• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 9 டிசம்பர், 2011

    கட்டுப்பாடும் சுதந்திரமும்





    உந்தியில் தங்கியபோது
    உந்தியே வரம்பு
    உருண்டதும் உதைத்ததும்
    கருவறையுள் கட்டுப்பாடு
    உதித்ததும் பூமியில் சுதந்திரம்
    உருவாகும் உயர் வாழ்வுக்கு
    மனக் கட்டுப்பாடு
    சந்ததி காத்திடும் தாய்மடி கட்டுப்பாடு
    சரித்திரம் புகழ்ந்திட கட்டாய நிலைப்பாடு
    சிந்துகள் பாடும் சிட்டுக்குருவி வாழ்வில்
    மிஞ்சிடா துலகில் வஞ்சியாய் வாழ்ந்திட
    வாழ்வின் கறை சுமக்க வழி விடாத
    பெற்றோர் கட்டுப்பாடு

    விலங்குகள் சுதந்திரம் காட்டினுள்ளே- அவை
    வீதிக்கு வந்தால் இழப்பது வாழ்வு
    மீன்களின் சுதந்திரம் நீரினுள்ளே- அவை
    நீரைத் தாண்டினால் நிலைக்கா துலகில்

    சொற்சுதந்திரமென நாவடக்க மறந்தால்
    சொல்லுக்கேது சுதந்திரம்
    புலனடக்கம் புரியாதுலகில் தறுதலையாய் வாழ்ந்தால்
    குலநடுக்கம் குலத்தையே அழிக்கும்
    கட்டவிழ்ந்த மந்தைகளாய் மேய்ப்பாரிழந்தால்
    கெட்டழியும் வாழ்வு கெடுத்து விடும் சுதந்திரம்
    வாழ்வை உயர்த்த வழிகாட்டும் சுதந்திரம்
    வானம்பாடியாய் வாழ்வை வளமாக்க வேண்டும்
    சீரழியாது வாழ்வைச் சிறப்பாக்க
    பேணிட வேண்டும் சீரான கட்டுப்பாடு


    01.12.2011 முத்துக்கமலம் இணையத்தில் வெளியானது

    7 கருத்துகள்:

    1. //வானம்பாடியாய் வாழ்வை வளமாக்க வேண்டும்
      சீரழியாது வாழ்வைச் சிறப்பாக்க
      பேணிட வேண்டும் சீரான கட்டுப்பாடு//
      வாழ்வு சிறக்க வழமான கருத்துக்கள்.

      பதிலளிநீக்கு
    2. அழகிய முத்தான சொற்களால் கோர்க்கப்பட்ட
      இனிய கவிதை..

      பதிலளிநீக்கு
    3. கட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்திரமே
      உண்மையான சுதந்திரம் என்பதை
      மிக நேர்த்தியாக விளக்கிப் போகும் படைப்பு அருமை
      தொடர வாழ்த்துக்கள்
      த.ம 2

      பதிலளிநீக்கு
    4. அழகான வார்த்தை செறிவுடன் கூடிய கவிதை

      பதிலளிநீக்கு
    5. சுதந்திரத்தை வரம்பு மீறாமல் நடந்து
      தக்க வைத்து கொள்வது பற்றி அழகாக்
      கூறி உள்ளீர்கள். அருமை. வாழ்த்துக்கள்.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...