• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    திங்கள், 21 ஜனவரி, 2013

    எண்ணத்திடம் சுடராய் மிளிரட்டும்


           
    உயிரைத் தினமும் குடித்திடும்
    உடனிருந்தே கொல்லும் நோக்காடு
    இடியாய் வரும் துன்பம் - ஓர்நாள்
    மழையாய் மாறிடுமே
    இன்பமும் துன்பமும் இணைவதுவே
    இயல்பான இல்வாழ்க்கை
    இழந்துவிட்ட இன்பமது
    இணைகள் சேர ஒன்றிடுமே
    பகிர்ந்தளிக்கும் துன்பம் 
    படிதாண்டி ஓடிடுமே
    எண்ணி எண்ணி மாய்வதல்ல
    இல்வாழ்க்கை
    எதிர்நீச்சல் போட்டுவிடு
    எண்ணமதை செயல்படுத்து
    எள்ளிநகையாடி உதறிவிட
    இதுவல்லோ நேரம்
    எடுத்து வைக்கும் காலடிகள்
    ஏற்றத்தைக் காட்டிவிடும்
    பனிகாலம் உறங்கும் மரம்
    கோடயில் குதூகலிக்கும்
    கரை வந்த அலை 
    கடல் நோக்கி மீண்டுவிடும்
    கன்னத்துக் கரம் கடுதியாய் விலகட்டும்
    எண்ணத்திடம் சுடராய் மிளிரட்டும்.

    1 கருத்து:

    1. விளக்கு சுடராய் ஒளி விட்டுப் பிரகாசிக்கிறது கவிதை !

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலக்கும் உணர்வு

        காதல் என்பது ஒரு மனஉணர்வு. இதைக் கடந்து யாரும் வாழ்க்கையில் பயணிக்க முடியாது. இதனைத்தான் ‘’காதல் என்பது மாயவலை சிக்காமல் போனவர் யாரு...