இந்த அற்புதமான இருளில் இயற்கையை வெல்ல ஒரு கோலாகலக் கண்காட்சி. நிலா தன் இருக்கையில் இருந்தபடி மனிதன் அற்புத வண்ணங்களைக் கண்காணித்துக் கொண்டது. நிமிர்ந்து வானத்தைப் பார்த்தேன். மேகக் கூட்டத்திடையே வெட்கித்து மறையும் அந்த நிலாவின் போக்கைக் கண்டேன். சிரிப்பாய் இருந்தது. ஆம் அன்றுதான் 25.09.10 சோலிங்கன் நகரில் வெளிச்சஇரவு ( Lichternacht) தோமஸ்அல்வா எடிசன் கண்டுபிடித்த மின் விளக்குகளை வெல்லும் வண்ணம், பகல் போல் தற்போதைய புதிய கண்டுபிடிப்புக்களின் வண்ணவிளக்குகளின் அற்புதம். வருடாவருடம் இந்நிகழ்வுக்கு என் சங்கமம் எப்போதும் இருக்கும். இரவில் வெளிச்சம் காண யார்தான் விரும்பார்! ஆனால், அந்த வெளிச்சத்தையும் கோலாகலமாக்கும் சோலிங்கன் நகரபிதாவின் ஒத்துழைப்பும் உதவிநல்கும் நிறுவனங்களின் ஒத்துழைப்பும் என்னைப் போன்ற பலருக்கு குதூகல இரவாகத் தானே தோன்றச் செய்யும். கண் பார்க்கும் இடமெல்லாம் வெளிச்சம். கற்பனைக்கு எட்டாத வேலைப்பாடுகள். இத்தனைக்கும் மேல் புற்றீசல் போல் எங்கிருந்துதான் இவ்வளவு மக்கள் இந்த சோலிங்கனுக்குள் நிறைந்தார்களோ! ஆச்சரியம். ஆனால், உண்மை. வாழப்பிறந்தவர்கள் ஐரோப்பியர்கள் என்று அடிக்கடி நான் சிந்திப்பேன். வாய்விட்டுச் சிரிப்பார்கள். வாழ்க்கையைக் கவலை மறந்து அநுபவிப்பார்கள். குடியும் குதூகலமுமாய் சேர வேண்டிய நேரத்திற்குச் சேர்வார்கள். உடலால் உழைக்க வேண்டிய நேரத்திற்கு உழைப்பார்கள். குளிரென்று ஒதுங்குவதும் இல்லை மழையென்று குடை எடுப்பதுவும் இல்லை. வெயிலென்று நிழல் தேடுவதுவும் இல்லை. நினைத்த மாத்திரத்தில் நினைத்ததைச் செய்துவிடுவார்கள். இதனால்த் தானோ என்னவோ இவர்களை வெள்ளைக்காரர் என்கிறோம்.

இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குவாங்க வாங்க அன்புதோழியே!
பதிலளிநீக்குவந்து உங்கள் திறமைகளையும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதோடு எங்களின் திறமைக்கு தூண்டுகோலாய் இருங்கள்.
அன்புடன் மலிக்கா
அனுபவத்தைத் தந்ததால் எமக்கும் நிகழ்வை அறியக் கூடியதாக இருந்தது. நன்றி.
பதிலளிநீக்கு