• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 28 பிப்ரவரி, 2015

    எண்ணத் திடம் சுடராய் மிளிரட்டும்


    உயிரைத் தினமும்  குடித்திடும்
    உடனிருந்தே கொல்லும்  நோய்
    வெளியே இருந்து வரும் மருந்தே - உன்
    உடல் நோயைத் தீர்க்கும்

    இடியாய் வரும் துன்பமும்  ஒருநாள்
    மழையாய் மறுதலிக்கும்
    இன்பமும் துன்பமும்
    இணைவதுதான் இவ் வாழ்க்கை
    இழந்துவிட்ட  இன்பம்
    இணைகள் சேர இணைந்துவிடும்

    பகிர்ந்தளிக்கும் துன்பம்
    படிதாண்டி ஓடிவிடும்
    எண்ணி எண்ணி மாய்வதல்ல
    இவ் வாழ்க்கை
    எதிர்நீச்சல் போட்டுவிடு
    எண்ணமதைச் செயல்படுத்து

    எள்ளிநகை யாடிட இதுவல்லோ நேரம்
    எடுத்து வைக்கும் காலடிகள்
    ஏற்றத்தைக் காட்டிவிடும்
    பனிகாலம்  உறங்கும் மரம்
    கோடையிலே குதூகலிக்கும்
    கரை வந்த அலை கடல் நோக்கி
    மீண்டும் திரும்பிவிடும்

    கன்னத்துக் கரம் கடுதியாய் விலகட்டும்
    எண்ணத் திடம் சுடராய் மிளிரட்டும் 

    2 கருத்துகள்:

    1. ''..பகிர்ந்தளிக்கும் துன்பம்
      படிதாண்டி ஓடிவிடும்
      எண்ணி எண்ணி மாய்வதல்ல
      இவ் வாழ்க்கை..''
      இந்த மனநிலை வாழ்வை மறுபடி துளிர்க்க வைக்கும்
      பதிவு நன்று.
      பணி தொடரட்டும்.

      பதிலளிநீக்கு
    2. அற்புதமான கருத்துடன் கூடிய
      அழகான அருமையான கவிதை
      பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...