• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    திங்கள், 21 பிப்ரவரி, 2011

    சித்திரை நிலவே



                  சித்திரை நிலவே

     வானத்தில் தோன்றும் தேவதையே
     வானோடையில் நீராடும் வடிவழகே
     கானம்பாடிக் கவிவடிக்கக் கருவானவளே
     கோடிகாலம் குடியிருக்கும் பால்நிலவே
     பால் சோறு பருகவுன்
     பால்முகத்தை காட்டினாளே
     பாட்டி கதை சொன்னபோதும்
     கைநீட்டி நீட்டிக் காட்டினாளே
     போட்டி போட்டி நான் உணவுண்ண
     காட்டிய உன் உருவோ
     சித்திரை பௌர்ணமியில் முத்திரை பதிக்கிறது.
     தொட்டிலில் கண்டநிலா தொடர்கிறது இன்றுவரைஎன்னைத்
     தொட்டிலில் போட்ட நிலாவோஎன்னை
     விட்டு விட்டெங்கோ விரைந்து போயிற்று
     எட்ட நின்று காட்சி தரும் சித்திரை நிலவே
     தொட்டதில்லை உன்னை
     தொடரும் உன் நினைவோ விட்டதில்லை
     தொட்டுத் தொட்டு அணைத்தெடுத்தவளோ
     விட்டுவிட்டுச் சிட்டாய்ப் பறந்திட்டாள்
     பெற்று வளர்த்த உறவின் முத்தி வேண்டி
     சித்திரை முழுநிலவே!
     உன் முற்றுமுழு வடிவு காணநான்
     சித்திரையில் காத்திருப்பேன் - உன்னைச்
     சிந்தையில் வைத்திருப்பேன்.

    2 கருத்துகள்:

    1. சித்திரை முழுநிலவே!
      உன் முற்றுமுழு வடிவு காண – நான்
      சித்திரையில் காத்திருப்பேன் - உன்னைச்
      சிந்தையில் வைத்திருப்பேன்.

      பதிலளிநீக்கு
    2. அம்மாவெனும் முத்திரையோடு மனதில் அழியாத நிலவு.
      அனுதினமும் எண்ணும் நிலவு. தாய்

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...