• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வியாழன், 9 டிசம்பர், 2010

    பதர்

              பதர்

    பதர் நீங்கிய  பதம் உண்ணத் தகுந்தது
    பதர் நீங்கிய வாழ்வு பண்பானது
    பதரில் மனம் பதிக்கும் பதர் வாழ்வு
    பதராகிப் போம்.

    1.   உள்ளீடற்ற நெல் 2. குற்றம் 3. அற்பம் 4. அறிவீனன்
    5. பயனின்மை

    பொருள்: 

    உள்ளீடில்லாத நெல்லை அகற்றிய சோறு உண்பதற்குத் தகுதியானது. குற்றம் நீங்கிய வாழ்வும் சிறப்பானது. அற்பமான விடயங்களில் மனம் பதிக்கும் அறிவீனன் வாழ்வு பயனில்லாமல் போகும்.

    விளக்கம்:

    நெல்லின் மேலீடான தோலை அகற்றினால், உண்ணத்தக்க அரிசியைப் பெறலாம். இவ் அரிசியை உலையிலிட்டுச் சோறாக்கினாலேயே. இவ் அரிசி உண்ணத்தக்க உணவாகின்றது. அரிசியைச் சோறாக உண்பதை விடுத்து அதன் மேல்த் தோலாகிய பதரை உண்ண முடியுமா? அது உணவுமன்று, உடலுக்கு உதவும் பொருளும் அன்று. அவ்வாறே வாழுகின்ற வாழ்க்கையையும் அப்படியே நினைத்தது போல் நினைத்த மாதிரி வாழத்தான் முடியுமா? நன்றாகச் சிந்தித்து தவறுகளைப் பிரித்தறிந்து, படித்தறிந்து, புரிந்தறிந்து  அத்தவறுகளை நீக்கி மனத்துக்கண் மாசிலனாக வாழுகின்ற மனிதன், சிறப்பான வாழ்க்கையைப் பெறுவான். பிறரால் மதிக்கப்படும் வாழ்க்கையைப் பெறுவான். குற்றங்களைத் தன்னுடன் கொண்டு வாழுகின்ற மனிதன் மனநிம்மதியை இழப்பான். பொய்;, களவு, உயிர்க்கொலை, மற்றவர் மனதைக் கொல்லுதல், பிறர் துன்பத்தில் இன்பங் காணுதல், போதைப் பொருள்களுக்குத் தன்னை அடிமைப்படுத்தல், தன்னலம் நோக்கிப் பிறர்நலம் கெடுத்தல், இவை அனைத்தும் சிறப்பான வாழ்வு என்று கருதி அவற்றில் அதிக தனது குடும்பத்திற்கோ, தனது சமுதாயத்திற்கோ, தனது நாட்டுக்கோ, பிற நாடுகளுக்கோ, பயனில்லாமல் போய்விடும். இவ்வாறே கெடுவான் கேடு நினைக்கும் அறிவற்றான் வாழ்க்கை பலரால் இழிந்துரைக்கப்படும்.       

    1 கருத்து:

    1. நல்ல விளக்கம் தரப்பட்டுள்ளது. நன்றி, வாழ்த்துகள்.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...