• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    புதன், 29 டிசம்பர், 2010

    அடுத்த தலைமுறை நோக்கி




    சொல்லும் செயலும் மனஓட்டமும் - கருங்
    கல்லாய் நிலையாய் பதித்து வைத்தும்
    எல்லையில்லா ஆசைகளை மறைத்து வைத்தும்
    எடுக்கின்ற எத்தனங்கள் அத்தனையும்
    அடுத்த தலைமறை நோக்கியே குறித்திருக்கும்

    மடுக்களில்லா வாழ்வும் வடுக்களில்லா பதிவும்
    அடுத்த தலைமுறைக்குக் கிடைக்க வேண்டுமென
    துடிக்கும் உணர்வுடன் படைக்கும் படைப்புக்கள்
    செடிக்கு ஊற்றும் நீராய் சிறப்படையும்
    பிடிப்பான உலகில் பிறந்தநாள் தொட்டு
    வடிக்கின்ற வாழ்க்கை வடிவங்கள்
    விடிவான தெத்தனையோ விடியாத தெத்தனயோ – ஆயினும்
    தொடுக்கின்ற நெடிதான திட்டங்கள் அத்தனையும்
    அடுத்த தலைமுறை நோக்கியே குறித்திருக்கும்

    அகலக் கண்கொண்டு ஆய்ந்து நோக்கும் பார்வையிலே
    அளவிடவொண்ணா கணனியுலகு கண்ணில் தோன்றுது
    நிலையில்லா வாழ்வதனில் நிதம் காணும் அற்புதங்கள்
    விலையுள்ள வாழ்வதனை சிலையாய் நிறுத்து ததனால்
    எடுக்கின்ற திட்டங்கள் அத்தனையும்
    அடுத்த தலைமுறை நோக்;கியே குறித்திருக்கும்

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...