• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 5 மே, 2017

                     வையகத்தில் வைகாசி
                                     
    காலத்தின் ஓட்டத்தில், உருண்டு செல்லும் வருடக்கணக்கில், மீண்டும் ஒரு வைகாசி வாழ்க்கையின் பக்கத்தில் வந்து நிற்கின்றது. சென்ற காலங்களை மீட்டிப் பார்க்கும் வேளையிலே அதி அற்புதமான மாதமாய்த் தன்னைக் காட்டி கண் விழிக்க வைக்கின்றது. வைஸ்ணவர்களால் மாதவ மாதம் என்று கருதப்பட்டு சிறப்புப் பெறுகின்றது.

             காலங்களை இளவேனிற்காலம், முதுவேனிற்காலம், கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக் காலம் என எம் முன்னோர்கள் பிரித்துப் பார்த்த போது, வைகாசி மாதம் என்பது இளவேனிற்காலமாய்க் காலப்பரப்பில் வசந்தகாலமாய் வளம் காட்டி நிற்கின்றது. பட்டமரங்கள் துளிர்க்கக் காண்கின்றோம். மெல்லிய தளிர்களில் பச்சைப்பசேலென அரும்பி நிற்கும் இலைகளையும், வண்ணக் கோலங்காட்டி புன்னகை வீசும் மலர்க் கொத்துக்களும், வகைவகையாய் அழகு காட்டும் ரூலிப் மலர்களின் வசந்த வருகையும் இக்காலத்தின் சொர்க்கங்கள் அல்லவா! அதிகூடிய குளிருமில்லை. அதிகூடிய வெப்பமுமில்லை. சில்லென்ற குளிரும் தேவையான வெப்பமும் வளரும் பயிர்களைச் சுறுசுறுப்பாக்கும் காலநிலை. தடிப்பான மேலங்கிகள் பெட்டிகளுள் அடங்க மெல்லிய மேலங்கிகளுக்கு வேலை கொடுக்கத் தொடங்கும் காலம் அல்லவா!

              காலங்கள் புத்துளிர் புனைவது போலவே வாழ்க்கையின் வசந்த பொழுதுகளும் இப்பருவகாலத்திலேயே முகிழ்கின்றது. இருமனங்கள் இணைந்து சட்டரீதியாக திருமண பந்தத்தில் இணைகின்ற காலங்கள் இவ்வசந்த காலங்களே.வைகாசி மாதத்தில பந்தல் ஒன்று கட்டி ரெண்டு வாழைமரம் வைக்கப்போறேண்டிஎன்ற பாடல் கேட்டிருப்பீர்கள். பொதுவாகவே தமிழர்கள் திருமணநாளை அநேகமாக வைகாசி மாதத்திலே வைப்பது வழக்கமாகப்படுகின்றது. தமிழர்கள் மட்டுமா?   ஜேர்மனியர்கள் கூட தமது திருமணநாளை இந்த இளவேனிற்காலத்திலேயே தெரிவுசெய்கின்றனர்.

              வாழ்க்கையின் ஆன்மீகப் பற்றுள்ளவர்களுக்குக் கூட இக்காலம் பொற்காலமே. சரவணப் பொய்கையிலே சிவபெருமானுடைய நெற்றியில் இருந்து வந்த தீப்பொறிகளால் தோன்றிய 6 குழந்தைகளை உமையாள் ஒன்றாய்ச் சேர்த்து ஆறுமுகக்கடவுளாய் உருவாக்கிய தினமும் வைகாசி விசாக தினமே ஆகும்.

                அன்புதான் இன்ப ஊன்று என்று உலகத்திற்கே அன்பைப் போதித்து புலாலுண்ணாமையை வலியுறுத்தி, செல்வச்செழிப்பை துச்சமெனக் கருதி வெறுத்து, உலகப்பற்றைத் துறந்து போதிமரத்தடியில் ஞானம் பெற்ற கௌதம புத்தர் நேபாள லும்பினி என்னும் இடத்தில் பிறந்தது இவ்வைகாசி மாதத்து பௌர்ணமி விசாகதினத்திலேயே ஆகும். வைகாசி மாத விசாக தினத்திலேயே. அவர், பிறந்தது, ஞானம் பெற்றது, இறந்தது அனைத்தும் நடைபெற்றுள்ளது.

                 பொதுவாகவே மேமாதம் என்றவுடன் எம் எண்ணத்தில் முதலில் தோன்றுவது விடுமுறை, தொழிலாளர் தினம். அதுவே எமக்கு மிக அவசியமானது என்பாரும் உண்டு. 18 ஆம் நூற்றாண்டு இறுதியிலும் 19ம் நூற்றாண்டு ஆரம்பப்பகுதியிலும் வளர்ச்சியடைந்த நாடுகளிலிலுள்ள தொழிலாளர்கள் 8 மணிநேரம் வேலை கேட்டு நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தின் விழைவே இன்றைய உலகலாவிய ரீதியில் நடக்கும் மேதினக் கொண்டாட்டமும் அதன் மூலம் எமக்குக் கிடைக்கும் விடுமுறைதினமும் ஆகும். ஆனால், கனடா, அமெரிக்கா செப்டெம்பர் மாத முதல் திங்கட்கிழமையில் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்றன.

                 எனவே காலங்களில் அவள் வசந்தம் என கண்ணதாசன் பெண்ணை வர்ணித்துப் பாடிய பெருமை இப்போது புலப்படுகின்றது அல்லவா!

           


    5 கருத்துகள்:

    1. பெயரில்லா5 மே, 2017 அன்று AM 9:32

      இனிய வாழ்த்துகள்.
      புது வலைப்பக்கமாக உள்ளதே என்று பேச
      தொலைபேசி எடுத்தேன பிடிப்புது சிரமமோ

      வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.

      பதிலளிநீக்கு
    2. வைகாசி மகிமை அருமை
      சிறந்த படைப்பு

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...