• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    புதன், 17 அக்டோபர், 2012

    தலையீட்டைத் தவிர்க்க (அங்கம் 3)




    ராம் பெற்றோர் ஆசைகளை  வேஷமின்றி நிறைவேற்றினான். ´´பெற்றாலும் சுதன் தேவி பிள்ளை பெறவேண்டும்´´ என்னும் புகழ்மாலையை பிறர் சொற்கோர்வையாய் பெற்றோர்க்குச் சூட்டினான்.  ஐரோப்பியமண்ணிலே அந்நியர் வாழ்வில் மோகம் கொண்ட தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஒரு விநோதமான இளைஞனாகக் காட்சியளித்தான்.´´என்னதான் தோல் வெள்ளையானாலும் நாகரீகத்தில் மேம்பட்டு இருந்தாலும் பண்பாட்டில் பண்பட்ட வாழ்க்கை மேற்கொண்டாலும் தமிழர் வாழ்க்கை முறைக்கு ஈடாக எதுவுமே இல்லை அம்மா´´ என்று தமிழர் கலாசாரம் பற்றி ராம் பெருமையாகப் பேசுவான். தமிழ் பாடசாலை செல்வதானால் தமிழர் கலாசார ஆடையில் பளிச் என்று பலர் பொறாமைக்கு ஆளாவான். ராம் கல்வி, கலைகளில் நாட்டமும் பண்பாட்டில் கட்டுப்பாடும் கொண்ட அன்பான இளைஞன். 

               ஆனால், ராம் ஒரு ஆசையில் நாட்டம் கொணடான். அதில் இருக்கும் உயர்வு கருதி அமெரிக்கா செல்ல பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இசையை ஒரு வருடம் அமெரிக்க மண்ணில் துறைபோக கற்க வேணடும். இசைத்துறையில் இணையற்ற புகழ் சேர்க்க வேண்டும் என்று இரத்தத்தில் ஊறிய பண்பு தனக்குள் தூண்டவே அமெரிக்கா செல்ல ஆயத்தமானான். 12 ம் (யுடிவைரச) வகுப்பு சித்தியெய்தியவுடள் பல்கலைக்கழக நுழைவின் முன் சில மாணவர்கள் தமது விருப்பத்திற்கேற்ப  அயல்நாடுகள் சுற்றிவருவது வழக்கம். விரும்பிய நாட்டில் அந்நாட்டு பிரஜைகளின் வதிவிடத்தில் விருந்தாளியாக வாழ்ந்து வருவதும் வழக்கம். 

                புதியகல்வியை மூளை ஏற்கும் முன் மனதை இலகுவாக்கவும்,  தாம் பெற்ற அநுபவங்களை இதமாய்ச் சுமந்து எதிர்கொள்ளும் உயர் கல்விக் காலங்கள் சுவையாய் கழிப்பதற்காக இச்சுற்றுலாவை இளையவர்கள் விரும்புவர். பெற்றோர் செல்வச்செழிப்பிற்கேற்ப பிள்ளைகள் ஊர்உலா, உலகஉலா செல்வர். 

           ராம் 12ம் வகுப்பை அபாரப்புள்ளிகளால் அசத்தியிருந்தான். தன் திறமையின் பிரகாசத்தை நாட்டுமக்கள் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தளிக்க இசைக்குழு ஒன்றைக் கல்விக்காலத்திலிருந்தே கண்காணித்து வந்திருந்தான். எத்தனை திறமைகள் இப்பிள்ளையிடம் ஒட்டிக் கொண்டிருக்கின்றன என வழமைபோல் அயலவர் பொறாமைக் கண்களிலிருந்து பர்வை வீச்சானது ராமில் கதிர் வீச்சாய் பாய்ச்சப்பட்டிருந்தது. 

              வெளியுலகு கற்றுத்தரும் அநுபவபாடமும் விருட்சமாய் மனதுடன் விரிந்து கிடக்கும் இசையின் தாகமும் ஒன்றிணைய ராம் அமெரிக்கா நோக்கிப் பறந்தான். அமெரிக்க மண் இசை ஆர்வமுடையார்க்கு ஏற்ற இடம். இதனால், ராம் இசையின் திறமை நாளுக்குநாள் வளர்ந்தது. 

             ஒரு வருடம் தனியனாய்த் தன் எண்ணங்களை யார் தடையுமின்றி நிறைவேற்றும் திறமைசாலியாய் பக்குவம் பெற்றான். ராம் விருப்புக்கள் சுயாதீனமாய் சுதந்திரம் பெற்றன. தன் வாழ்க்கையைத் தானே தீர்மானிக்கும் வல்லமை வலுத்தது. எதற்குமே அம்மா, அப்பா இருவர் அநுமதிக்காகவும் காத்திருக்கும் காத்திருப்புக்கள் நேரத்தை வீணடிப்பதாக உணர்ந்தான். ஒரு வருட காலம் அமெரிக்காவில் விரைவாகக் கடந்ததுபோல் ராம் வாழ்க்கை முறையும் விரைவாகவே மாற்றம் பெற்றது.  

    தொடரும்.........

    3 கருத்துகள்:

    1. ஆரம்ப வரிகளில் தமிழர் கலாச்சாரம் பற்றி ராம் தன் தாயிடம் சொன்னது அழகாக இருந்தது.

      ஆனால் இறுதி வரிகளில் ராம் வாழ்க்கை முறையும் விரைவாகவே மாற்றம் பெற்றது, [அதுவும் அமெரிக்காவில்] என்றதும், சற்றே யோசிக்க வைக்குது.

      தொடருங்கள்... என்னதான் ஆகுதுன்னு பார்ப்போம்.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...