• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    புதன், 11 பிப்ரவரி, 2015

    பனித் துளியும் உலகியலும்

       


    பஞ்சுப்பொதி யுடைத்து பால்வெளி வீதிநின்று
    பாருலகு காணவென்று பறந்து வந்த பனிக்குழாம்கள் 
    விண்ணெங்கும் பரந்து வீதியெங்கும் படுக்கை போட்டு
    வீடுகளின் கூரைகளில் ஆடைகளாய் அலங்கரித்து
    விருட்சங்களின் மேனிகளை வெள்ளாடையாய்ப் போர்த்தி
    இலையிழந்த கிளைகளிலே இன்பமாய் அமர்ந்திருக்கும்
    நிலையில்லா அழகை ரசிப்பதற்கு ஆயிரங் கண்கள் போதாது

    பூமியிலே பிறப்பெடுத்த பச்சைக் குழந்தையென 
    பாவங்கள் படியாத பரிசுத்த வடிவு கொண்டு
    பறந்து வரும் பனிக்குழாம்கள் வீதிக்கு வந்தவுடன்
    சகதியும் சேறுமாய் சாக்கடை அசுத்தமாய் 
    உருமாறி உருக்குலைந்து அருவருக்கும் தோற்றமாய்
    உருமாறும் தோற்றமாம்போல் மானுட வாழ்க்கையும்
    உருவாகும் போது உன்னதமாய் மாசுமறுவற்றிருக்கும்

    பொல்லாத பூமியிலே பொன்னெனப் பிறந்தவுடல் 
    பூமிக்கு விலக்காகி வாழ்வுக்கு வஞ்சனையாகி
    பொல்லாங்கு வாழ்க்கையிலே புகழுக்காய் பொய்யுரைத்து
    நிலையில்லா வாழ்வையெண்ணி பேராசை மிகக்கொண்டு
    முறையற்ற செயல்களினால் குறையுற்ற பணிசெய்து
    அடுத்தவரை ஏமாற்றி அவருழைப்பில் குளிர்காயும்
    மானிடப் பிறப்பும் பனியழகுபோல் மாறிவிடும்



    6 கருத்துகள்:

    1. மிகவும் அருமையான ஆக்கம். படிக்கும் போதே பனித்துளி மேனியில் பட்டதுபோல என்னை சிலிர்க்க வைத்தது. :)

      //அடுத்தவரை ஏமாற்றி அவருழைப்பில் குளிர்காயும்
      மானிடப் பிறப்பும் பனியழகுபோல் மாறிவிடும்.//

      அருமை. மிக அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

      பதிலளிநீக்கு
    2. அருமையான வரிகள் சகோ பாராட்டுகள்.
      எமது ஜெர்மனி பதிவு காணவும்.

      பதிலளிநீக்கு
    3. வணக்கம்
      உண்மையான வரிகள்... நன்றாக உள்ளது இரசித்தேன்.பகிர்வுக்கு நன்றி
      ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: காதலும் காவியம்படைக்கட்டும்: என்பக்கம் கவிதையாக வாருங்கள்.

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      பதிலளிநீக்கு
    4. Super teacher. சந்தம் எல்லாம் நல்லாயிருக்கு.நிலை மாறும் பனித்துளியை மனிதப்பிறப்போடு ஒப்பிட்ட விதம் அருமை. Finishing is as always in your own style.

      பதிலளிநீக்கு
    5. ///முறையற்ற செயல்களினால் குறையுற்ற பணிசெய்து
      அடுத்தவரை ஏமாற்றி அவருழைப்பில் குளிர்காயும்///
      நன்று சொன்னீர் சகோதரியாரே
      இதுபோல் நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...