• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

    பெற்றோரின் பங்கு


    தவறுகள் நடக்கின்றன. தண்டனைகள் பெறுவது பெற்றோரா? எனத் தத்தளிக்கும் உங்கள் மனதிடமே கேட்டுப்பாருங்கள். நீங்களும் ஒருவகையில் குற்றவாளிகளே. உங்களிடம் இருக்கும் இருப்புக்களை வெளியிலே காட்ட ஆசைப்படுகின்றீர்களா? குற்றங்களைச்சுமந்துதான் ஆகவேண்டும். குரங்கு மனத்தின் குறிப்பறியாது பிள்ளைகள் ஆசைகளை நிவர்த்தி செய்ய விரும்புகின்றீர்களா? வரும் துன்பங்களை ஏற்றுத்தான் ஆகவேண்டும். போட்டிகள் ஒருவருக்கொருவர் பணஅளவை வெளிக்காட்ட அல்ல. திறமையை மேம்படுத்தவே என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். ஆராய்ச்சிகள் கண்டுபிடிப்புக்கள் நல்லவை கருதியே செய்யப்படுகின்றன. அதை தவறான வழியில் செலுத்துபவர்கள் பண்பாடற்ற மனித ஜென்மங்களே. பிள்ளைகளைப் பெற்றவர்கள் குறிப்பறிந்து, காலம் உணர்ந்து, வயதை அநுபவம் மூலம் கற்றுக் கொண்டு எதிர்கால வாரிசுகளை வளத்தெடுக்க முனைந்திடுங்கள். இப்படிச் செய்துவிட்டார்களே!! என்று பிள்ளைகளைக் கரிந்து கொட்டாதீர்கள். அடிப்படை என்னவென்று ஆராய்ந்து பாருங்கள். அதில் உங்கள் தவறும் அடங்கியிருக்கும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...