• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 22 ஜனவரி, 2011

    மௌனமாய்




                                                         மௌனமாய்


    மௌனம், நிசப்தம், 
             வெளிப்படும் விநோதம்


    மௌனமாய் பூக்கும் மலருக்கு 
     வாசனை ஒலியாகும்
    மௌனமாய் உதிக்கும் கதிரவனுக்கு 
     கடும் வெயில் ஒலியாகும்
    மௌனமாய் மலரும் விழிகளுக்குப்
     பார்வை ஒலியாகும்
    மௌன ஒலியைப் புரிந்திட – மனம்
    ஒருமைப்பட வேண்டும்


    அகல் விசும்பின் மௌனம்
     இடியெனக் கலையும்
    கார் இருளின் மௌனம் 
     விடியலில் கலையும்
    ஓவியன் மௌனப்பார்வை
     வண்ணக்கலவையில் கலையும்
    பூமியின் மௌனம் 
     பூகம்பத்தில் கலையும்
    கவிஞனின் மௌனம் 
     கவிதையில் கலையும்
    பொறுமை மீறிய மௌன வரிகள்
     பொங்கியே கரு சுமக்கும்

    1 கருத்து:

    1. மன ஒருமைப் பாட்டில் மௌன ஒலியும் புரிந்தால் நாமெல்லாம் ஞானிகளாகலாம்.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...