• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 14 மே, 2017

                                தாய் மடியின் சுகம்




    வாழ்வின் ஒளிவிக்கே எனை வாழவைத்த விழிச்சுடரே
    வார்த்தைகளின் சத்தியமே நான் வாழுகின்ற மனச்சுடரே
    கூர்மையான சொற்சுடரே நற்குணந் தந்த சுடர்விளக்கே
    சீர் பெற்ற சிந்தனையே என் சிறப்புக்குள் மிளிர்பவளே

    உறவெல்லாம் இணைத் தெடுத்து பிரிவற்ற வாழ்வளிப்பாய்
    உண்ணுகின்ற வேளையெலாம் உனை மறவா நினைவளிப்பாய்
    தாயென்ற பெயர் கொண்டு தன்னிகரிலாப் பாசமளிப்பாய்
    தாயே உனைப்போலொரு தெய்வம் நானுந்தான் தேடுகிறேன்.

    சொற்களிலே தேனிருக்கும் அதில் சொல்லிவைத்த பொறுப்பிருக்கும்
    வற்றிவிடாக் கடமையிலே எம் வாழ்க்கையின் ஒளியிருக்கும்
    கற்றுத்தந்த பாடத்திலே எம் கண்ணிய வாழ்விருக்கும்
    பெற்றுக்கொண்ட போதனையில் எம் புண்ணிய செயலிருக்கும்

    கட்டுக்கட்டாய்ப் பணமிருந்தும் எம் தாயன்பு போலாமோ
    சொத்துச் சொத்தாய்ச் சொந்தமிருந்தும் தாய்ச்சொந்தம் போலாமோ
    கட்டுக்கடங்கா சுகமிருந்தும் தாய்மடியின் சுகம் போலாமோ
    விட்டுவிட்டே சென்றாலும் எம்மனம் விட்டுச் செல்லுமோ

    தொட்டிலிலே போட்டஅன்பை பெட்டியிலே அனுப்பி வைத்தோம்
    தோளினிலே போட்ட பாசமதை காட்டினிலே கொண்டெரித்தோம்
    கட்டியணைத்த  நேசமதை காட்சிப் படமாய் ஆக்கிவிட்டோம்
    காலமெல்லாம் கண்ணீர் தேங்கி கண்ணுக்குள்ளே கட்டிவிட்டோம்


    அன்பென்றால் அது அம்மா. அந்த அம்மாக்கு மகுடம் சூட்டும் இவ் இந்நாளில் அனைத்து அன்னையர்க்கும் அன்னையர்தின  வாழ்த்துக்கள்

    3 கருத்துகள்:


    1. உண்மையை உணர்த்தும்
      உருக்கமான வரிகள்

      அன்னையர் நாள் வாழ்த்துகள்

      பதிலளிநீக்கு
    2. அன்னையர் தின வாழ்துக்கள்க்கா

      பதிலளிநீக்கு
    3. அன்னையர் தின வாழ்த்துக்கள் சகோதரியாரே

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...