• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 4 நவம்பர், 2011

    டிக்டிக் டிக்டிக்




                                        டிக்டிக் டிக்டிக் 


    டிக்டிக் டிக்டிக் டிக்டிக் டிக்டிக்
    காலங் காட்டும் கடிகாரம்
    கடுகதியாய் சுழன்று வர
    வேகங்கொள்ளும் வாழ்வின் கணக்கு
    நாளும் ஒன்று இழக்கிறது.


    காலம் என்றும் நிற்பதில்லை
    கனவுபோல் மறைந்து போம்
    நெஞ்சில் கொள்ளும் ஆசைகள் 
    கொஞ்சமும் தங்க விடவேண்டாம்.


    டிக்டிக் டிக்டிக் டிக்டிக் டிக்டிக்
    படபடக்கும் இதயம் என்றும்
    பயத்தின் மிகுதி காட்டிவிடும்
    பழக்கம் இல்லா சூழலிலும்
    தவறு செய்யும் வேளையிலும் 
    துடி துடித்துக் காட்டிவிடும் 


    மனதின் சாட்சி மனசாட்சி
    வாழ்வில் என்றும் அதனாட்சி
    தேடும் உள்ளம் புகழாட்சி
    போடும் வேஷம் நிஜமாச்சு
    போலி வாழ்க்கை விஷமாச்சு.

    டிக்டிக் டிக்டிக் டிக்டிக் டிக்டிக்
    மரங்கொத்தியே! உன் உதடுகளில்
    உரங்கொள் கூர்மை யார் வைத்தார்
    மரங்களின் வலிமை அறிந்திருந்து
    கருவியை உடலில் கொண்டாயே
    பறவையே! உன் படைப்புப்போல்- மனிதப்
    பிறவியின் கருவிகள் அறிவாயோ
    பற்களின் கூர்மை பாhத்ததுண்டா
    நகங்களின் கூர்மை அறிந்ததுண்டா – தற்காப்புக்
    கருவிகள் உடலில் கொண்டும் - மனப்
    பயத்தையும் சேர்த்தே கொள்ளும் 
    வியத்தகு மனிதனும் வாழ்கின்றான்
    வீணராய் உலகில் மடிகின்றான்.

    6 கருத்துகள்:

    1. கடிகாரத்தின் செயலை உயர்வு நவிற்சியாய் கூறி
      வாழ்வை செம்மைப்படுத்தி முயற்சி கொள்ள
      அருமையான கவி படைத்தீர் சகோதரி....

      பதிலளிநீக்கு
    2. //மரங்கொத்தியே! உன் உதடுகளில்
      உரங்கொள் கூர்மை யார் வைத்தார்?//

      அருமையான கவிதை, பாராட்டுக்கள்.

      பதிலளிநீக்கு
    3. கவிதை வாசிக்க வாசிக்க மனசு டிக் டிக் எண்டுது

      பதிலளிநீக்கு
    4. //மனதின் சாட்சி மனசாட்சி
      வாழ்வில் என்றும் அதனாட்சி
      தேடும் உள்ளம் புகழாட்சி
      போடும் வேஷம் நிஜமாச்சு
      போலி வாழ்க்கை விஷமாச்சு.//

      அருமையாக இருக்கு கெளரி.

      பதிலளிநீக்கு
    5. உண்மை.
      போனால் வராது...
      பணம் கொடுத்தாலும் கிடைக்காது.இதன்.
      மதிப்பை அறிந்தவன்
      விண்ணில் பறக்கிறான்..அறியாதவன்
      மண்ணில் தவிக்கிறான்!

      அருமை சகோதரி..வாழ்த்துக்கள்.

      பதிலளிநீக்கு
    6. அருமை அம்மா.
      வாழ்த்துக்கள்.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...