• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 23 டிசம்பர், 2017

    நத்தார் வாழ்த்து 2017



    விண்வீழ் வெண்பனிபோல் மண்மேல் அவதரித்த
    தண்ணொளி மைந்தனை தரணியில் போற்றுவோம்
    இன்னல்கள் தாங்கியே இறையருள் தந்திட்ட
    இறைவனை நேசிப்போம் அவர்புகழ் பாடுவோம்

    மாட்டுத் தொழுவத்தில் மார்கழி குளிரினில்
    மானிடம் காக்கத் தரணியில் தோன்றிய
    மரியன்னை மைந்தனை பரிசுத்த இயேசுவை
    மனங்களில் ஏற்றுவோம் இறைமைந்தனைப் போற்றுவோம்

    அன்பெனும் மழையில் அகிலமே நனைய
    ஆண்டவன் தோன்றினார், அவனியைத் தாங்கினார்
    செந்தணல் குருதி வெண்ணுடல் தாங்கியே
    எம்துயர் காத்த மைந்தனைப் போற்றுவோம்

    கல்வாரி மலையிலே கல்லடி தாங்கியே
    சிலுவையை ஏந்தினார் முள்கிரீடித்தைத் தாங்கினார் – எம்
    பாவங்கள் நீக்கிய பரிசுத்த ஆண்டவரை
    நாளெல்லாம் போற்றுவோம் இந்நாளிலே கொண்டாடுவோம்



     அனைவருக்கும் நத்தார் வாழ்த்துக்கள் 





























    1 கருத்து:

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...