• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

    இறுதி நிகழ்வில் தன்னுடைய இறப்பை வெளிப்படுத்தினார்

     

    காலம் கவர்ந்து சென்ற பிரபலங்களில் எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்களும் இணைந்து கொண்டார். பாடுகின்ற போது அவர் இதயத்தில் எத்தனை உணர்வுகளைச் சேர்த்திருப்பார். அத்தனை உணர்;வுகளுக்கும் குரலால் வடிவம் எமக்காகக் கொடுத்தார். மனதுக்குள் கொண்டு வந்து அதனை உணர்ந்து இராகங்களை பரீட்சித்துப் பார்த்து அழகான இனிமையான வடிவத்தை அவராலேயே கொடுக்க முடியும். சொற்களை உச்சரிக்கும் அழகும் பாடலின் பாவங்களை காட்டுகின்ற அழகும் கண்முன்னே காலமெல்லாம் எமக்கு தெரிந்து கொண்டுதான் இருக்கும் என்பது உண்மை. பாலெல்லாம் நல் ஆவின் பாலாமோ பாரிலுள்ள குரலெல்லாம் பாலசுப்பிரமணியம் குரலாமோ என்று சொல்லத் தோன்றுகின்றது. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் என்னும் அந்தக் குயில் தன் குரலை அடக்கிக் கொண்டது. இந்தக் குயிலின் குரல் எமக்கு எப்போதும் கேட்கும். எம்மை விட்டுப் பிரிந்தாலும் இசையாய் ஒலிப்பார். என்று அவரே பாடியிருக்கின்றார். 


    அவருடைய புதிய பாடல்களை நாம் கேட்க முடியாது போகும் அவ்வளவுதான். ஆனால் அவர் எம்மோடுதான் வாழ்ந்து கொண்டு இருப்பார். 

      


    Tokyo தமிழ்சங்கம் நடத்திய இணையவழி விழாவிலே  அவர் பாடிய கடைசிப் பாடல் சாதி மலர் பூச்சரமே சங்கத் தமிழ் பாச்சரமே என்னும் பாடல். கிண் என்ற குரலில் எந்தவித சோர்வையும் குரல் காட்டிக் கொடுக்கவில்லை. 4 சுவருக்குள் வாழ நீ என்ன கைதியா? தேசம் வேறல்ல. தாயும் வேறல்ல. ஒன்றுதான். தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் ஒன்றுதான். கடுகு போல் உன் மனம் இருக்க் கூடாது. கடலைப் போல் விரிந்ததாய் இருக்கட்டும்.  இறக்கப் போகின்றேன் என்று தெரியாது அவர் கூறிய வார்த்தைகள் அவரை அறியாமலே உலகத்திற்கு சைகை காட்டியிருக்கின்றது. வருங்காலத்தில் என்ன நடக்கப் போகின்றது என்று யாருக்கும் தெரியாது. இப்போது நான் இங்கு பாடிக் கொண்டிருக்கின்றேன். என் முன்னே பார்வையாளர்கள் இல்லை. எனக்கப்புறம் எப்படி எல்லாம் நிகழ்வுகள் வரும் என்று எனக்குத் தெரியாது. என்று தனது இறுதிநாளை வெளிக்காட்டினார். இரசிகர்கள், தனக்காகப் பாட்டுக்களை எழுதிய பாடலாசிரியர்கள், இசையமைத்தவர்கள், என்று தன்னுடைய நன்றியைத் தெரிவித்து விடைபெற்றார். இதுவே அவர் நேரடியாக எம்மிடமிருந்து விடைபெற்ற வாசகங்களாக இருக்கின்றன. இயற்கையை நேசிக்கச் சொன்னார். ஆனால், சொன்ன அந்த நல்ல உள்ளத்தையே கொரொனா என்னும் நுண் அரக்கன் தொலைத்துவிட்டான். அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டி  

    போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் என்று அவர் எமக்குச் சொன்ன வரிகளை நினைவு படுத்தி விடைபெறுகின்றேன்.


    3 கருத்துகள்:

    1. அவரது ஆன்மா நற்கதி அடையட்டும்.

      அவர் மறைந்தாலும் அவரது நினைவுகள் என்றும் மறையாது.

      பதிலளிநீக்கு
    2. தேகம் மறைந்தாலும்
      இசையாய் என்றென்றும் நம்மோடு வாழ்ந்திருப்பார்

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...