• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 5 மார்ச், 2011

    புலம்பெயர்வில் பெண்கள்

    இறக்கை விரித்த விமானம் அதில்
    சிறக்கப் பறந்தனர் தமிழ் பெண்கள்
    தாயாய் தாரமாய் சேயாய் தளமிறங்கிப்
    புகலிடத்தில் இணைப் பாதங்கள் பதித்தனர்
    காற்சட்டைக்குள் கால்கள் அடங்கின 
    கலாச்சாரக் காப்பாளர் கடிந்து கொட்டினர்.
    வாழ்வாங்கு வாழ வகுத்த நெறிகளில் - அவர்
    வாழ்நாட்டில் வாழ வசப்படவில்லை.
    நறவம் அனைய நலங்கள் அணுகாது
    மாமேரு அனைய பாரங்கள் சுமந்தனர்
    கொட்டும் பனியில் கூதல் குளிரில் 
    சொட்டும் வியர்வை சுகமே சுமந்து
    பூங்கொடி பூத்துக் குலுங்கிய பாரம் 
    தாங்கியபோதும் வருந்தாது மலர்ந்து நின்றன்ன
    கடுங்குளிர் நடுக்கத்தில் காதலன் தனக்கு
    நடுங்கு குளிர்காட்டாத் தகைசால் பூங்கொடியானார்
    இரத்த உறவுகளே ஈன்ற என்தாயே – என்
    இதயத்தை இனங்காணுங்கள் என இறைஞ்சியதில்லை
    வெத்திலை வாய்சிவத்த வேலம்மா பாட்டியும்
    அதரத்தில் அரிதாரம் அழகாய்ப் பூசி
    கதிரவன் கரந்தொடுமுன் கழிவறைத் தொழிலுக்காய்
    கதியாய் நடக்கின்றாள், கடமை கருதியதாய்.
    மலருக்குமலர் தாவும் மணவாளன் மாங்கல்யந்தாங்கி
    புலத்திற்பூத்த மடந்தையரோ மனமிழந்து மடிந்ததில்லை
    வடுக்களில்லா வாழ்வைக் கெடுக்க யார்வரினும்
    விடுத்தவர் துணையில் விடுதலை பெற்றிடுவார்
    தாயகமும் புகலிடமும் இருகண்களாய்
    கங்குலும் கதிரொளியும் கருதாது கடமையில்
    களித்திருக்கும் காரிகையரே வாழி நீவீர்
    புகலிடத்தில் புதுமைகள்பல காட்டிட வாரீர்.



    1 கருத்து:

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ரசவாதி நூல் அனுபவம்

    நூல்:  ரசவாதி ஆசிரியர் பாலோ கொயலோ தமிழில்: நாகலட்சுமி சண்முகம் இந்த நூலின் ஆசிரியர் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர். உங்கள் கனவுகளை பின்தொடர...