்க முடியாது. இதனைத்தான் ‘’காதல் என்பது மாயவலை சிக்காமல் போனவர் யாரு...