• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 11 டிசம்பர், 2010

    எங்கே நிம்மதி

        




    உனக்குள்ளே ஒரு மனிதன் - அவன்
     அடிக்கடி விழித்தெழுவான்
    தனக்காய் ஒரு நியாயங்காண – உன் 
     வனப்பையும் பெருக்கிடுவான்
    பிணக்காய் வரும் செய்திகளெல்லாம் 
     உனக்காய்க் காட்டிடுவான் - நீ
    உறங்கிடும் போதும் விழித்திடும் போதும்
     உழுப்பியே வருத்திடுவான்
    சிறப்பாய்த் தோன்றும் சிந்தனையாவும் - அவன் 
     சிதறடிக்கா விளைவுகளே 
    சிந்திக்கத் தெரிந்த மனிதனுக்கு
     நித்தமும் அவன் துணைவருமே 
    உனக்காய் வாழ நினைத்திடும்போதும் – அவன்
     உறவுகள் காட்டிடுவான்
    ஓடியோடி உழைத்திடும் போதும் 
     உணர்வோடு ஒன்றிடுவான்
    ஓய்ந்து போய் ஒதுங்கிய போதோர்
     புதுவழி காட்டிடுவான் - நீ
    ஓரிடத்தில் தரித்திடா தோடிடவே 
     உனக்குள் சேவைகள் செய்திடுவான்
    தன்னை மீறிய நிம்மதிகாண – உன்னைத் 
     தனித்து விடுவதில்லை
    உன்னை ஆள்பவனும் அவனே – உன்னை
     ஆதரிப்பவனும் அவனே
    எங்கே நிம்மதி எங்கேயென்று – நீ
     தேடி அலைந்தாலும்
    உன்னுள் இருப்பவன் உறங்கிடும் போதே
     நிம்மதி கண்டிடுவாய் - நீ 
    நிம்மதி கண்டிடுவாய்         

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...