• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    திங்கள், 19 மே, 2014

    விளக்கின் தத்துவம்


    இருளான இடங்கள்;;> பொருள்கள் எல்லாவற்றையும் ஒளியானது விளங்கச் செய்கின்றது. எனவே இருள் விலகி ஒளி விளங்க ஏற்றப்படும் விளக்கு எரியும் போது ஆன்மீக அறிவு ஒளிர எதிர்மறை மனப்பாங்கு நீங்கும் என ஆன்மீகம் கூறுகின்றது. மேல்நோக்கித் தீபம் எரிகின்ற போது எம்முடைய எண்ணங்கள் உயர்வு நிலைக்குச் செலுத்தப்படும். 

                
    அறிவால் பலருக்கு அறிவைக் கொடுக்கலாம். அறிவு எமக்குள் தோன்ற அறியாமையாகிய இருள் எம்மைவிட்டு நீங்கும். அறிவு> எண்ணம்> செயல்களுக்குச் சாட்சியாக தீபம் ஏற்றுகின்றோம். அன்பு> மனஉறுதி> சகிப்புத்தன்மை> நிதானம்> சமயோசிதபுத்தி> இந்த 5 தத்துவங்களை புரிந்து கொண்டு தானும் தன்னைச் சார்ந்த குடும்பத்தையும் விளங்கச் செய்யவேண்டும் என்பதற்காகவே திருமணமாகி புகுந்தவீட்டிற்குள் புகும் மருமகளை விளக்கேற்றும்படிச் சொல்கின்றார்கள். 
                விழாக்கள் ஆரம்பிக்கும் முன் மங்கள விளக்கேற்றல் நிகழ்வு நடைபெறும். நடைபெறப்போகின்ற விழா ஒளிமயமாக அமைய அத்தாட்சியாக நன்மக்களை அழைத்து விளக்கேற்றும்படி அழைப்பார்கள். இதைவிட எவ்வித ஆன்மீக காரணங்களும் விளக்கேற்றலுக்குக் காரணமாகாது. அப்படி என்றால்  விழாக்களின் வாசலில் விளக்கேற்றல் முறையாகாது. 

    5 கருத்துகள்:

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...