• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 27 ஜனவரி, 2013

    காலங்கரைகிறது




               
    தாயின் மடியில் தலை வைத்து
    தாலாட்டுச் சுகம் கண்டு
    சேயாய் உறங்கிய காலமெல்லாம்
    கரைந்துதான் போனதின்று
    தேனாகப் பேசி தேனீக்களய்த்
    தெருவெல்லாம் மகிழ்ந்தின்புற்ற
    காலமெல்லாம் திசைமாறிப் போனதின்
    தொடந்து வந்த தொடரூந்தில்
    விடைபெற்ற பெட்டிகள்போல்
    கடந்துவந்த பாதையில்
    கழன்ற உறவுகள் ஆயிரமாயிரம்
    நிலைபெற்ற நினைவுகள் தினம்தினம்
    நிலையாக மனதில் அலைமோதும் - காலமோ
    சில்பூட்டிச் சிறப்பாய்ப் பறக்கிறது
    நீரினுள் உப்புப் போல்
    கரைகிறது கண்முன்னே
    சிறையிருந்த பிரமன் நினைத்தாலும்
    முறையாய் யாகம் செய்தாலும்
    கரையும் காலம் நிலைப்பதில்லை
    விரையும் ஆயுள் குறைவதில்லை
    நிலையில்லா உலகவாழ்வதனில் - மக்கள்
    நினைவில் சிலையாய் வாழ
    தரமான செயல் செய்ய வேண்டும்
    தரமான செயல் செய்தேயாக வேண்டும். 


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...