• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 17 ஆகஸ்ட், 2013

    மின்னல் எப்படி ஏற்படுகின்றது





                          மழைக்காலங்களில் மேகக்கூட்டங்களிடையே மின்னல் தெறிப்பதைக் கண்டிருப்பீர்கள். மின்சாரம் பாய்வபோல் அழகாகக் கண்ணைப் பளீச்சிடும் வண்ணம் காணப்படும். சில சமயங்களில் மின்னல் மரத்தில் விழுந்துவிட்டது, மனிதர் விலங்குகளில் பாய்ந்துவிட்டது எனச் சொல்லக் கேட்டிருப்பீர்கள்.  இத்தொழிற்பாடு எப்படி ஏற்படுகின்றது என்பது பற்றி அறியாத சிறார்கள் மத்தியில் பல பெரியோர்களும் இருக்கின்றார்கள்.
                

    பூமியிலிருந்து புறப்பட்டுச் சென்ற நீராவியே மேகமாகக் வளிமண்டலத்திலே உலாவருகின்றன. 0.01மி.மீ விட்டத்தைக் கொண்ட கண்ணுக்குத் தெரியாத பல கோடித் நீர்த்துளிகள் ஒன்றாகச் சேர்ந்திருக்கும்போது முகில் எனப்படுகின்றது. ஒளி ஊடுறுவும் நீர்த்துளிகளின் ஆழம் அதிகரிக்கும்போது உட்பகுதியின் ஒளி ஊடுறுவும்தன்மை குறைய மேகமானது சாம்பல் நிறமாகக் காட்சியளிக்கின்றது.
                 

    இம்மேகக் கூட்டங்களிலுள்ள அணுக்கள் ஒன்றையொன்று உரசுகின்ற போது மின்னூட்டம பெறுகின்றது. இவ்வாறு மின்னூட்ம் பெற்ற முகில்களுக்கு அருகிலே எதிர் மின்னோட்டம் கொண்ட முகில்கூட்டங்கள் வருகின்றபோது கவர்ந்திழுக்கப்படுகின்றன. இப்போது காற்றின்வழி மின்னோட்டம் பாய்கின்றது. இதுவே மின்னலாகத் தெரிகின்றது. இம்மின்சாரம் மின்னலாகப் பூமியை நோக்கி வருகின்றபோதே பல பாதிப்புக்கள் உயிர்களுக்கும் கட்டிடங்கள், மரங்களுக்கும் ஏற்படுகின்றன. இதனையே நமது முன்னோர் மாவிலைச் சக்கரவர்த்தி தன்னுடைய வாளைத் தீட்டுகின்றார் என்பார்கள். அங்கும் போரா என்று சலித்துக் கொண்ட இளமைப்பருவமும் இருந்தது. இக்கேள்வியை  வளர்ந்தவர் ஒருவர் இன்று கேட்டபோது இயற்கையின் சில சிறிய நடைமுறைகளை இலகுவாகப் புரிய வைப்பதன் மூலம் அறியாமையை அகற்றலாம், பகுத்தறிவை வளர்க்கலாம் என உணர்ந்தேன்.

    3 கருத்துகள்:

    1. மின்னல் ஏற்படும் விதம் குறித்து
      அறிந்து தெளிந்தேன்.
      பகிர்விற்கு மிக்க நன்றி !

      பதிலளிநீக்கு
    2. அருமையான விளக்கம் சகோதரி...
      பகிர்வுக்கு நன்றிகள் பல...

      பதிலளிநீக்கு
    3. எளிமையாய் பகிர்ந்தவிதம் அருமை தொடருங்கள்

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...