• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வியாழன், 26 டிசம்பர், 2013

    சொர்க்கம் எங்கே



          


    ஆணே ஜாக்கிரதை உன் கடிவாளமோ  பெண்ணின் கையில்
    உடல்பலம் உன்னிடம் மனபலம் பெண்ணிடம்
    உடல் பலம் ஒருநாள் குன்றிப்போம்
    மனபலம் குன்றுவதில்லை புரிந்துகொள்
    உன்  அருகே அவள்  இருந்தால் நீ அழகு
    அவளின்றி நீ செல்லும் விழாக்கள் அழகோ சொல்
    அவளின்றி நீ வாழும் இல்லமும் அழகோ சொல்
    தூண்டி விளங்கிடும் விளக்குப் போல்
    உலகில் நீ விளங்கிட தூண்டுபவள் அவளே – உன்னைத்
    துலங்கச் செய்பவள் அவளே  
    பெண்ணின் திறம் குறைந்திடில்  
    உந்தன் நடையும் நிமிருமோ சொல்
    அழகாய் இருப்பாள் அழகைக் கொடுப்பாள்
    அறிவாய் இருப்பாள் அறிவைக் கொடுப்பாள்
    நிலையாய்  உன் பெயர் உலகில் நிலைத்திட
    உனக்காய் வாரிசை திடமாய்ச் சுமப்பாள்
    சுற்றம் சேர்ப்பாள் சொந்தம் காப்பாள்
    இயங்கா உன்னை இயங்க வைப்பாள்
    வற்றாத கடலென வாழ் இன்பம் தருவாள்
    தன்னைத் தாழ்த்தி உன்னை உயர்த்துவாள் – நீ
    தேடிப்பெற்ற செல்வம் அவளே – உன்னைத்
    தாங்கி நிற்கும் பூமியும் அவளே
    பொறுமையும் பண்பும் புகழிடம் கொண்டதால்
    பூமியை விஞ்சியும் வாழ்ந்திடத் துணிவாள் – அவள்
    பூகம்பமாய் வெடித்துப் பொங்கி எழுந்தால்
    பூமியில் நீயும் வாழ்ந்திடத் தகுமோ
    புழுதியில் விழுந்து சாக்கடையாவாய்  
    புரிந்து கொண்டு பரிந்து வாழ்ந்தால் – இப்
    பூமியே உனக்கு சொர்க்கம் ஆகும்


    4 கருத்துகள்:

    1. -///உடல்பலம் உன்னிடம் மனபலம் பெண்ணிடம்
      உடல் பலம் ஒருநாள் குன்றிப்போம்
      மனபலம் குன்றுவதில்லை புரிந்துகொள்///
      அருமை சகோதரியாரே

      பதிலளிநீக்கு
    2. அவளின்றி அணுவும் அசையுமோ ?
      அருமை. பெருமை.

      பதிலளிநீக்கு
    3. அருமை... வரிகள் பெருமை...

      வாழ்த்துக்கள்...

      பதிலளிநீக்கு
    4. இத்தனை அவளும் துவளாது நிமிர ஓரு
      உத்தம ஆணன்றோ தேவை.
      நல்ல கருத்தகள்.
      இனிய வாழ்த்து
      Happy new year 2014.
      வேதா. இலங்காதிலகம்.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...