• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 17 டிசம்பர், 2010

    காத்திருந்தான் காளையவன்


    மானினமும் புள்ளினமும்
    சோடிசேர்ந்து குலாவுபுகழ்
    சோலை சார் சிகரமதில்
    யானையுண்ட விளாங்கனியை
    தானெடுத்து விளையாடிக்
    காத்திருந்தான் காளையவன்
    காரிகையின் வரவுக்காய்

    ஆடைகளைந்த ஆரணியம்
    புத்தாடை புனைந்து சரசரக்க
    சுத்தமிடும் மலையருவி
    சங்கீதம் பாடிவர
    பித்துப் பிடித்தவன் போல்
    காத்திருந்தான் காளையவன்
    காரிகையின் வரவுக்காய்

    கட்டுக் கட்டாய் அவளுக்காய் கரம் வடித்த
    கவிக்குவியலில் ஒன்றெடுத்தான்
    உயிரோடும் தன் உதிரத்தால்
    நினைவோட முத்திரை பதித்தான்
    துணையாக வருவாளா என விடைகாண
    காத்திருந்தான் காளையவன்
    காரிகையின் வரவுக்காய்

    கட்டைப் பாவாடையும்
    குதியுயர்ந்த காலணியும்
    குட்டையாய் கத்தரித்த
    குஞ்சி அழகுடனே
    நெட்டையாய் வந்தவள்
    குட்டையனே!
    காதல் உனக்கொரு கேடாவென
    கிழித்தெறிந்தாள் அவன் மனவரிகளை
    சளிப்புடனே சுருக்கென்று சென்றாள்.

    மலையுச்சியிலிருந்து மனவரிகள்
    நிலம் நோக்கிப் பறக்கின்றன
    போடி! நீ ஒரு கேடி – உன்னைத்
    தேடி வந்த நான் ஒரு
    கோடி கோடி முட்டாள்
    உளஅழகறியா உனைக் கவி வடித்த
    நான் ஒரு முட்டாள் முட்டாள் என
    விட்டொழித்தான் அவள் நினைப்பை.

    1 கருத்து:

    1. என்ன படத்தைப் பார்த்துக்கவிதை எழுதப்பட்டுதா? நினைக்காத திசையில் கவிதை போகுதே! something diffrent

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...