• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    திங்கள், 5 ஜனவரி, 2026

    உதவி வரைத்தன்று


    ‘கொடை கொடுத்தான் சீதக்காதி(செய்தக்காதி)‘‘ ‘‘செத்துங் கொடுத்தான் சீதக்காதி‘‘.அவரே எங்களுடைய ரோல்மொடல் என்பார்கள் புலம்பெயர்ந்து வாழும் கொடைவள்ளல்கள். அவரைப் புகழ்ந்து படிக்காசுத் தம்பிரான் என்னும் புலவர்


    ‘‘காய்ந்து சிவந்தது சூரியகாந்தி கலவியிலே

    தோய்ந்து சிவந்தது மின்னார்நெடுங் கண்சொல்பலநூல்

    ஆய்ந்து சிவந்தது பாவாணர் நெஞ்ச மனுதினமும்

    ஈந்து சிவந்தது மால்சீ தக்காதி யிருகரமே‘‘

    சூரியகாந்தி மலர் வெயிலிற் காய்ந்து சிவந்தது. மின்னல்கொடி போன்ற இளம்பெண்களுடைய கண்கள் கூடலில் தோய்ந்து சிவந்தன. பாட்டிசைக்கும் பாவலர் மனம் பழமையான நூல்களைப் படித்துச் செம்மை அடைந்தன. மேகம் போன்ற வரையாது வழங்கும் வள்ளல் சீதக்காதியின் கரங்கள் தானம்; கொடுத்துச் சிவந்தன என்று இப்பாடலின் பொருள். சீதக்கரி என்னும் கொடைவள்ளல் பரம்பரையாகச் செல்வம் மிக்கவராகவும்இ கப்பல் வாணிகத்திலே சிறப்புமிக்கவராகவும்இ மிளகு வியாபாரத்தில் உயர்ந்தவராகவும்இ நபிகள்நாயக மான்மியத்தைச் சீறாப்புராணம் மூலமாக உலகத்துக்குப் பரப்ப உதவியவராகவும் அறியப்படுகின்றார். புலவர்கள் புகழ்ந்து பாட வள்ளல்கள் பரிசில்கள் வழங்குவது வழக்கம். இங்கு உழைப்பே புலவர்களுக்கு வள்ளல்களின் கொடையால் ஊதியம் ஆனது.

    மன்னர்கள் மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி பாவலர்களுக்குப் பரிசில்கள்கள் வழங்கினர். கர்ணன் இறப்பிலும் தான் பெற்ற தருமத்தை வழங்கி இறந்தான் என்று மகாபாரதம் சொல்கிறது. பலரிடம் பணம் கேட்டுப் பெற்றுச் சில புலம்பெயர்ந்த வள்ளல்கள் உதவி தேவைப்பட்டோர்க்கு வழங்குகின்றார்கள். அதைவிட முகநூல் செய்திப் பெட்டியினூடாகவும்இ புலனம் வழியாக உதவி கேட்பவர்களுக்கும்இ யாருக்கும் தெரியாமல் கொடுத்துவிட்டு மௌனமாகச் சில வள்ளல்கள் இருக்கின்றார்கள். இவர்களுக்குக் காரியம் ஆகவேண்டும். காட்சிப்படுத்தல் தேவையில்லை.

    உழைப்பினால் பெறும் ஊதியமே நிலைத்து நிற்கும். அது அவமானத்தை அளிக்காது. அந்த உழைப்பை உறிஞ்சி வாழ நினைப்பதும்இ பிறர் உழைப்பிலே பெருமை தேடுவதும் அவமானமாகப்படுகின்றது. பகலும் இரவும் கண்விழித்து ஒருவர் ஆற்றுகின்ற பணியில் கட்டாயப்படுத்திப் பணம் பறிக்கும் சமுதாயம் எம்மத்தியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. பகைவர்களாக மாட்டாமல்இ கேட்பதைக் கொடுத்துவிட்டு நண்பர்களாக வாழ்ந்துவிட்டுப் போவோம் என்று சில புண்ணியவான்கள நினைப்பார்கள். தாம் ஏமாளிகள் என்று தெரிந்தும் பகைவர்களாக இல்லாமல் வாழும் சிறிது காலம் ஏமாளிகளாகவே வாழ்ந்துவிட்டுப் போவோம் என்று கருதுகின்றார்கள்.

    புலம்பெயர்ந்து வாழுகின்ற இலங்கைத் தமிழர்களில் பலர்இ தம்முடைய உழைப்பை தாயகமான இலங்கை மண்ணுக்குத் தாரைவார்க்கின்றனர். இலங்கை மண்ணில் வாழும் மக்களை உயரத்துக்குக் கொண்டு வந்து விட்டு அதன்பின்தான் அமைதியடைவோம் என்னும் தன்னலம் கருதாத பேதையுள்ளங்கள் வாழுகின்றார்கள். அவர்கள் தன்னலமற்ற சேவையை உணராத தாயகப் பல இளம் தலைமுறையினர் ஒட்டுண்ணி போல அவர்களை உறிஞ்சி வாழுவது மட்டுமல்லாதுஇ உதவுபவர்களை எதுவும் அறியாது இருக்கின்றார்கள் என்று கருதுகின்றனர்.

    தேவைக்கேற்ற உதவி பெறுவதைத் தவிர்த்துஇ ஆடம்பரமான செலவுகளுக்கும் அவர்களுடைய அநுதாபத்தைப் பெற்று பணம் கறப்பதை இப்போது சாட்சிகளுடன் உண்மைகளைப் பலர் சமர்ப்பிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஒரு தெரிந்தவர் மூலமாக புலம்பெயர்ந்த தேசத்திலிருந்து அனுப்புகின்ற பணம்இ குறிக்கப்பட்டவருக்குச் செல்கின்ற போது அரைப்பாகமாகக் குறைந்து உரியவரிடம் சேர்கின்றது. உதவி பெற்ற தொடர்புகள் இல்லாதவர் உரிய புலம்பெயர்ந்த தேசத்தாரிடம் உண்மையை உரைக்க முடியாதவர்களாக இருக்கின்றார்கள். கொடுப்பார் பலரிருக்கப் பறிப்பாரும் பலர் இருக்கின்றார்கள்.


    அமெரிக்காவில் ஒரு நண்பர் எமது தேசத்திலுள்ள மக்களுக்கு உதவி கிடைக்க வேண்டுமென்ற உயரிய நோக்கத்துடன் இளந் தலைமுறைகளுக்கு கல்வி கற்பித்துஇ அவர்களுடைய சேவை எமது தேசத்துக்குக் கிடைக்க வேண்டும் என்று முயற்சி செய்கின்றார். அவரோ காலங் கருதாது இரவு பகலென்று தன்னை வருத்தி வேலை செய்கின்றார். ஆனால்இ அங்குள்ள இளையவர்கள் நன்றாகக் கற்றுவிட்டு வெளிநாட்டுக்கு வருவதற்கு எத்தனிக்கின்றார்கள்.

    ‘’உதவி வரைத்தன்று உதவி உதவி

    செயற்பட்டார் சால்பின் வரைத்து’’

    என்கிறது வள்ளுவம். உதவி என்பது அவ்வுதவியைப் பெறுபவரின் பண்பைப் பொறுத்தே அதன் அளவு மதிப்பிடப்படும். நன்றே செயினும் நாம் ஆராய்ந்தறிந்து செய்வதே சிறப்பு நாம் உதவியாகப் பெறுகின்ற பணம் யாரிடமிருந்து பெறுகின்றோம் என்பது அறிந்து பெறுவதும்இ நாம் பெற்றுக் கொள்வது முறையா என்பதை உணர்ந்து கொள்வதும்இ அதன் மதிப்பை மனத்தில் ஏந்திக் கொள்வதும் மனிதப்பண்பாகவே நோக்கப்படுகின்றது.


    உடலுக்கு ஆரோக்கியம் முக்கியம் போல ஒவ்வொருவருக்கும் அர்த்தமுள்ள மனித வாழ்க்கை அவசியமானது. அடுத்தவர்கள் வாழ்க்கையைச் சிரிக்க வைத்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தையுடையவர்கள்இ அனைத்தையும் அலசிப் பார்த்துத் திட்டமிட்டுச் செயற்படுத்த வேண்டியது கடமையாகும். ‘’சிந்தனைப் பூக்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறதோஇ அவ்வளவு அற்புதமான பழங்கள் என்ற பலன்கள் கிடைக்கும்’’ என்று மேனாட்டு அறிவாளி ஜேம்ஸ் ஆலன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கை என்பது ஒரு சூதாட்டம் போன்றது. இதுதான் குறிக்கோள் என்றால்இ கையில் வைத்திருக்கும் காயை நகர்த்துவதற்கு முன்னே எங்கே? எப்போது? எப்படி? வைக்க வேண்டும் என்ற அறிவை முதலில் பெற்றுக் கொள்ள வேண்டும்.

    எக்கேடு கெட்டால் எமக்கென்ன என்றிருக்க முடியாத சமூகப்பார்வை கொண்டவர்கள் எழுத்தாளர்களாக இருக்க முடியாது என்றே கருதுகின்றேன். எழுத்தாளர்களிடமே கொட்டித் தீர்க்கப் பாகுபாடற்ற சொற்கள் குவிந்து கிடக்கின்றன.




    நன்றெ செய்வோம். அதை இன்றே செய்வோம்.















































































































    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    உதவி வரைத்தன்று

    ‘கொடை கொடுத்தான் சீதக்காதி(செய்தக்காதி)‘‘ ‘‘செத்துங் கொடுத்தான் சீதக்காதி‘‘.அவரே எங்களுடைய ரோல்மொடல் என்பார்கள் புலம்பெயர்ந்து வாழும் கொடைவள...