• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

    மனக்கோலங்கள்



                   
    என் குரலில் கவிதை கேட்க பச்சை பட்டனை அழுத்துங்கள்





    நீலத்திரை வானிலங்கே வண்ணக்கோலங்கள்
    வானம்பிளந்து வந்துபோம் மின்னல்கோலங்கள்
    கர்ப்பிணிமேகம் கார்சுமக்கும் பஞ்சுக்கோலங்கள்
    கருந்துகிலின் வெள்ளிக்கல்லாய்த் தாரகைக்கோலங்கள்
    மாசற்ற மேடைக்கு கோலங்கள் மாயங்காட்டுதங்கே
    மறுவற்ற மனதாய் மடிவிழுந்த மழலைக்கு
    மனக்கோலம் மறையாது வரைந்து பதியுமங்கே
    மனம்போட்ட கோலங்கள் மறைவது கிடையாது
    கடல்விழு பொதியாகிக் கிடக்குமாங்கே
    விடைபெற்ற கோலங்கள் புள்ளிகளை விடுமாங்கு
    விடைதேடிப் பிணைத்தெடுக்க விளக்கம் புரியுமங்கு
    செடியுயர்ந்து மரமானால் நிலம் மறந்து போகாது
    அடிபதித்த அறிவு அடிச்சுவடு மறக்காது
    வரைந்துவிட்ட மனக்கோலங்கள் மறவாது பதிவாகும்

    10 கருத்துகள்:

    1. கோலங்களைப்பற்றி வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

      கடைசிவரியான் வரைந்து விட்ட மனக்கோலங்கள் மறவாது பதிவாகும் என்று மறக்காமல் சொல்லியுள்ளது அழகோ அழகு.

      பாராட்டுக்கள்.

      பதிலளிநீக்கு
    2. அருமையான கவிதை.
      வாழ்த்துகள்.

      பதிலளிநீக்கு
    3. //மனம் போட்ட கோலங்கள் மறையாது,
      அடி பணிந்த அறிச்சுவடு மறக்காது.//

      மிகவும் அழகான வரிகள்.
      சிறப்பான கவிதை.

      பதிலளிநீக்கு
    4. மனக்கோலங்கள் மாக்கோலங்களல்ல.
      மறக்கவியலாக்கோலங்களின் வண்ணங்கள் நன்று.
      இனிய வாழ்த்து.
      வேதா. இலங்காதிலகம்.

      பதிலளிநீக்கு
    5. அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (22.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுகிறேன். நாளைய 22.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...