சனி, 31 ஆகஸ்ட், 2013
வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013
பெற்றோரின் பங்கு
தவறுகள் நடக்கின்றன. தண்டனைகள் பெறுவது பெற்றோரா? எனத் தத்தளிக்கும் உங்கள் மனதிடமே கேட்டுப்பாருங்கள். நீங்களும் ஒருவகையில் குற்றவாளிகளே. உங்களிடம் இருக்கும் இருப்புக்களை வெளியிலே காட்ட ஆசைப்படுகின்றீர்களா? குற்றங்களைச்சுமந்துதான் ஆகவேண்டும். குரங்கு மனத்தின் குறிப்பறியாது பிள்ளைகள் ஆசைகளை நிவர்த்தி செய்ய விரும்புகின்றீர்களா? வரும் துன்பங்களை ஏற்றுத்தான் ஆகவேண்டும். போட்டிகள் ஒருவருக்கொருவர் பணஅளவை வெளிக்காட்ட அல்ல. திறமையை மேம்படுத்தவே என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். ஆராய்ச்சிகள் கண்டுபிடிப்புக்கள் நல்லவை கருதியே செய்யப்படுகின்றன. அதை தவறான வழியில் செலுத்துபவர்கள் பண்பாடற்ற மனித ஜென்மங்களே. பிள்ளைகளைப் பெற்றவர்கள் குறிப்பறிந்து, காலம் உணர்ந்து, வயதை அநுபவம் மூலம் கற்றுக் கொண்டு எதிர்கால வாரிசுகளை வளத்தெடுக்க முனைந்திடுங்கள். இப்படிச் செய்துவிட்டார்களே!! என்று பிள்ளைகளைக் கரிந்து கொட்டாதீர்கள். அடிப்படை என்னவென்று ஆராய்ந்து பாருங்கள். அதில் உங்கள் தவறும் அடங்கியிருக்கும்.
செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013
வியாழன், 22 ஆகஸ்ட், 2013
சனி, 17 ஆகஸ்ட், 2013
மின்னல் எப்படி ஏற்படுகின்றது
மழைக்காலங்களில் மேகக்கூட்டங்களிடையே மின்னல் தெறிப்பதைக் கண்டிருப்பீர்கள். மின்சாரம் பாய்வபோல் அழகாகக் கண்ணைப் பளீச்சிடும் வண்ணம் காணப்படும். சில சமயங்களில் மின்னல் மரத்தில் விழுந்துவிட்டது, மனிதர் விலங்குகளில் பாய்ந்துவிட்டது எனச் சொல்லக் கேட்டிருப்பீர்கள். இத்தொழிற்பாடு எப்படி ஏற்படுகின்றது என்பது பற்றி அறியாத சிறார்கள் மத்தியில் பல பெரியோர்களும் இருக்கின்றார்கள்.
பூமியிலிருந்து புறப்பட்டுச் சென்ற நீராவியே மேகமாகக் வளிமண்டலத்திலே உலாவருகின்றன. 0.01மி.மீ விட்டத்தைக் கொண்ட கண்ணுக்குத் தெரியாத பல கோடித் நீர்த்துளிகள் ஒன்றாகச் சேர்ந்திருக்கும்போது முகில் எனப்படுகின்றது. ஒளி ஊடுறுவும் நீர்த்துளிகளின் ஆழம் அதிகரிக்கும்போது உட்பகுதியின் ஒளி ஊடுறுவும்தன்மை குறைய மேகமானது சாம்பல் நிறமாகக் காட்சியளிக்கின்றது.
இம்மேகக் கூட்டங்களிலுள்ள அணுக்கள் ஒன்றையொன்று உரசுகின்ற போது மின்னூட்டம பெறுகின்றது. இவ்வாறு மின்னூட்ம் பெற்ற முகில்களுக்கு அருகிலே எதிர் மின்னோட்டம் கொண்ட முகில்கூட்டங்கள் வருகின்றபோது கவர்ந்திழுக்கப்படுகின்றன. இப்போது காற்றின்வழி மின்னோட்டம் பாய்கின்றது. இதுவே மின்னலாகத் தெரிகின்றது. இம்மின்சாரம் மின்னலாகப் பூமியை நோக்கி வருகின்றபோதே பல பாதிப்புக்கள் உயிர்களுக்கும் கட்டிடங்கள், மரங்களுக்கும் ஏற்படுகின்றன. இதனையே நமது முன்னோர் மாவிலைச் சக்கரவர்த்தி தன்னுடைய வாளைத் தீட்டுகின்றார் என்பார்கள். அங்கும் போரா என்று சலித்துக் கொண்ட இளமைப்பருவமும் இருந்தது. இக்கேள்வியை வளர்ந்தவர் ஒருவர் இன்று கேட்டபோது இயற்கையின் சில சிறிய நடைமுறைகளை இலகுவாகப் புரிய வைப்பதன் மூலம் அறியாமையை அகற்றலாம், பகுத்தறிவை வளர்க்கலாம் என உணர்ந்தேன்.
புதன், 14 ஆகஸ்ட், 2013
மாரிகாலத்தில் கோடை காலத்தைவிட முன்னமே வானம் இருண்டுவிடுகின்றது
சந்தேகங்கள் பல. அவை தீர்க்கப்பட வழிமுறைகள் உண்டு. சிந்தனை வளர்ச்சிக்கு ஏன் என்ற கேள்வி பயன்தருகின்றது. சிறுவர்களால் கேட்கப்பட்ட பல கேள்விகள் அறியப்படாத பெரியோர்களுக்கும் பயன்தரும் என்னும் வகையில் சிறுவர் பகுதியென இப்பகுதியைக் குறிக்கின்றேன். ஏன்
மாரிகாலத்தில் கோடை காலத்தைவிட முன்னமே வானம்
இருண்டுவிடுகின்றது
வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
“ அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை அணைந்து கொள்! உன்னைச் சங்கமமாக்கு மானிட சமுத்திரம் நானென்ற...
-
திரு! திருந்தாத ஜென்மம் என்பது பல சமூகநலவாதிகள் முடிவு. ஆனால், திருவே என் பாசவிளக்கு பண்புள்ள மகன். என் காலடி மண்ணில் ப...
-
என் மகளின் பதினெட்டாவது வயது பிறந்ததின விழாவிலே என்னால் வாசிக்கப்பட்ட கவிதை. வானுயர் என் விளக்கு நீ என் வயிற்றி...