• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 17 மார்ச், 2013

    தன்னிலையறியாப் பெண்ணினமே


         
    கொழுத்த பணத்தில் கொட்டமடிக்கையில்
    கொண்டுவரும் புத்தம்புது வாதங்கள்
    நாற்சந்தி மரத்தடியில் நம்மவர் சேர்ந்திருந்து
    வாதிட்ட வாதங்கள் கொஞ்சமல்ல
    பெண்ணுரிமை பேசிப்பேசி பழங்கதையாச்சு - இப்போ
    பெண்ணிலை வாதமென்ற புதுப்பேச்சு
    புதுப்பேச்சு புகுந்து கொண்டு நடமாடுவதால்
    விடுதலைப் பத்திரமும் விரைவாய் ஏற்கும் 
    விந்தையும் இப்போ புரிந்தாச்சு

    பெண்ணெ!
    பாவேந்தன் பாடிய பெண்ணுரிமை 
    பெருமையன்றோ பெண்ணினத்தின் வாழ்வுக்கு
    பெண்ணே!
    நீ பாடும் பெண்ணிலை வாதம் 
    அழிவன்றோ பெண்ணினத்தின் பெருமைக்கு
    ஆணொன்றும் பெண்ணுக்கு அடிமையில்லை
    பெண்ணொன்றும் ஆணுக்கு அடிமையில்லை
    இயற்கை தந்துவிட்ட தோற்றம்
    இதுவே பெண்ணுக்கு தோஷம்
    வல்லினம் மெல்லினம் இலக்கணம்
    மெல்லினம் பெண்ணுக்கு இலக்கணம்
    தாய்மையெனும் சிறப்புத் தந்த பெருமை
    தகுதியன்றோ பெண்மைக்கு புரிகிறதோ?
    இயற்கை அனைத்தும் பெண்ணாய்க் 
    கண்டு போற்றித் துதித்தான் கவிஞன்
    பெருமையுனக்குச் சேரல்லையா?
    சிவனுக்கு ஒன்று இராத்திரி
    சக்திக்கு ஒன்பது இராத்திரிகள்
    சமயம் காட்டும் பெருமை போதாதா?

    தன்னிலையறியாப் பெண்ணினமே
    கோடான ஆணைக் கோலமாக்குபவளே
    ஒலியான ஆணை இசையாக்குபவளே
    ஓரினமாய் இணைந்து நின்று
    உலகுக்கு வழிகாட்டு
    வேண்டாத வாதங்களால் 
    வீண்பொழுது கழிக்காதே!

    5 கருத்துகள்:

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...