• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    செவ்வாய், 29 செப்டம்பர், 2020

    பாசத்தைப் பரிசீலனை செய்வீர்





      காலத்தைச் சிறைப்பிடித்து கணனிக்குள் செலுத்தினாய் 
    நேரமறியா துன்காலத்தை வீணாகத் தொலைத்தாய் 
    தீராத விளையாட்டில் நோயாகிப் போனாய் 
    நிம்மதியில்லா வாழ்வை நீயாக ஏற்றாய் 
     விளையாட்டு வினையானால் வில்லங்கம் சேர்ந்திடும் 
    வித்தகனாகும் உன்வாழ்வு வீணாகிப் போயிடும் 
    பித்தாகிப் போனதனால் பிதாவை தெரியவில்லை 
    சொத்தான சொந்தங்கள் அத்தனையும் புரியவில்லை 
     உறவுகளைக் கொல்வதற்கும் உதவிகளை அழிப்பதற்கும்
     நிறைவான வாழ்க்கையை நிலையில்லா ஆக்கவும் 
    உயர்வுகளின் உன்னதத்தை உன்மத்தம் ஆக்கவும் 
     உன்னால் முடிவதற்கு கணனிக்குள் புகுந்தாயா! 
     
    பெற்றோரே! 

     ஆயிரம் விளையாட்டுக்கள் ஆணித்தரமாக ஆக்கியளித்தார் 
    ஆயுளும் அறிவுமோங்க தமிழர் தரணியாண்டார் 
    ஆட்சியுறு வாழ்வில் மக்கள் சீராய்பெருமையுற்றார் 
    நேசமொடு பண்பும் நிலைத்திட உழைத்திட்டோம் 
     வாரிசுகள் நல்வாழ்வுக்காய் நல்வார்த்தை எடுத்துரைப்பீர் 
     பெற்றபிள்ளை வாழ்வதற்குநம் பெருமைகளை எடுத்துரைப்பீர் 
    கணனிக்குள் கண்வைப்பீர் 
    கண்காணிப்பில் வளர்த்திடுவீர் - வாழ்வு 
    வளம்பெறவே பாசத்தைப் பரிசீலனை செய்திடுவீர் 

     

    2 கருத்துகள்:

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...