• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 22 ஏப்ரல், 2011

    இப்படியும் ஒர் பெண்ணா!


     இப்படியும் ஒர் பெண்ணா!



              

               பட்டம் சூட்டப்பட்ட அந்த விழாவிலே அவள் தோளில் அணியப்பட்ட மாலை அவளுக்குப் படித்த செருக்கையும் சேர்த்துச் சூட்டியது. படித்ததனால் அறிவுடன் சேர்த்துத் தலைக்கனமும் கிரீடமாக அன்று அவள் தலை சுமந்தது. ''பெருக்கத்து வேண்டும் பணிவு, கல்விச் சுரங்கம் சுமப்பவள் பண்புச் சுரங்கமும் சுமத்தல் வேண்டும். பல்கலைக்கழகம் காணாத எத்தனையோ அறிவாளிகள் உலகில் உலா வருகின்றார்கள். உலக வாழ்க்கையை உன்னதமாக வாழ்ந்து இன்பமாக அநுபவித்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால், ரதியோ கற்ற மமதையை மற்றவர்களிடம் சொல்லிப் பெருமைப்படும் ஒரு ரகம். ஆண்டவன் சிலரைச் சோதிக்கப் பொறுத்திருந்து ஏற்ற நேரம் பார்ப்பாரோ என்னவோ! அக்கரை அவளுக்குப் பச்சையாகப்பட்டது. அந்நியநாட்டு மோகம் அவள் கண்ணை மறைத்தது ''மாங்கல்யம் தந்துனானே மகஜீவன கேதுனா|| மந்திரம் ஒலிக்க அவள் மார்பில் மாங்கல்யம் அணியப்பட்டது. அவள் பெயருக்குத் திருமதி சூட்டப்பட்டது. மேலைநாட்டிலிருந்து வருகை தந்திருந்த ஒரு சொந்தம், மனைவி என்ற ஒரு அந்தஸ்தை ரதிக்குத் தந்திருந்தது. கணவன் என்னும் பற்றுக்கோட்டுடன் ஐரோப்பியநாட்டில் கால் வைத்தாள்.
               உயர்ந்த கட்டிடங்களும் வெள்ளைத் தோல்களும் நவீனத்துவ நாகரீகச் சின்னங்களும் அவளுக்கு ஒரு மயக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், அவள் நினைத்துப் பார்த்தறியாத நிலையில் தன் கணவன். சாதாரண ஒரு சாப்பாட்டுக்கடையில் சமையல் தொழிலைச் செய்து கொண்டு அலங்கரிக்கப்பட்ட வீட்டில் வாகன வசதிகளுடன் சொகுசாக வாழ்ந்து கொண்டிருந்தான். கன்னத்தில் தன் கையாலேயே ''பளார்,பளார்|| என்று அறைந்தாள். இடி விழுந்தது போல் தொப்பென்று இருக்கையில் அமர்ந்தாள். தன்னுடைய இறுமாப்பிற்கு வந்த இடியை நினைத்து வேதனைப்பட்டாள். கிட்டே வந்த கணவனை எட்டி நிற்கப் பணித்தாள். மனதுள் வைராக்கியத்தை ஊன்றினாள். ''இன்றிலிருந்து நானும் நீங்களும் அடுத்தவர் கண்களுக்குத்தான் கணவன் மனைவி|| முடிவாகக் கூறினாள். ''கல்வியில் ஏற்றத்தாழ்வு கணவன் மனைவிக்கிடையில் பார்த்தல் குடும்பவாழ்க்கைக்கு ஏற்றதல்ல. உன்னைவிட ஆளுமை அதிகம் எனக்கிருக்கிறது. என்னால் சமுதாயத்தில் உயர்ந்து நின்று காட்டமுடியும். நான் படிக்கவில்லை என்பதற்காகப் பண்பு இல்லாதவனா? இந்த நாட்டில் கண்கலங்காது உன்னை வைத்துக் காப்பாற்றக் கூடிய சக்தி எனக்கு இருக்கின்றது. என்ன சொல்கின்றாய்?|| தன் கருத்தை அவன் கூறினான். அவள் எதுவும் பேசவில்லை. மனது இறுக்கமாகியது. ''நான் இங்கிருந்து எங்கும் போகமாட்டேன். உங்கள் முன்னே இருந்தபடியே உங்களுடன் வாழாத வாழ்க்கை வாழப் போகின்றேன். அன்றிலிருந்து விருந்தினர் வந்தால் மட்டும் வீட்டில் சிரிப்பொலி கேட்கும், மழலைமொழி கேட்கும். சமையலறை அடுப்பு சூடு காணும். தன்னைச் சுற்றி ஒரு வட்டும் போட்டாள். அதற்குள்ளே இருந்தபடி வெளியுலக இன்பம், குதூகலவாழ்வு பலவற்றையும் வெறுத்தாள். தானும் வாழாமல் தயாவையும் வாழவிடாமல் ஒரு போலியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டுகாலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றாள். 
    ஆசிரியர் கருத்து
             இப்படியும் ஒரு பெண்ணா! படிப்பால் உயர்ந்தவர்கள் எதையும் வளைந்து கொடுத்துச் சமாளிக்கத் தைரியம் உள்ளவாகளாக இருத்தல் வேண்டும். படித்த அறிவால், குடும்பத்தை உயர்த்தி நிறுத்த முடியாதுவிட்டால், இந்தப் படிப்பிற்கு இந்த நாட்டில் எந்தப் பயனும் இல்லை. நினைத்தது மட்டும் நடப்பதில்லை. நடந்ததையே நினைத்ததாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உள்ளவனால்தான் வாழ்க்கையைப் பூரணமாக அநுபவித்து வெற்றி காணமுடியும். 

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...