• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வியாழன், 29 மே, 2014

    ஜேர்மனியில் இடம்பெற்ற பாராட்டுவிழா...

      
           
         .

    ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் எழுத்தாளர்களின் பாராட்டு விழா கடந்த 27.04.2014 ஞாயிற்றுக்கிழமை 15.30 மணியளவில் பெருந்திரளான மக்களின் வரவேற்போடு  International Zentrum - Flachsmarkt 15, 47051 Duisburg என்ற முகவரியில் அமைந்த மண்டபத்தில் திருமதி .சந்திர கௌரி சிவபாலன், திருமதி. கெங்கா ஸ்ரான்லி மற்றும் திருமதி கீதாபரமானந்தன் ஆகியோர் மங்கல விளக்கேற்ற ஆரம்பமானது.                    
               
    நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நமது எழுத்தாளர்களை, கலைஞர்களை, ஊடகவியலாளர்களை, அவர்கள் வாழும் காலத்திலேயே, அவர்களைக் கௌரவித்துப் பாராட்டிவாழ்த்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தைக் கொண்டு, நடைபெற்ற விழாவில் தாயகத்தின் விடியலுக்காகத் தம்முயிரை ஈந்த எம் உறவுகளின் ஆத்ம இளைப்பாற்றலுக்காக இருநிமிட மௌன அஞ்சலி நிகழ்த்தப்பட்டதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்தினை டோர்ட்முண்ட் வள்ளுவர் தமிழ்ப்பாடசாலையின் மாணவிகளான செல்விகள் ரஜீவா சிறிஜீவகன் சாதுஷா அருணகிரிநாதன் மற்றும் சௌமியா சிவகுமாரன் ஆகியோர் இனிமையாய் நிகழ்த்தினர்.  இதனைத்தொடர்ந்து பாராட்டு விழாவினுக்கு வருகைதந்தவர்களை வரவேற்க வந்தவர்களை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொருளாளரும் ஒபகௌசன் அறிவாலயம் தமிழ்ப்பாடசாலை ஆசிரியருமான திரு.அம்பலவன் புவனேந்திரன் அவர்கள் கவிதையால் தன் வரவேற்புரையை வழங்கினார். அடுத்து வரவேற்பு நடனம் இடம்பெற்றது. கண்களுக்கும் மனதுக்கும் விருந்துபடைத்த வரவேற்பு நடனத்தினை ஒபகௌசன் அறிவாலயம் தமிழ்ப்பாடசாலை ஆசிரியரான திருமதி.கலைநிதி சபேசன் அவர்களின் மாணவிகளான செல்வி கவிநிலா சபேசன்;;, செல்வி நர்த்திகா நகுலேஸ்வரன், செல்வி மதூசி நகுலேஸ்வரன் ஆகியோர் படைத்தனர். இதனைத்தொடர்ந்த கலைநிகழ்வாக வீட்சே கலைவாணி இசைப்பள்ளி மாணவர்களான  செல்வி சகானா முருகதாஸ், செல்வி ஜோபினா யோகநாதன், செல்வி சர்மிலி பால்ராஜா, செல்வி அபிராமி பரமானந்தன், செல்வன் ஜோனுசன் யோகநாதன் ஆகியோரின் இசைப்பாடல் இனிமைக்கு  இனிமை சேர்த்ததெனலாம்.

    தொடர்ந்து தலைமையுரை இடம்பெறும் என்று  அறிவிக்கப்பட்டதனையடுத்து யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவரும் மண் கலையிலக்கிய சஞ்சிகையின் ஆசிரியருமான திரு. வைரமுத்து சிவராசா அவர்கள் மிகச்சுருக்கமாக தமதுரையை நிகழ்த்தியதையடுத்து டோர்ட்முண்ட் வள்ளுவர் தமிழ்ப்பாடசாலையின் இசைவகுப்பு மாணவர்களான செல்விகள் ரஜீவா சிறிஜீவகன், சாதுஷா அருணகிரிநாதன் மற்றும் செமியா சிவகுமாhரன்,  செல்வி ஆர்த்திகா நடனபாதம் ஆகியோரின் வயலினிசைக்கு   செல்வன் ராகுல் ரவீந்திரர் மிருதங்கம் வாசித்து மெருகேற்றினார். தொடர்ந்த நிகழ்வில் வள்ளுவர் தமிழ்ப்பாடசாலையின் இசைவகுப்பு மாணவனான செல்வன் ராகுல் ரவீந்திரர் வழங்கிய சுரத்தட்டு இசை இடம்பெற்றது. தமிழ்ச்சினிமாப்பாடல்களை தன் சுரத்தட்டு இசையில் வெளிப்படுத்தியது அனைவரையும் கவர்ந்ததென்பதற்கு மண்டபம் அமைதியில் மூழ்கி இரசித்ததனை என்னால் காணமுடிந்தது. தொடர்ந்து இருபதுநிமிட இடைவேளை இடம்பெற்றது. பல்வகைப்பட்ட சிற்றூண்டிகள் பொதிகளில் இடப்பட்டு பார்வையாளர்களுக்கு தம் இருக்கைகளுக்கு  யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இளையோர்களால் விநியோகிக்கப்பட்ட வேளையிலும் இசைக்கதம்பம் மண்டபத்தை நிரப்பிக்கொண்டேயிருந்தது. இடைவேளையானது முப்பது நிமிடத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது விழாவின் முக்கிய நிகழ்வு ஆரம்பமாவதையறிந்து பார்வையாளர்கள் விரைந்து மண்டபத்துள் நுழைந்தனர்.


    தாயகத்திலும், புலம்பெயர்ந்த தேசங்களில் ஒன்றான ஜேர்மனியிலும் கலை, எழுத்து, பொதுப் பணிகளை நீண்ட நெடுங்காலமாகத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும், தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினர்களில் ஐவருக்குப் பாராட்டுவிழா ஒன்றினை நடத்துகின்ற இவ்வேளையில் இவர்களில் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் சோஸ்ற் நாவலர் தமிழ்ப்பாடசாலையின் முன்னாள் பொறுப்பாளருமான திரு.க.அருந்தவராஜா  அவர்கள் தற்போது இலங்கையில் வசித்து வருகின்ற காரணத்தினால் இவ்விழாவில் கலந்துகொள்ளவில்லை என்பதனை வெளிப்படுத்தியதோடு இவருடன் திருமதி கலைவாணி ஏகானந்தராஜா அவர்கள் திரு. க. பத்மகுணசீலன் அவர்கள், திரு புத்திசிகாமணி அவர்கள், திருமதி ஜெயா நடேசன் அவர்கள்     ஆகியோர் தமிழ், எழுத்து, கலைப்பணிகளையும், சமுகப்பணிகளையும்; தொடர்ந்து செய்வதோடு, எமது எழுத்தாளர் சங்கத்தோடு தொடர்ந்தும் சேவை புரிந்து வருபவர்கள். இவர்களை  தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவரான திரு. வைரமுத்து சிவராசா அவர்கள், தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உபதலைவரும்  ஜேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் தலைவருமான திரு பொன் சிறிஜீவகன் அவர்கள், யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொருளாளர் திரு. அம்பலவன்புவனேந்திரன் அவர்கள், மற்றும் உறுப்பினர்களுடன் யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இளையோர் மற்றும் இதர உறுப்பினர் ஆகியோர் பாராட்டுப்பெறுகின்ற அந்தச் சான்றோர்களை மேடைக்கு அழைத்துவந்து அமரச்செய்தனர்

    இவர்களைப்பற்றிய சிறுகுறிப்புரையை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவரும் மண் கலையிலக்கிய சஞ்சிகையின் ஆசிரியருமான திரு. வைரமுத்து சிவராசா அவர்கள் நிகழ்த்தியதனைத் தொடந்து பாராட்டுக்களுக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்தேறின. முதலில் தமிழின தமிழ்மொழி தமிழ்ச்சமூக முன்னேற்றத்துக்கான கலை இலக்கியப்பணிகளை சிறப்பாகச் செய்துகொண்டிருக்கின்ற திரு. க. பத்மகுணசீலன் அவர்களைப்பற்றிய குறிப்புக்களையும் சிறப்புக்களையும் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உபதலைவரும்  ஜேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் தலைவருமான திரு பொன் சிறிஜீவகன் அவர்கள் தெரிவித்தனையடுத்து தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவரான திரு. வைரமுத்து சிவராசா அவர்கள்  திரு. க. பத்மகுணசீலன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்ததையடுத்து திரு. போன.; சிறிஜீவகன் அவர்கள் சந்தனமாலையணிவித்து மரியாதைசெய்தார். தொடர்ந்து தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொருளாளரும் ஒபகௌசன் அறிவாலயம் தமிழ்ப்பாடசாலை ஆசிரியருமான திரு.அம்பலவன் புவனேந்திரன் அவர்கள் நினைவுக்கேடயத்தினை வழங்கிப்பாராட்டி ஆசிகளைப்பெற்றார். பலத்த கரகோஷத்தின் மத்தியில் நிறைவேறிய இந்நிகழ்வினையடுத்து பாராட்டைப் பெறுபவரான திருமதி கலைவாணி ஏகானந்தரஜா அவர்களைப்பற்றிய குறிப்புரைகளை திரு. பொன். சிறிஜீவகன் அவர்கள் தெரிவித்தனையடுத்து தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான திருமதி இராஜேஸ்வரி அவர்கள் பொன்னாடை போர்த்த திருமதி. சந்திரகௌரி சிவபாலன்(கௌசி) அவர்கள் சந்தனமாலையணிவிக்க திருமதி. ராதா புத்திசிகாமணியவர்கள் நினைவுக்கேடயத்தினை வழங்கியதையடுத்து பாராட்டுப்பெறுகின்ற அடுத்தவரான தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொதுச்செயலாரான திரு. பொன். புத்திசிகாமணியவர்களைப் பற்றிய குறிப்புக்கள் வாசிக்கப்பட்டதனையடுத்து தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களின் மூலம் மரியாதைசெய்ய அழைக்கப்பட்டபோது திரு. வைரமுத்து சிவராசா அவர்கள் பொன்னாடை போர்த்த திரு. ப.பசுபதிராஜா அவர்கள் சந்தனமாலையணிவித்து மரியாதைசெய்தார்.

    தொடர்ந்து திருமதி. கெங்கா ஸ்ரான்லி அவர்கள் நினைவுக்கேடயத்தினை வழங்கினார். இந்தக் கௌரவத்தினைப்பெற திருமதி. ஜெயா நடேசன் அவர்களின் குறிப்புரைகள் வாசிக்கப்பட்டதனையடுத்து அவருக்கு தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்  உறுப்பினர்களின் மூலம் மரியாதைசெய்ய அழைக்கப்பட்போது திருமதி கீதா பரமானந்தன் அவர்கள் பொன்னாடையினைப்போர்த்த திருமதி. கிளி சிறிஜீவகன் அவர்கள் சந்தனமாலை அணிவிக்க திருமதி. சுலோசனா புவனேந்திரன் அவர்கள் நினைவுக்N;கடயத்தினை வழங்கியபோது  மீண்டும் கரகேசம் மண்டபத்தினை அதிரவைத்தது. தொடாந்த பாராட்டைப்பெறுபவர் பெயர் வாசிக்கப்பட்டது. தமிழ் எழுத்தாளர்சங்கத்தின் முன்னாள் செயலாளரும் சோஸ்ற்நாவலர் தமிழ்ப்பாடசாலையின் முன்னாள் பொறுப்பாளருமான திரு.க.அருந்தவராஜா அவர்கள் பற்றிய குறிப்புரைகளை அடுத்து அவருக்கான மரியாதைகளை அவரின் சகோதரி திருமதி. கலா சிவகுமாரன் அவர்கள் த.எ.ச.தலைவர் திரு. சிவராஜா அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். தெலைபேசி வாயிலாகத் தம்  ஆசிகளையும் தெரிவித்தவர்களின் பெயர்கள் வாசிக்கபட்டதோடு அனைவருக்கும் நன்றிதெரிக்கப்பட்டதோடு விழா இனிதே நிறைவுக்கு வந்தது.         

           மண் சஞ்சிகைக்காக ஜேர்மனியிருந்து கவிச்சுடர் அம்பலவன்.புவனேந்திரன்...   
         

    3 கருத்துகள்:

    1. நிகழ்ச்சி பற்றிய வர்ணனை அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

      பதிலளிநீக்கு
    2. கலைஞர்கள் அவர்கள் வாழும் காலத்திலேயே பாராட்டப்பட வேண்டும்
      மிகவும் உயரிய நோக்கு சகோதரியாரே

      பதிலளிநீக்கு
    3. பெயரில்லா30 மே, 2014 அன்று AM 7:33

      முயற்சி வெகு சிறப்பு.
      யெயா நடேசனும் , மண் சிவராஜாவும், புவனும் அழைப்பு விட்டனர்.
      அவர்களை வாழ்த்தினேன்.
      பதிவிற்கு நன்றி.
      இதன் மூலமும் அவர்களிற்கு, சம்பந்தப்பட்டவர்களிற்கும்
      தங்களிற்கும் இனிய வாழ்த்துகள்.
      வேதா. இலங்காதிலகம்.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...