• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 2 ஏப்ரல், 2016

    முட்டாள் முட்டாள் ஏப்ரல் முட்டாள்

                

    ஏப்ரல் மாதம் முதலாம் திகதி அடுத்தவரை முட்டாளாக்கிப் பார்ப்பதில் அளவில்லா ஆனந்தம் கொள்ளுகின்றோம். எப்படி இப்படி ஒருநாளைத் தெரிவுசெய்து அடுத்தவருக்கு அதிர்ச்சி கொடுத்து, அழவைத்து அதன்பின் சிரிக்கவைக்கும் விளையாட்டு அரங்கேறியது? காரணமில்லாது எதுவுமில்லை. எனவே நான் அறிந்ததை இப்பதிவில் அறியத் தருகின்றேன். 

               ரோமானியர்கள் தமது நாட்காட்டியின்படி ஏப்ரல் 1ம் திகதியையே புத்தாண்டு தினமாகக் கொண்டாடினார்கள். இந்நாளிலே கடவுளுக்கு பலி கொடுத்து, அன்பளிப்புக்கள் வழங்கி, கோலாகலக் கொண்டாட்டமாக விருந்துகள், ஆடல் பாடல் என்று ஆhப்பாட்டமாகக் கொண்டாடினார்கள். ஐரோப்பா முழுவதும் ஏப்ரல் முதலாம் திகதியையே புதுவருடமாகக் கொண்டாடினார்கள். 

               பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த போப் கிரகோரி என்பவர் ஜனவரி 1ம் திகதியே புதுவருடம் கொண்டாடப்பட வேண்டும் என்று 1562ம் ஆண்டு அறிவித்தார். ஆனால், இதனை ஏற்றுக் கொள்ளாத மக்கள் ஏப்ரல் முதலாம் திகதியையே தொடர்ந்து புதுவருடமாகக் கொண்டாடினார்கள். 1700 இல் ஜேர்மனி, நோர்வே, டென்மார்க், போன்றவையும், இங்கிலாந்து 1752 இலும், ஸ்கொட்லாந்த் 1660 இலும், ஜனவரி முதலாம் திகதியை புதுவருடமாக ஏற்றுக் கொண்டன. 

            தொடர்ந்து ஏப்ரல் 1ம் திகதியைப் புதுவருடமாகக் கொண்டாடியவர்களை முட்டாள்கள் என்று கருதியதனால் இத்தினம் முட்டாள்கள் தினமாகப்பட்டது. இன்றைய தினம் பிரான்ஸ் நாட்டில் ஒரு கேலிக்கை என்னவென்றால், கடதாசியில் மீன் கீறி வெட்டி  அதனை நண்பர்கள் முதுகில் ஒட்டிவிடுவார்கள். முதகில் மீனுடன் திரிபவர்களை ஏப்ரல் மீன் என்று கேலி செய்வார்கள். 

    அப்படியென்றால் சித்திரை வருடப்பிறப்பைக் கொண்டாடும் நாங்கள்????? 

    2 கருத்துகள்:

    1. அரிய தகவல் அறிந்தேன் சகோ நன்றி

      பதிலளிநீக்கு
    2. வணக்கம்...

      இரண்டு நாட்களுக்கு முன்னர் என் மகன் ஏப்ரல் முட்டாள் காரணத்தை கேட்டான்... இணையத்தில் தேட நினைத்திருந்தேன்...

      இதோ உங்கள் மூலம் அறிந்துக்கொண்டேன்... அறியாத தகவல் !

      நன்றி
      சாமானியன்

      எனது புதிய பதிவு " முடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 1 "
      http://saamaaniyan.blogspot.fr/2016/04/1.html
      தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...