• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    திங்கள், 18 நவம்பர், 2013

    நன்றி நவிலல்






    என்னுடைய கணவரின் தாயாரின் ஆத்மசாந்திக்கு அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், வள்ளுவர் பாடசாலைநடத்திய  திருக்குறள்   போட்டி நிகழ்வின் போது மௌன அஞ்சலி செய்தவர்களுக்கும், நேரே வந்து ஆறுதல் கூறி உணவுகள் பரிமாறியவர்களுக்கும் மிக்க நன்றியை குடும்பம் சார்பாய்த் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.


     ஜெர்மன் எழுத்தாளர் சங்கம் சார்பாக அம்பலவன் புவனேந்திரன் அவர்கள் எழுதிய கவிதை

    எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்..!

    காற்றுத் திசைமாறுவதை யாரும் தடுத்திட முடியாது
    காலங்களின் கால்களை  கட்டிப்போடுதல் இலாது

    ஏற்றமும் இறக்கமும்  இவ்வுலகில் புதுமை இல்லை
    இழப்புகளையும் இணைவுகளையும்  எவரும் தடுப்பதில்லை


    ஆற்றொணாத் துயரங்கள்  அனைவருக்கும் வந்து போகும்
    அதற்குள்ளே உறைவதால் அனைத்துமே  அடங்கிப்போகும்

    ஆற்றுவதும் ஆறுவதும் அவன்செயல் என நம்பியே
    அடுத்தடுத்த கடமைகளில் அமிழ்ந்திடுதல் சிறப்பே

    தேற்றிடுதலும் தேறிடவைப்பதும் தேவனின் கருணையே
    தேவைகளை அறிந்துதான் தெய்வங்களும் அருளுமே

    காற்றாய்த்  தென்றலாய்க் கருணையினை வீசுவார்
    காலங்களின் ஓட்டத்தில் கவலயினைப் போக்குவார்

    மாற்றங்களைத் தந்திட மன்றாடி வேண்டுகிறோம்
    மாயவனின் கீதைதனை மனங்களிலே ஏற்றுவோம்

    போற்றிப்பேணிய அந்த பொன்னெழில் தாயவளின்
    பூம்பாதம் பற்றியே  பூத்தூவி நாம் அஞ்சலிக்கிறோம்..


    ஜே...சங்க நண்பர்கள் சார்பாக
    அம்பலவன்புவனேந்திரன்..


    2 கருத்துகள்:

    1. தகவல் இதன் மூலம் அறிந்து எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறோம்.
      எல்லோருக்கும் மனஅமைதி உருவாக இறையருள் நிறையட்டும்.
      Vetha.Elangathilakjam.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...