• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    புதன், 18 டிசம்பர், 2013

    வாழ்க்கைப் பாடம்




    மனிதர்களுக்குத் தவிர்க்கமுடியாத ஒன்று உண்டென்றால், அது வாழ்தலே. எவ்வித ஈடுபாடும் இல்லாமல், எம்மை அறியாமலே பெறுவது எது என்றால், அது அநுபவமே. அநுபவம் என்றால், என்ன என்று ஒருவன் ஒரு துறவியிடம் கேட்டானாம், அவரும் அநுபவித்துப்பார் என்றாராம். எமக்குள்ளே நுழைந்து எதிர்பார்க்காமல் எம்மிடம் வந்து இணைந்துகொள்ளும் அநுபவத்தை நாம் வாழ்ந்து பார்த்துத்தான் உணரமுடியும். அதேபோல் வாழ்க்கையை வாழ்ந்தே ஆகவேண்டும். துன்பத்தைக் கண்டு துவண்டுவிடுகின்றீர்களா? அதனால்தானே இன்பத்தின் இனிமையை உணருகின்றீர்கள். இரவு தோன்றும் போதுதானே பகலின் மேன்மையை நாம் உணருகின்றோம். குளிர்காலம் வருகின்றபோதுதானே கோடை காலத்தின் மேன்மை உணரப்படுகின்றது. வெயிலில்தானே நிழலின் அருமை புரிகின்றது. பாவங்கள் தோன்றும் போதுதானே மனிதாபிமானம் வெளிப்படுகின்றது. நோயின்போதுதானே உடல்நலத்தின் சுகம் புரிகின்றது. 

            எனவே, வாழ்க்கை வாழ்வதற்கே. துன்பத்தைக் கண்டு துவண்டுவிடாமல் நல்லதோர் அநுபவப்பாடம் கற்ற உணர்வுடன் மனதைத் திருப்திப்படுத்தி வாழ்க்கையின் இனிமையை இறப்புவரைத் தேடிக் கொண்டே இருப்போம். வாழ்வின் சிக்கல்களை பிறர் எடுத்துக் கூறும்போது யாருக்குமே அதன் தாக்கம் புலப்படாது. நோயின் தக்கத்தைப் போல அதை அநுபவித்துப் பார்க்கும் போதுதான் உண்மை புரியும். எனவே தான் அநுபவம் சொல்லிப்புரிவதில்லை. அநுபவித்துப் புரியவேண்டும் என்னும் கருத்து இருக்கின்றது. இதுவே எமது வாரிசுகள் எம்மைக் கலங்கவைக்கும்போது எமது அநுபவத்தில்தான் சொல்கின்றோம் என்றால், அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. எமது வயது வருகின்றபோது அவர்களாகவே உணர்ந்து கொள்வார்கள். 


    வாழுகின்ற வாழ்க்கை சுகந்தமோ சுமையோ சுகமாக ஏற்றுக்கொள்ளுங்கள். 

    இன்பமும் துன்பமும் இணைந்த வாழ்க்கைப் பாதையில் நீரோடைபோல் வளைந்து கொடுத்துச் சமாளித்து கடந்தது செல்லுங்கள். 

    2 கருத்துகள்:

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...