• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 16 நவம்பர், 2012

    கனிந்துவந்த கார்த்திகை





    ஒலிவடிவம் கேட்க முக்கோணவடிவத்தை அழுத்துங்கள்





                 கனிந்துவந்த கார்த்திகை

    கனிந்துவந்த கார்த்திகையே! உன்னை
    கவிதைப் பெண்ணாள்
    கரங்குவித்து அழைக்கின்றாள்
    கன்னிகைக்கு உன்பெயரோ
    விண்மீனுக்கும் உன் பெயரோ
    வினோதப் பூவுக்கும் உன் பெயரோ
    விளக்கீட்டு மாதத்திற்கும் உன்பெயரோ
    விநாயகன் தம்பி சரவணனை
    விருப்புடன் வளர்த்தவர்கள் உன் பெயர்
    விளங்கி நிற்கும் பெண்களன்றோ

    விரைந்து வந்த கார்த்திகையே!
    விருட்சங்கள் காட்டிடும் வர்ணஜாலங்கள்
    எமக்கு உணர்த்திடும் பனிக்கால வாழ்வதனை
    விருப்புடன் அணிவோம் வெப்பஆடை
    விரைந்து ஏற்றுவோம் வெப்பமூட்டி - உன்
    வருகையின் அச்சமாய் வழிவிடுவோம்

    மரத்துக்கும் உனக்குமென்ன மனஸ்தாபமோ நங்காய் - உன்
    வரவுகண்டு தம் ஆடைகளைக் கழைந்துவிட்டுப்
    போர்வையற்றுக் குளிர் காய்கிறதே
    மார்கழிப் பெண்ணை எட்டிப்பிடிக்க
    மாதங்களுக்குத் தூதாய் வந்தவள் நீயோ
    தன்னைப் போர்க்க விலங்கின் போர்வையை
    உரித்துப் போர்த்தி உடலை மூடி மனிதன்
    உல்லாசமாய் வலம்வர வித்திடும் மாதம் நீயன்றோ
    உன்னில் தொட்டுப் பங்குனி வரையும் - குளிர்
    உத்தரதாண்டம் ஆடிநிற்க
    கனிந்து நீயும் வந்தாயோ
    கவிதைப் பெண்ணாள் வரவேற்க


    8 கருத்துகள்:

    1. ஆஹா... அழகான வர்ணனை... அருமை...

      ரசித்தேன்...

      பதிலளிநீக்கு
    2. மாதங்களில் வசந்தம் பொழியும்
      கார்த்திகைக்கு அழகிய வரவேற்பு
      சகோதரி...
      மனம் இனிக்கும் கவிதை....

      பதிலளிநீக்கு
    3. பனிக் காலத்தை
      பாங்காய் வரவேற்றீர்

      பதிலளிநீக்கு
    4. கர்த்திகையை வரவேற்ற விதமே அருமை.

      பதிலளிநீக்கு
    5. கார்த்திகை நட்சத்திரமே கொட்டுகிறது தங்கள் தளத்தில்.
      அழகான முயற்சி. வாழ்த்துக்கள்.

      பதிலளிநீக்கு
    6. அன்புடையீர்,

      வணக்கம்.

      நல்லதொரு அழகான படைப்பு. பாராட்டுக்கள்.

      தங்களின் வலைத்தளம் பற்றியும்
      தங்களின் ஓருசில பதிவுகள் பற்றியும் இன்று
      நம் “யுவராணி தமிழரசன்” அவர்களால்
      வலைச்சரத்தில் பெரிதும் பாராட்டிப்
      பேசப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளது.

      இணைப்பு இதோ:

      http://blogintamil.blogspot.in/2012/11/2.html

      இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.

      தங்களுக்கு என்
      மனமார்ந்த பாராட்டுக்களும்
      அன்பான வாழ்த்துகளும்.

      அன்புடன்
      வை.கோபாலகிருஷ்ணன்
      gopu1949.blogspot.in .

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...